Tuesday, September 30, 2008

பேருந்து சீட்டில் எங்கே தமிழ்..?

தமிழக அரசில் அனைத்தும் தமிழ் மொழியால் கையாளப்படவேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டது. அதற்கு உதாரணமாக, நீதிமன்றங்களில் வாதாடுதல், ஆவணங்கள், தீர்ப்புகள் என அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என அரசாணையும் வெளியிட்டது.

அதனால் தமிழர்கள் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் முன்னர் அச்சடிக்கப்பட்ட பேருந்து சீட்டு தூய தமிழில் வழங்கப்பட்டது.

அண்மையில் பேருந்து சீட்டை வழங்குவதற்கு கையடக்க இயந்திரங்களில் பேருந்து சீட்டு அச்சடித்து வழங்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டது. ''தமிழ்... செந்தமிழ்... செம்மொழித் தமிழ்...'' என்று கூவிய தமிழக அரசு, நவீன பேருந்து சீட்டுகளில் ஆங்கிலத்தை மட்டுமே அச்சில் பயன்படுத்துகிறது...

இக்குறை தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தால் நடத்தப்பட்டுவரும் அனைத்து பேருந்துகளிலும், அவர்கள் வழங்குகின்ற பேருந்து சீட்டுகளில் அப்பட்டமாகத் தெரிகிறது.


சேலம் - சென்னை மார்க்கம் வழியாக செல்லும் அரசு விரைவுப் பேருந்தில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட பேருந்துச்சீட்டு



காரணம் கேட்டல்..?, பெங்களூரில் இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு வாங்கப்பட்டது... (எவ்வளவு பணம் சுருட்டப்பட்டதோ..?) அதனால்தான் ஆங்கிலத்தில் உள்ளது என பதில் வருகிறது.

இதே பெங்களூர் இருக்கும் கர்நாடகாவில் ஓடும் பேருந்துகளில் வழங்கப்படும் கையடக்க இயந்திரத்தால் வழங்கப்படும் பயணச்சீட்டில் அவர்களது தாய்மொழியான கன்னடம் இருக்கிறது...

இதைப்பார்க்கும்போது யாருக்கு இருக்கிறது மொழிப்பற்று... தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் முதற்கொண்டு, தமிழகம் முழுதும் பயணிக்கும் அதிவிரைவு பேருந்துகள் வரை ஆங்கிலத்தில், பேருந்து சீட்டுகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் பிற நகரங்களில், தனியாரால் நடத்தப்படும் பேருந்துகளில் இதே நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வழங்கும் பயணச்சீட்டில் தாய்த்தமிழில் அச்சிடப்பட்டு தரப்படுகிறது...


கடலூர் - பண்ருட்டி மார்க்கம் வழியாக செல்லும் தனியார் பேருந்தில் தமிழில் வழங்கப்பட்ட பேருந்துச்சீட்டு


இவர்களால் மட்டும் எப்படி சாத்தியமாகிறது என்று அவர்களடம் வினவினால்..? கோயமுத்தூரில் இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டது. குறைந்த செலவில் இதற்கான மென்பொருளை தமிழில் வழங்குகிறார்கள் என்றனர்.

தமிழகத்தில் பயணம் செய்தால் தமிழில் பயணச்சீட்டில்லை... தலைகுனிவு. தமிழ் பட்டும் படிக்கத் தெரிந்தவர்கள் தமிழகத்தில் 70% பேர்... ஆங்கிலம் வேண்டாமென்று சொல்லவில்லை... தமிழுக்கு மரியாதை செய்ய வேண்டாம், உரிய மதிப்பை கொடுத்தால் போதும்... அதன் கீழ் ஆங்கிலம் வரட்டும்...

நீதிமன்றத்தில் தமிழ்... மக்கள் பயணிக்கும் அரசு பேருந்துகளில் ஆங்கிலத்தில் பயணச்சீட்டு... ஆகா... தமிழக அரசின் தமிழ்ப்பற்றை நினைத்தால் குமரியில் குன்றென நிற்கும் திருவள்ளுவருக்கே தலைசுற்றும்... அட போங்கய்யா... நீங்களும் ... உங்கள் தமிழ்ப்பற்றும்..?

Friday, September 19, 2008

காதல் பிரிவு

ன்னாளிது பொன்னாளிது என்னவனைக் கண்டநாளிது
 கண்ணாளனைக் கண்டு களிப்புற்று, கலந்திட்ட நாளிது
சீறி வரும் காளை போல என்னவனின் நடை கண்டு
 சிலிர்த்துப் போனேன்... அவன் கண்ணில் காந்தமுண்டு
ம் என்றதும் அவனருகில் சென்றேன்... அவன் தோளில்
 சாய்ந்தேன்... அவனிதழில் என்னிதழ் தேன்.. தேன்.. தேன்..!

மோகனப் புன்னகையாளைக் கண்டேனடா... கசிந்'தேனடா'
 ஆகயத் தாமரை முகம்... சந்தன முல்லையவள் முகம்
ன்னியவள் கரம் பிடித்து காளை நான் நடக்கையிலே
 காதல் பிறக்க, காமம் வெடிக்க... - அழைத்தாள் அவளன்னை..!
யன விழியில் பரபரப்பு தொற்றிக் கொள்ள... பாவையவள்
 பயந்நு நடுங்கும் மானானாள்... அவள் கொவ்வையிதழில்
ன்றும் நினைக்கும்படி முத்தமிட்டு, அவள் நெற்றியிலே
 பொட்டிட்டு அனுப்பி வைத்தேன்... போனாளென் தே'வதை..!'

(முதற்ப் பாடல் காதலி, தனது காதலனை சந்தித்தது பற்றி கூறுகிறாள், இரண்டாவது பாடலில் காதலன், தன் காதலியை சந்தித்தது பற்றி கூறுகிறான்...)