Tuesday, September 11, 2007

மகாகவி பாரதிக்கு கவிதாஞ்சலி

புரட்சிக் கவி பாரதி நினைவு நாள் கவிதை


பெண்களை உயர்த்துவோம் பேதமை அகற்றுவேம்
சிந்தையில் நல்லெண்ணங்களைக் குவிப்போம்...
பாரதத் தாயின் விலங்கினை அறுப்போம்...
வெள்ளைப் பரங்கியனை நாடு கடத்துவோம்..!

பேத நிறை சமூகம், பேய் நிறைக் கொடூரம்
கொண்ட மூடப் பழக்கங்களை கிழித்தெறிந்தவன்...
வேதங்கள் பொய்... வேள்விகள் பொய்...
சாதிகள் பொய்... சமத்துவமே மெய்யென்றவன்..!

பத்திரிகை ஆசிரியனாய் பாமரனுக்கு ஏழுதினான்
வீறு கொண்டெழுவாய்... வேதனை துடைப்பாய்...
கொடுஞ் சாதிகளகற்றுவாய்... சரித்திரம் படைப்பாய்...
வீறு கொண்டெழுவாய்... விண்ணில் நடப்பாய்..!

கோட்டுச்சித்திரத்தால் சமூக அவலத்தைக் காண்பித்தான்
பாமரரும் புரிந்து கொண்டு பகுத்தறிவு பெற்றனர்
நமக்கு ஏவலர்கள் தேவையில்லை... - தேச
காவலர்கள் வேண்டுமென்ற நிலையைப் படைத்தவன்..!

பரங்கியரிடம் பணிந்திருந்த பாமர மக்களை
தன் புரட்சிப் பாக்களால் புத்துயிரூட்டியவன்
முண்டாசு கட்டிக் கொண்டு சமூக
முரண்பாடுகளை வேரறுக்க நினைத்தவன்..!

எந்தன் மகாகவி சுப்பிரமணிய பாரதி
எட்டயபுரத்தில் பிறந்து ஏட்டு திக்கும்
தமிழால் முழங்கி சுதந்திரத்தை வளர்த்தவன்
எந்தன் சுந்தரத் தமிழன் பாரதி..!

தமிழகத்து வானில் ஓப்பற்ற கவிச்சூரியன்
நீங்கிய இந்நாள் தமிழகத்தின் துக்கநாள்...
நீ நீங்கினாலும் ஐயா... நின் புகழ் நீங்காது
நின் கவி மறையாது... கருத்துக்கள் குன்றாது..!
-மோ. கணேசன். 11.09.2007

No comments: