Thursday, May 24, 2018

விடமாட்டேன் உன்னை தொடர்கதை இப்போது புத்தகமாக வெளிவருகிறது!

அன்பு வலைப்பூ நண்பர்களே...

இந்த வலைப்பூவில்... விடமாட்டேன் உன்னை என்ற தொடர்கதையைப் படித்திருப்பீர்கள். அதற்கு நீங்கள் தந்த ஆதரவைக் கண்டு உள்ளம் குளிர்ந்தேன்.

பலரின் வேண்டுகோளுக்கிணங்க... இதை புத்தகமாக வெளியிடுகிறேன். இந்த புத்தகத்திற்கு, கிரைம் கதை மன்னர் ராஜேஷ்குமார் அணிந்துரை எழுதித் தந்திருக்கிறார்.

பாரதி புத்தகாலயம் இந்த புத்தகத்தை பதிப்பித்து வெளியிடுகிறது. 96 பக்கங்கள். விலை 80 ரூபாய்.

புத்தக வடிவிலான படைப்பிற்கும் உங்களின் ஆதரவு தேவை...


என்றென்றும் அன்புடன்

மோ.கணேசன்

No comments: