Friday, September 19, 2008

காதல் பிரிவு

ன்னாளிது பொன்னாளிது என்னவனைக் கண்டநாளிது
 கண்ணாளனைக் கண்டு களிப்புற்று, கலந்திட்ட நாளிது
சீறி வரும் காளை போல என்னவனின் நடை கண்டு
 சிலிர்த்துப் போனேன்... அவன் கண்ணில் காந்தமுண்டு
ம் என்றதும் அவனருகில் சென்றேன்... அவன் தோளில்
 சாய்ந்தேன்... அவனிதழில் என்னிதழ் தேன்.. தேன்.. தேன்..!

மோகனப் புன்னகையாளைக் கண்டேனடா... கசிந்'தேனடா'
 ஆகயத் தாமரை முகம்... சந்தன முல்லையவள் முகம்
ன்னியவள் கரம் பிடித்து காளை நான் நடக்கையிலே
 காதல் பிறக்க, காமம் வெடிக்க... - அழைத்தாள் அவளன்னை..!
யன விழியில் பரபரப்பு தொற்றிக் கொள்ள... பாவையவள்
 பயந்நு நடுங்கும் மானானாள்... அவள் கொவ்வையிதழில்
ன்றும் நினைக்கும்படி முத்தமிட்டு, அவள் நெற்றியிலே
 பொட்டிட்டு அனுப்பி வைத்தேன்... போனாளென் தே'வதை..!'

(முதற்ப் பாடல் காதலி, தனது காதலனை சந்தித்தது பற்றி கூறுகிறாள், இரண்டாவது பாடலில் காதலன், தன் காதலியை சந்தித்தது பற்றி கூறுகிறான்...)

2 comments:

NaseeMoga said...

super.... i like u........ maamu

மோகனன் said...

தங்கள் ஆவலை பூர்த்தி செய்ய வாய்ப்பளித்தமைக்கு... நன்றி தேவதையே...