Tuesday, May 27, 2008

எனது நண்பனுக்கு திருமண வாழ்த்து...



சு
கமான சுமைகளை சுமக்கப் போகும்
எங்கள் அருமை நண்பர்களே..! - ஈ
ரேழு ஜென்மங்கள் நிலைத்திருக்கும் திருமண
பந்தத்தில் இணையவிருக்கும் நல் இதயங்களே..!
ஷ்டமும் கஷ்டமும் நிறைந்தது வாழ்க்கை
அதில் இனிமையைக் காண்பது உங்கள் வேட்கை..!

ட்டுப்பாடுகள் நிறைந்த இச்சமூகத்தில்
புரட்சி மணம் செய்கின்ற வைரங்களே..!
வினைகள் பல உண்டு திருமண வாழ்க்கையில்
விட்டுக்கொடுத்தும், தட்டிக் கொடுத்தும் வாழ்ந்தால்
தாழ்வில்லை உங்கள் வாழ்வில்..! - என்றென்றும்
தொடரட்டும் உங்கள் பந்தம்... வாழ்க நீவீர்..!

-அன்பு நண்பா... உன் திருமண வாழ்வில் உன்னத நிலையை அடைய எனது நல்வாழ்த்துகள்..!



என்றென்றும் நட்பு'டன்'

மோ. கணேசன்.

(எனது நண்பரின் பெயர் சுரேஷ். அவரது மனைவியின் பெயர் கவிதா. நான் எழுதிய வாழ்த்து மடலில் இவர்களிருவரின் பெயரும் முதலெழுத்தாக வரும்படி எழுதியிருக்கிறேன். கண்டுபிடித்தாயிற்றா...)

Thursday, May 08, 2008

எனது முதல் வசன கவிதை!

(மகாகவி பாரதியார் எழுதிய வசன கவிதைகளைப் படித்து இன்புற்ற நான்.., என் மனதில் தோன்றியதை வசன கவிதையில் எழுத முற்பட்டதின் முதல் முயற்சி இந்த 'ஏற்றத்தாழ்வு என்னும் பிணி' )

ஏற்றத்தாழ்வு எனும் பிணி

பிரபல மருத்துவர் அவர்...
பிணிகளைத் தீர்ப்பதில் வல்லவர்
அரசு மருத்துவமனையில்
பணியாற்றுபவர்...
பணி நேரம் போக தனியாகவும்
மருத்துவம் பார்ப்பவர்...

அரசு மருத்துவ மனையில்
அமர்ந்திருந்த
மருத்துவரிடம் வந்தார்
ஓர் ஏழை...

என்னென்று வினவினார்
மருத்துவர்

ஐயா...
வயிற்றில் சுரீரென்று வலி
வாயினில் புண்...
தாளமுடியவில்லை
பிணி நீக்கவேண்டும் ஐயா...

மருத்துவர் தன்
பரிசோதனைகளைச் செய்தார்...
உடலில் உள்ள குறைகளை
ஓரளவு கண்டறிந்து கொண்டபின்
ஏழையிடம் வினவினார்...
ஐயா நேற்று என்ன சாப்பிட்டீர்..?

ஒன்னும் சாப்பிடலீங்க
சாயங்காலம்தான்
கொஞ்சம் கஞ்சி குடிச்சேன்...

அதற்கு முதல் நாள்
என்ன சாப்பிட்டீர்..?

காலையில் கொஞ்சம்
பழையது சாப்பிட்டனுங்க...
அப்புறம் ராவுப்பொழுதுக்கு
கொஞ்சம் கஞ்சிங்க...

பிணிக்கு காரணம் புரிந்தது
சரியான ஆகாரம் அந்த
ஏழைக்கு இல்லை...
அதனால் வந்த பிணி இது என்று...

தேவையான மருந்துகளை
குறித்துக் கொடுத்து...

ஐயா உணவு உண்டபின்
இந்த மருந்துகளை
உட்கொள்ளுங்கள்...

சாப்பிட்டதுக்கு பொறவு
மாத்திர சாப்பிடனும்னு
சொல்றீங்க சாமி...
அந்த சாப்பாடுதாங்க
என் வீட்ல பிரச்சினை...
உழைக்கத் தயரா இருந்தும்
வேலை வெட்டியில்ல...
அதனால
எங்க சட்டியும் காயுது
வட்டியும் காயுது...

அதனாலதாங்க உங்க
வயிறும் இப்ப நோகுது...
என்று பதிலிறுத்த மருத்துவர்
கவலை கொள்ளாதீர்
நாளை வந்து எனை பாரும்
வேலைக்கு வழி சொல்கிறேன்...
என்று ஏழையை
வழியனுப்பினார்
நம் மருத்துவர்.

