Monday, June 06, 2011

விடமாட்டேன் உன்னை..! - திகில் தொடர்கதை - 4 (உண்மைச் சம்பவம்)

நாயின் ஊளை சத்தத்தைக் கேட்ட மறு வினாடி சங்கரும் மெலிதாக ஊளையிட ஆரம்பித்தான்.

அதைக் பார்த்த வேதாசலம் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய், சிலை போல் ஸ்தம்பித்து நின்றார்கள்.

ஊளைச் சத்தம் மெல்ல அடங்கியது. ராமனாதன் போட்ட ஊசியும், மருந்தும் வேலை செய்யவே சற்று நேரத்திற்கெல்லாம் அப்படியே தூங்கிப்போனான் சங்கர்.

அதிர்ச்சியில் இருந்தவர்களின் ஒவ்வொருவர் முகத்திலும் கவலை அப்பிக் கொண்டது. அவர்களை வேதாசலத்தின் குரல் நிமிர வைத்தது “போங்க... எல்லோரும் போய் படுங்க... மணி இப்பவே மூணாகுது... எல்லாம் காலைல பேசிக்கலாம்... நம்ம சங்கருக்கு ஒண்ணும் ஆகாது” என்றார்.


“நான் பையன் பக்கத்திலயே இருக்கேன். நீங்க போய் படுங்க…” என்று கமலம்மாள் சொல்லவும், வேதாசலமும் அவரது இரண்டாவது மகன் சந்திரனும் உள்ளே சென்று படுத்துக் கொண்டனர்.

கடைக்குட்டி செல்வி மட்டும் கமலம்மாள் அருகிலேயே படுத்துக் கொண்டாள். சங்கரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கமலம்மாளும் அப்படியே தூங்கிப் போனார்.

*****

காலைக் கதிரவன் தன் சிவப்பு நிறத்தை தொலைத்து விட்டு, மெல்ல மெல்ல வெள்ளை நிறத்திற்கு மாறிக்கொண்டிருந்தான். காகங்கள் கரைந்து கொண்டிருக்க, சேவல் ஒன்று காகங்களின் சத்தங்களுக்கு இணையாக கொக்கரித்துக் காட்டியது.

சேவலின் குரல் கேட்டு எழுந்த கமலம்மாள் சங்கரின் முகத்தைப் பார்த்தார். அவனது முகம், நேற்று இரவு பார்த்ததை விட மிகவும் மோசமான அளவில் சூம்பிப் போயிருந்தது. கண்கள் உள்ளே போயிருந்தன. இன்னமும் அவன் தூங்கிக் கொண்டே இருந்தான்.
அவனை நெருங்கி, அவன் நெற்றியில் கைவைக்கப் போன கமலம்மாளை, காலிங் பெல் சிணுங்கி அழைத்தது.

சங்கரைத் தொடாமல், வாசலை நோக்கி நடந்து கொண்டே “யாரது..?” என்று குரல் கொடுத்தார். மீண்டும் அழைப்புமணி சிணுங்கவே,  கமலம்மாள் கதவைத் திறக்க வெளியே கமலம்மாளின் அம்மாவான பாவாயி நின்றிருந்தார். 60 வயது தேகத்தில் அனைத்தும் நரைத்துப் போயிருந்தன. முகத்தில் தனது மகளை பார்த்து விட்ட மகிழ்ச்சி, அவரின் புன்னகையில் தெரிந்தது.

பாவாயியைப் பார்த்ததும் “வாம்மா..” என்றார் கமலம்மாள். அவர் குரலில் தன் அம்மா வந்திருக்கிறாரே என்ற மகிழ்ச்சி துளியுமில்லை.

“எப்படிம்மா இருக்க... என் பேரபிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா..?” என்று கேட்டபடியே உள்ளே நுழைந்த பாவாயியின் கண்களில் சங்கர் தென்பட்டான்.

அவனிருந்த நிலையைக் கண்டதும் பதறியபடி “யெய்யா சங்கரு... சங்கரு...” அந்த தள்ளாத வயதிலும் ஓடிச் சென்று தன் பேரனை மடியில் கிடத்திக் கொண்டார்.

“அடியே… என்னடி ஆச்சு எம்பேரனுக்கு.. என்னடி ஆச்சு... ஏண்டி எம்பேரன் இப்படி கிடக்கிறான்...” என்று அழுதபடியே கேட்டார் பாவாயி.

கமலம்மாளும் அழுதபடியே, ஆரம்பம் முதல் இறுதி வரை சொல்லி முடிக்கவும், வேதாசலம் உள் அறையிலிருந்து வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

வெளியே வந்தவர் பவாயியைப் பார்த்ததும் “வாங்க அத்தை…” என்றார். அவர் குரலிலும் மகிழ்ச்சி இல்லை.

பாவாயி தன் சேலை தலைப்பால் கண்ணீரை துடைத்தபடியே “வரேன் சாமி... புள்ளையை இப்படி ஆகறதுக்கு வுட்டுட்டீங்களே…” என்றார்.

“நான் என்ன அத்தை செய்யட்டும். வசூலுக்கு நீ போகதடா... ராமு மட்டும் போயிட்டு வரட்டும்னேன். அத கேக்காமா போனான். இப்படி நிலவரம் தெரியாம திரும்பி வந்தான். இதுவரைக்கும் இவனுக்கு என்ன ஆச்சின்னே தெரியல… நேத்து ராத்திரி ராமனாதன் வந்து பார்த்துவிட்டு போனான். ஏதோ புதுகாய்ச்சலுங்கறான்” என்றார் வேதாசலம்

“பார்த்தா காய்ச்சல் மாதிரி தெரியலயே சாமி..? பையன் வாயில எச்சி ஒழுதுகிட்டே இருக்கு. முகமும் ரொம்ப இருட்டடைஞ்சு போய் கிடக்கே..?” என்றார் பாவாயி.

“ஒண்ணும் ஆகாது அத்தே... இன்னிக்கு சாயந்திரம் ராமனாதன் வரேன்னிருக்கான். அவன்கிட்ட விசாரிப்போம்…” என்றவாறே, அங்கே நிற்க மனமில்லாமல் வெளியில் கிளம்பிப் போனார் வேதாசலம்.

“சரிம்மா... நீ உன் பேரனை பாத்துக்கிட்டிரு... உனக்கு நான், காபி போட்டு எடுத்துகிட்டு வரேன்…”என்றபடி புடவைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சமையலறை பக்கம் போனார்.

பாவாயியின் குரல் கேட்டு எழுந்த செல்வி பாவாயியைக் கண்டதும் “பாட்டி…” என்றாள்.

“வா சாமி...” என்ற பாவாயி தனக்கு பிடித்த தெய்வங்களின் பெயரையெல்லாம் அழைத்தவர், “என் பேரனை நீங்கதான் காப்பாத்தணும் சாமிகளா…” என்றபடி கையோடு கொண்டு வந்திருந்த திருநீரை சங்கரின் நெற்றியில் பட்டையாக இழுத்து விட்டார். அப்படியே செலவிக்கும் வைத்து விட்டார்.

சங்கருக்கு இப்படி ஆகிவிட்டது என்று தெரிந்ததும் அவனது சக நண்பர்களும், அக்கம் பக்கத்தினரும் வந்து விசாரித்து விட்டுப் போயினர்.



*******

கல்லூரிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தான் நவநீதன். குன்றத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ., படித்துக் கொண்டிருக்கிறான்.

சங்கரின் நண்பனாக சிறுவயது முதல் இருப்பவன்தான் இந்த நவநீதன். இருவருக்கும் ஒரே வயதுதான்.

அடுத்தடுத்த தெருவில் இருவரும் வசித்துக் கொண்டிருந்தாலும் இரு குடும்பத்திற்குமிடையே ஏற்பட்ட குழாயடிச் சண்டையால், இவர்களின் நட்பு தெரு அளவில் முறிந்து போய் விட்டது. இருப்பினும் கிரிக்கெட் விளையாடும் இடங்களில் இவர்களது நட்பு தெடர்ந்து கொண்டுதான் இருந்தது.

நவநீதன் வீட்டிற்கு வந்த போது மாலை 5 மணி. வீட்டிற்கு வந்தவன் சில புத்தகங்களை எடுத்து சைக்கிளில் வைத்துக் கொண்டு நூலகத்திற்கு கிளம்பிச் சென்றான்.

இரண்டு மணி நேரம் கழித்து நூலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் அவனது நண்பன் சீனியைப் பார்த்தான்.
பார்த்ததும் சைக்கிளை நிறுத்தி விட்டு “டேய் மாப்ள... என்னடா ஆச்சி உனக்கு..? ஏண்டா என்ன பார்க்க வரல..?”

“ஸாரி மச்சி... ரொம்ப வேலை அதான் உன்ன பாக்க வர முடியல”

“சரி பரவால்ல விடு... ஆமா, ஞாயித்துக் கிழமை ஆனாலே கிரிக்கெட் விளையாடறதுக்கு கிரவுண்டுக்கு வந்துடுவ? ஏண்டா இப்பல்லாம் வரமாட்டேங்கற..? நீ நல்ல பௌலர் ஆச்சேடா..? நீ இல்லாம டீமே ஒரு மாதிரியா இருக்கு தெரியுமா..?”

“அடப்போ மச்சி... அந்த சங்கர் பய எப்போ என் பௌலிங்கை அடிச்சி கிழிச்சானோ, அதிலிருந்து கிரிக்கெட் மேலேயே வெறுப்பு வந்திடிச்சு... அத விடு... நம்ம பசங்க எல்லாம் எப்படிடா இருக்காணுங்க..?”

“எல்லாம் நல்லா இருக்காணுங்கடா. இப்பெல்லாம் தினமும் காலைல ஆறுமணிக்கே கிரவுண்டுக்கு வந்துடறானுங்க... நீ மட்டும்தான் மிஸ்ஸாகுற...”

“கோச்சுக்காதடா... வேலை அதிகமாயிடிச்சி... ஆமா அந்த சங்கர் தடியன் எப்படி இருக்கான்..?”

“தெரியலடா.. ரெண்டு நாளா கிரவுண்டுக்கே வரல... ஆளயே பார்க்க முடியல… அவன் இல்லாதது எதிர் டீம்ல ஒரு குறையாவே இருக்கு”

“அதானே... ஆப்போசிட் டீம் கேப்டனாச்சே நீ... உனக்கு விளையாட சரியான எதிர் டீம் ஆட்கள் வேணுமே... சரிடா மச்சி.. எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்பறேன். முடிஞ்சா இந்த ஞாயித்துக் கிழமை விளையாடறதுக்கு வர பாக்கறேன்...” என விடைபெற்றுக் கொண்டான் சீனி.

“சரி மாப்ள… அப்ப நானும் வீட்டுக்கு கிளம்பறேன்…” என்றபடியே நவநீதன் தனது சைக்கிளை கிளப்பினான். வழியில் அங்கே, இங்கே என சுற்றி விட்டு, வீடு வந்து சேர்ந்த போது மணி இரவு எட்டு முப்பது ஆகி இருந்தது.

வந்ததும் கைகால்களை கழுவிக் கொண்டு உட்கார்ந்தான். சன் டிவியில் பெப்ஸி உமா போலியான புன்னகையோடு யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

கண்கள் டிவியைப் பார்த்துக் கொண்டிருக்க, நவநீதனின் அம்மா தட்டில் சாதம் வைத்துக் கொடுத்தார்.

டிவி பார்த்தபடியே சாதத்தை நவநீதன் சாப்பிட்டு முடிக்கவும், மணி ஒன்பது என்று அவன் வீட்டு கடிகாரம் மணியடிப்பதற்கும் சரியாக இருந்தது.

காற்று வாங்குவதற்காக வெளியில் வந்த நவநீதனை, பக்கத்து தெருவிலிருந்து வந்த அழுகுரல்கள் கவனத்தை ஈர்த்தது.
'யாரு இந்த நேரத்துல அழுதுகிட்டு இருக்கிறது?' என்று யோசித்தபடியே அங்கே போனான்.

“ஐயோ... என் பேரனை பேய் பிடிச்சிருச்சி போலருக்கே... அடி மகமாயி உனக்கு கண்ணில்லையா...” என்று அழுதபடியே தெய்வங்களை வசைபாடிக் கொண்டிருந்தார் பாவாயி.

கிரிக்கெட் விளையாடும் பையன்கள் அனைவரும் சங்கரின் வீட்டு முன்பு நின்றிருந்தார்கள். அவர்களைப் பார்த்த நவநீதன் “என்னடா எல்லாரும் சங்கர் வீட்டு முன்னாடி நிக்கறீங்க..?’’ என்று கேட்டான்

அங்கே நின்றுருந்தவர்களில் ஒருவனான கார்த்திக், சங்கருக்கு நடந்தவற்றை சுருக்கமாக சொல்லவும், நவநீதன் அதை நம்பவில்லை.

“போடாங்... எதாச்சும் அசிங்கமா சொல்லிடப் போறேன். பேய் பிடிச்சுடுச்சு, பிசாசு அடிச்சிடுச்சின்னு... ஏமாந்தவன்கிட்ட போய் இந்த கதையெல்லாம் சொல்லு…” என்றான் நவநீதன்.

