Saturday, June 28, 2008

கற்பின் விலை..? (குறுங்கவிதைகள்)

கற்பின் விலை

கல்வித்தாயினுடைய
கற்பின் விலை
டொனேஷன்..!

--*--*--*--*--*--*--*--

எருது

மனிதர்களின் வாழ்க்கை
வண்டியை ஓட்ட
நான் சுமக்கிறேன் பாரத்தை..!

--*--*--*--*--*--*--*--

இசை

ஐந்தறிவு மாக்களையும்
வசப்படுத்த
ஆறறிவாளன் கண்டுபிடித்த
அற்புத சக்தி..!

--*--*--*--*--*--*--*--

கங்காரு

கர்ப்பப்பையில் சுமந்தது
போதாதென்று
வயிற்றுப்பையிலும் சுமக்கும்
உத்தமத்தாய்..!

--*--*--*--*--*--*--*--

அரசின் அறிவிப்பு

இன்று உலக
எயிட்ஸ் ஒழிப்பு தினம்
கடைபிடியுங்கள்
காண்டத்தோடு..!

--*--*--*--*--*--*--*--

மழை

பூமிப்பெண்ணைப்
பார்த்து
வானமகன்
விடும் ஜொள்..!

--*--*--*--*--*--*--*--

முகில்

பூமிப்பந்தை
குளிர்விக்க
இயற்கையளித்த இலவச
குளிர்சாதனக் கருவி..!

--*--*--*--*--*--*--*--

விதவை

பிறருக்கு
வெளிச்சம்
கொடுப்பதற்காக
தன்னையே அழித்துக் கொள்ளும்
மெழுகுவர்த்தி....

--*--*--*--*--*--*--*--

Friday, June 27, 2008

ஹைக்கூ கவிதைகள் அல்ல குறுங்கவிதைகள்..!

மூன்று அல்லது நான்கு வரிகளில் எழுதப்படும் கவிதைகளை... 'ஹைக்கூ கவிதைகள்' என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஜப்பானிய வடிவமாக இருக்கும் 'ஹைக்கூ', கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியான நம் தமிழ்க்குடியின் முதுபெரும் மூத்த புலவரான வள்ளுவர் எழுதிய குறள் வடிவம்தான். வித்தியாசம் எனெனவெனில், அவர் இலக்கணச் சுத்தமாக, மரபு நடையில், இரண்டே அடிகளில் ஐயந்திரிபர சொல்லிவிடுவார். அந்த இரண்டு வரிகளில் முதல் வரியை இரண்டாக மடித்து எழுதினால் குறள் மூன்று வரிகளாகிவிடும். அதைத்தான் 'ஹைக்கூ' வும் செய்கிறது. ஆனால் புதுக்கவிதை நடையில்...

நமக்குதான் தமிழிலேயே அனைத்தும் இருக்கிறதே பிறகு ஏன் 'ஹைக்கூ' கவிதை என்கிறீர்கள். முத்து, முத்தாய் மூன்றே வரிகளில் எழுதுவதை, நறுக்குத் தெரித்தாற்ப் போல் நான்கே வரிகளில் எழுதுவதை இனி குறுங்கவிதைகள் என்ற அழைக்கலாமே..! இதுநாள்வரை நான் அப்படித்தான் அழைத்திருக்கிறேன். அழைத்துக் கொண்டே இருப்பேன்.

இனி எனது குறுங் கவிதைகள்...

--0--0--0--0--0--0--0--

தண்ணீர்க்குடம்

எத்தனை முறை தூக்கிலிட்டாலும்
உயிர் பிரியாமல் உறவாடும்
உலோக உயிரி..!

--0--0--0--0--0--0--0--

பிச்சைக்காரன்

நிகழ்கால சோகந்தன்னை
எதிர்காலம் வென்றிடவே
ஏந்துகிறான் திருவோடை..!

--0--0--0--0--0--0--0--

வேண்டுதல்

குந்த குடிசை வேணும்
கடவுளே..?
வேண்டுதல்
அரச மரத்துப் பிள்ளையாரிடம்..!

--0--0--0--0--0--0--0--

எயிட்ஸ்

நவயுக
எமதர்மனின்
கலியுக
எமவாகனம்..!

--0--0--0--0--0--0--0--

கடியாரம்

கால தேவனை
நொடிக்குள் அடக்கும்
எந்திரக்குருவி..!