மாலை வேளையில்
தனது தனி மருத்துவமனையில்
மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார்
அம் மருத்துவர்.

வாசலில் வந்து நின்றது
வாட்டமான கார் ஓன்று
அதிலிருந்து நடக்க முடியதாபடி
நடந்து வந்தார்
அவ்வூரின் செல்வந்தர்களில்
ஒருவரான செல்வராஜ்...

டாக்டர்...
நடக்க முடியல...
மூச்சு வாங்குது...
வயிறு திம்முன்னு இருக்குது...

இதைச் சொல்லவே அவருக்கு
மேல் மூச்சுகீழ் மூச்சு வாங்கியது...

பரிசோதித்தார் மருத்துவர்
உங்களுடைய அன்றாட
உணவு முறை பற்றி
சொல்லுங்கள் என்றார்...

காலையில் டிபன்
மதியம் புல் மீல்ஸ்
மாலையில் சிற்றுண்டி
இரவு பிரியாணி
இடையிடையே நொறுக்குத் தீனி
இதுதான் என்னுடைய
அன்றாடஉணவு முறை...

நாளையே பிரசவித்துவிடும்
நிலையில்
அவரது வயிறு
உப்பிக் கொண்டு நின்றது...

பிணியின் காரணத்தை
அறிந்து கொண்ட மருத்துவர்
மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டு

உணவு முறைகளை
மாற்றுங்கள்...
நொறுக்குத் தீனிகளை
ஒழியுங்கள்...
எளிய உணவுகளும்
காய்கறி, கனிகளையும்
சாப்பிடுங்கள்
தினமும் அரை மணி நேரம்
நடைப் பயிற்சி...
கார் வேண்டாம்
சைக்கிள் ஓட்டுங்கள்...
என்றார் மருத்துவர்...

தனிமையில் இருந்த
மருத்துவரின் சிந்தையில்....
காலையில் வந்த
ஏழையின் வயிறு தோன்றியது...
சுவற்றில் ஓட்டப்பட்ட
காகிதம் போல்
கறுத்துச் சிறுத்த வயிறு...

மாலையில் வந்த
செல்வந்தரின் வயிறும்
தோன்றியது...

செல்வச் செழிப்பும்
உணவுக் கொழிப்பும் மிகுந்த
பானையைப் போன்ற வயிறு...

இருவரும் ஒரே திசையிலிருந்துதான்
வருகின்றனர்... ஆனால்
எதிரெதிர் திசையில் நிற்கின்றனர்...

ஏழைக்கு... வேலையுமில்லை
உணவுமில்லை...
பசியும் பிணியும் வாட்டுகிறது..?

செல்வந்தனுக்கு வேலையுமுண்டு
அதிகப்படியான உணவுமுண்டு
தொப்பையும், பிணியும்
வாட்டுகிறது..?

இந்த ஏற்றத் தாழ்வு
எங்கிருந்து வந்தது?
இதை எப்படி ஒழிப்பது..?

இருப்பவன் இல்லாதவனுக்கு
கொடுத்து உதவ வேண்டும்..!

முடிகின்ற காரியமா இது?

எல்லோரும் சமம்
என்ற நம் அரசின்
கொள்கை, கோட்பாடு
இங்கு கோமாளித்தனமாகி விட்டதே..?

இல்லாதவன்
உழைக்கத் தயாராக இருந்தும்
வேலையுமில்லை..?
வேளா வேளைக்கு
உணவுமில்லை..?

அட என் பாரதமே...
இந்த ஏழைகள் நிலை
என்று மாறும்..?
அவர்களின் துயரங்கள்
என்று தீரும்..?

மருத்துவரின் மனதில்
ஆயிரம் கேள்விக்கணைகள்...
பதிலளிப்போர் யார்..?
பாமர மக்களைக் காப்பவர்கள் யார்..?

உங்களுக்காவது
விடை தெரிந்தால் சொல்லுங்களேன்..!

(இதை எழுதிய சூழல்: பண்ருட்டியில் பணி நிமித்தமாக அறை எடுத்து 6 மாத காலம் தங்கியிருந்தேன். அதில் ஓரு நாளான 16.10.2004, அன்று காலை 8.00 மணியிலிருந்து, காலை 8.30-க்குள் எழுதி முடித்து விட்டேன். அதை சிற்சில மாற்றங்களுடன் இங்கே வெளியிடுகிறேன்..)