--0--0--0--0--0--0--0--

கருமி

எதிர்காலம் சிறக்க
நிகழ்கால வாழ்வை
சிதைக்கும் கிருமி..!

--0--0--0--0--0--0--0--

அகிம்சை

அண்ணலின் ஆயுதமாம்
அகிம்சை..!
இங்கேயும் 'ஆயுதம்'..!

--0--0--0--0--0--0--0--

எரிமலை

பூமித்தாயின்
சிவப்பு
எச்சில்..!

--0--0--0--0--0--0--0--

இயந்திர மனிதர்கள் (ரோபோக்கள்)

கலியுக பிரம்மாக்கள்
படைத்த
நவயுக மானி(ட்)டர்கள்..!

--0--0--0--0--0--0--0--

குளோனிங் முறை

மெய் ஞானம் கொண்ட
விஞ்ஞான மனிதர்களின்
அஞ்ஞான முயற்சி..!

--0--0--0--0--0--0--0--

முதுமை

மானுட காவியத்தின்
கடைசி
அத்தியாயம்..!

--0--0--0--0--0--0--0--

மரணம்

மனிதமெனும் சரித்திரத்தில்
கடைசி வாக்கியத்தின்
முற்றுப்புள்ளி..!

--0--0--0--0--0--0--0--

திருக்குறள்

தருமி எனும் தமிழ்மக்களுக்கு
தெய்வப்புலவன் தந்த
பொற்கிழி..!

--0--0--0--0--0--0--0--

பள்ளி...

தமிழுக்கு தொண்டு செய்த
ஔவையின் நினைவாக
ஒரு பள்ளி - பெயர் மட்டும்
ஔவையார் அகாடமி..!

--0--0--0--0--0--0--0--

Saturday, June 21, 2008

நிலத்தின் அளவீடுகள்

நடுத்தர வர்க்கத்தினரும், ஏழையும் வேண்டுவது குடியிருக்க ஒரு வீடு. இப்போது வீடு வாங்குவது நடக்கின்ற காரியமா? நிலம் வாங்குவோம் என்பவர்களுக்கு நிலத்தின் அளவீடுகள் சரிவரத் தெரிவதில்லை (நான் உள்பட) அதற்காக இந்த பதிவு...

1சதுர அடி - 1 அடி'' x 1 அடி''
10 சதுர அடி - 10 அடி'' x 10 அடி''
435.6சதுர அடி - 1 சென்ட் (Cent)
1076 சதுர அடி - 1 ஏர் (Are)
1200 சதுர அடி - ½ கிரவுண்டு (Ground)
2400 சதுர அடி - 1 கிரவுண்டு
43560 சதுர அடி - 1 ஏக்கர்
107637.8 சதுர அடி - 1 ஹெக்டேர்

1 சென்ட் - 435.6 சதுர அடி (Sq. ft)
10 சென்ட் - 4356 சதுர அடி
100 சென்ட் - 43560 சதுர அடி

1 ஏக்கர் = 43560 சதுர அடி
= 100 சென்ட்
= 40.5 ஏர்கள்
= 0.471 ஹெக்டேர்
= 18.15 கிரவுண்டுகள்

1 குழி - 144 சதுர அடி
3 குழி - 1 சென்ட்
30 குழி - 1 மா(Maa)
1 காணி - 1.322 ஏக்கர்

1 மீட்டர் - 3.280833 அடி (Feet)
1 மைல் - 5280 அடி (Feet)

@இதில் என் அறிவிற்கு எட்டியவரை சரியாகத் தந்திருக்கிறேன். பிழையிருப்பின் தகுந்த ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன். நன்றி.

('காணி நிலம் வேண்டும்' என்று மகாகவி பாரதி குறிப்பிட்ட நிலத்தின் அளவு இதை நான் படித்தபோதுதான் தெரிந்து கொண்டேன்)

Tuesday, June 17, 2008

சாதி ஒழிப்பு

(பணி நிமித்தமாக பண்ருட்டியில் 2004, ஆகஸ்டு 2-ம் தேதி தினமலரில் வந்த செய்தி...'(படிப்பதற்காக..?)சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காக 9 வகுப்பு மாணவி தற்கொலை' படித்ததும் பதறித் துடித்தது என் மனம்... என் உள்ளக்குமுறல்கள் இதோ...)

அட கேடு கெட்ட சமுதாயமே
சாதி வெறி பிடித்த
சமுதாயமே
உன்னால் இன்று ஒரு உயிர்
போய்விட்டதே...
மீட்டுத் தரமுடியுமா உன்னால்..?

அட மதிகெட்ட அரசே
அழுகிய மனம்
கொண்ட அரசே
சாதிகள் இல்லையென்று
வீதிக்கு வீதி
விளம்பரம் செய்வாய்...
ஆனால் சட்டப்படி சாதி பார்த்து
சாதிச் சான்றிதழ் வழங்குவாய்...

எதற்கிந்த
பச்சோந்தி வேடம்
சாதிப்பிரிவால்
கிடைத்ததென்ன உனக்கு..?

வேற்றுமையில் ஒற்றுமை
என ஓதிவிட்டு
இன்ன சாதி இவன்
இவள் இன்ன சாதி என
சான்றளிக்கிறாயே...

சாதிப் பேய் பிடித்த
சதிகார அரசே
சனியன் பிடித்த அரசே
என்று நீ மாறுவாய்..?
எப்போது நீ
எளியவர்களைக் காப்பாய்..?

நடுவண் அரசு
நல்லரசு...
மக்களுக்கு
நன்மை பயக்கும் அரசு...
என பத்திரிகைகளில்
பக்கத்திற்குப் பக்கம்
பகட்டாய் விளம்பரம்..?

இதோ ஓர் உயிர்
கேவலம் ஒரு
சாதிச் சான்றிதழ்
கிடைக்கவில்லை என
தன்னுயிரை மாய்த்துக் கொண்டது பார்..!
மதிகெட்ட அரசே
பொய் வேடம் உனக்கெதற்கு..?

அம்மாணவி
ஓர் அன்னை தெரசாவாக
ஜான்சி ராணியாக
விண்வெளி வீரங்கனையாக
ஏன் ஒரு வீரத்திருமகளாக
வந்திருப்பாள்..!

நடந்ததா அது..?
உன் கேடு கெட்ட சாதித்தனத்தால்
உனது அதிகாரத்திலுள்ள
அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால்...
அவர்கள் குடும்பம்
உற்சாகத்தில் ஊறித் திளைக்க
வறியவர்களிடம்
வஞ்சகமில்லாமல் லஞ்சம்
கேட்டதால்...
தீயிலே வெந்து விட்டாள்...

சாதிகளைச் சொல்லி சான்றிதழ்
தரும் உன்னை
தீயிட்டுக் கொளுத்துவேன்
உன் தீங்கான எண்ணங்களுக்கு
எழுத்தாணி தீட்டுவேன்
உன் சவப்பெட்டி
சாதிச் சட்டங்களை
ஆணி கொண்டறைவேன்..!

மக்கள் நலன் காக்கும்
அரசு நீ என்றால்
சாதிகளை ஒழி..!
சாதிச் சான்றிதழை ஒழி..!

சாதிகள் உண்டெனில்
அது ஆணொன்று
பெண்ணொன்று சொல்..!
சாதி வெறி பிடித்த நாய்களின்
காதில் விழும்படி சொல்..!

இல்லையேல் விழுந்தடித்து ஓடு
இல்லையெனில்
நான் ஓடவைப்பேன்..!

எந்த நாட்டிலும் காணா
பல சாதிகள் இங்குண்டு பாரீர்...
அதன் பேரில் பல சாதிக்
கட்சிகளுமுண்டு பாரீர்...
சாதிக் கட்சித் தலைவர்கள்
சாதியின் பெயரைச் சொல்லி
உண்டு கொழுக்கிறார்கள் பாரீர்...

அவன் சாதியாக இருந்தாலும்
ஏழையாக.. ஏமாளியாக
இருப்பவனிடம்
சாதிவெறி தூண்டி விட்டு
குளிர் காயும் குள்ள நரிகள்
இங்குண்டு பாரீர்...

இவ்வளவு நடந்தும்
குட்டக் குட்டக் குனியும்
ஏமாளி மக்களே..?
முதுகெலும்பில்லாத அப்பிராணிகளே
சாதிகளுக்கெதிராக என்று
எழுவீர்கள்..?
இந்த தேசத்தை
எப்போது காப்பீர்கள்..?

எழுங்கள்... இன்றிலிருந்தாவது
விழித்தெழுங்கள்...
விரைந்தெழுங்கள்...
சாதிகள் இல்லையென்று
சொல்லுங்கள்...
அச்சகதியிலிருந்து
வெளியே வாருங்கள்..
சாதியை விட்டொழியுங்கள்...

நீ என்ன சாதி என்று
கேட்பவனின்
வாயைக் கிழித்தெறியுங்கள்...
மதங்களை மறந்து
மனிதர்களை நேசியுங்கள்...

நமக்காகவே அரசு
நல்லோர்களைத் தேர்ந்தெடுங்கள்
அவர்கள் துணையோடு
சாதியை விரட்டுவோம்
சாதி மதமில்லா
சமுதாயம் படைப்போம் வாருங்கள்...

என்னருமை மக்களே
எனது உடன் பிறவா உள்ளங்களே
நம் எதிர்கால சந்ததிகளாவது
சாதியைப் பேசாமல்
கேட்காமல் இருக்கச் செய்வோம் வாருங்கள்..!

மோ. கணேசன். 02.08.2004.

அரசியல்வாதியின் வேண்டுதல்..?

திருப்பதி ஏழுமலையானே...
இந்த தேர்தலில்
என்னை நீ ஜெயிக்க வச்சா
எனக்கு ஓட்டு போட்ட
ஊர் மக்களுக்கு மொட்டையடிச்சு
உனக்கு கிரீடம் சாத்துறேன்..!

(பணி நிமித்தமாக பண்ருட்டியில் தங்கியிருந்த போது, 20.08.2004 அன்று காலையில் எழுதியது)

Monday, June 16, 2008

புரட்சித் திருமணம்

திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதாம் - எப்படி
இந்தச் சாதிக்காரனுக்கு
அவனுடைய சொந்த சாதியில்தான்
மணமுடிக்கப்பட வேண்டுமென்று...

மதம் விட்டு மதம் மாறியோ
சாதி விட்டு சாதி மாறியோ
மணக்கக் கூடாது... - மாக்கள்
செய்து வைத்திருக்கும் மடத்தனமான வரையறை..!

மடத்தனம் இது மடமைத்தனம்
என்று எதிர்த்துச் செய்தால்
ஏசல் விழும்... பூசல் எழும்...
பல சமயங்களில் உயிரே வீழும்..!

சாதி விட்டு சாதி மாறி மணம் செய்தால்
அது கலப்புத் திருமணமாம்...
எந்த அறிவாளியடா(?) இதற்கு அப்படியொரு
கேவலமான பெயர் வைத்தான்..?

மனித இனத்தை விட்டுவிட்டு
விலங்கினத்தையா மணம் செய்தோம்?
அதை கலப்பு மணம் என்று
கடிந்து சொல்வதற்கு..?

அந்தத் திருமணத்தை...
சாதிகள் ஒழிய... சமத்துவம் மலர...
நற்சமுதாயம் வளர மனமொத்த தம்பதிகள்
செய்த புரட்சித் திருமணமென்று சொல்லுங்கள்..!

சமயசார்பற்ற நாடு என்பதை விட
சாதி மதமற்ற நாடு என்று
சொல்லிக் கொள்வதில்
நாம் பெருமைப் படலாம்..!

இனியேனும் அதை கலப்பு மணம்
என அழைக்காதீர்கள்...
புதிய சமுதாயம் படைக்கும்
'புரட்சித் திருமணங்கள்' என்று சொல்லுங்கள்..!

சாக்காடான சாதிகளின் பெயரால்
மதம் பிடித்த மதங்களின் பெயரால் - இனி
எக்கொடுமைகளும் நடவாமலிருக்க
நாடெங்கும் நடக்கட்டும் 'புரட்சித் திருமணங்கள்'
அதற்கு ஆதரவு நல்கட்டும் இளைஞர் மனங்கள்...

- மோ. கணேசன்.

Saturday, June 14, 2008

காதலனின் ஏக்கம்...

ம் பெற்று வந்தேனோ உனைப் பார்க்க
திநிறை மலர் கண்ணால் எனை நீ நோக்க
மோம் கொண்டேனடி உன்மேல் பெண்ணே..!
நாணேறும் அம்பைப் போல் உன் முன்னழகும்
ரடிக்கும் பின்னழகும், மயக்கும் உன் சிரிப்பும்
ன்மத்தம் ஊட்டுதடி என்னன்பே அருகில் வா..!