அப்போது சங்கரின் வீட்டு முன்பு, வேகமாக வந்த ஆட்டோ ஒன்று அவசரமாய் பிரேக் போட்டு நின்றது.

அடுத்த நிமிடமே வீட்டின் உள்ளேயிருந்து சங்கரை வேதாசலமும், அவனுடைய மாமா ராமுவும் கைதாங்கலாக ஆட்டோவிற்கு அழைத்து வந்தார்கள்.

சங்கரைப் பார்த்த நவநீதன் முகத்தில் ஆயிரம் அதிர்ச்சி ரேகைகள் ஓடின. கிரிக்கெட்டில் இவன் பேட் செய்ய வந்தால் ஒரு மாமிச மலை பேட் செய்வது போல் வருவான். இரும்பு போல இருக்கும் கார்க் பந்தை அனாசயமாக சிக்ஸருக்கு விரட்டி அடிப்பான். இவன் விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் சிரமம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் போன்று இருந்தவன், இப்போது பார்பதற்கு ஓமக்குச்சி நரசிம்மன் போல ஒட்டிப் போய் தெரிந்தான்.

அவனைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீளாத நவநீதன், அருகிலிருந்த கார்த்திக்கிடம் “இவனுக்கு என்னாச்சிடா... பாடிபில்டர் மாதிரி இருந்த இவன் உடம்பு, ரெண்டே நாள்ல இப்படி பல்லி மாதிரி ஒடுங்கிப் போச்சு?”


கல்லூரிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தான் நவநீதன். குன்றத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ., படித்துக் கொண்டிருக்கிறான்.

சங்கரின் நண்பனாக சிறுவயது முதல் இருப்பவன்தான் இந்த நவநீதன். இருவருக்கும் ஒரே வயதுதான்.

அடுத்தடுத்த தெருவில் இருவரும் வசித்துக் கொண்டிருந்தாலும் இரு குடும்பத்திற்குமிடையே ஏற்பட்ட குழாயடிச் சண்டையால், இவர்களின் நட்பு தெரு அளவில் முறிந்து போய் விட்டது. இருப்பினும் கிரிக்கெட் விளையாடும் இடங்களில் இவர்களது நட்பு தெடர்ந்து கொண்டுதான் இருந்தது.

நவநீதன் வீட்டிற்கு வந்த போது மாலை 5 மணி. வீட்டிற்கு வந்தவன் சில புத்தகங்களை எடுத்து சைக்கிளில் வைத்துக் கொண்டு நூலகத்திற்கு கிளம்பிச் சென்றான்.

இரண்டு மணி நேரம் கழித்து நூலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் அவனது நண்பன் சீனியைப் பார்த்தான்.
பார்த்ததும் சைக்கிளை நிறுத்தி விட்டு “டேய் மாப்ள... என்னடா ஆச்சி உனக்கு..? ஏண்டா என்ன பார்க்க வரல..?”

“ஸாரி மச்சி... ரொம்ப வேலை அதான் உன்ன பாக்க வர முடியல”

“சரி பரவால்ல விடு... ஆமா, ஞாயித்துக் கிழமை ஆனாலே கிரிக்கெட் விளையாடறதுக்கு கிரவுண்டுக்கு வந்துடுவ? ஏண்டா இப்பல்லாம் வரமாட்டேங்கற..? நீ நல்ல பௌலர் ஆச்சேடா..? நீ இல்லாம டீமே ஒரு மாதிரியா இருக்கு தெரியுமா..?”

“அடப்போ மச்சி... அந்த சங்கர் பய எப்போ என் பௌலிங்கை அடிச்சி கிழிச்சானோ, அதிலிருந்து கிரிக்கெட் மேலேயே வெறுப்பு வந்திடிச்சு... அத விடு... நம்ம பசங்க எல்லாம் எப்படிடா இருக்காணுங்க..?”

“எல்லாம் நல்லா இருக்காணுங்கடா. இப்பெல்லாம் தினமும் காலைல ஆறுமணிக்கே கிரவுண்டுக்கு வந்துடறானுங்க... நீ மட்டும்தான் மிஸ்ஸாகுற...”

“கோச்சுக்காதடா... வேலை அதிகமாயிடிச்சி... ஆமா அந்த சங்கர் தடியன் எப்படி இருக்கான்..?”

“தெரியலடா.. ரெண்டு நாளா கிரவுண்டுக்கே வரல... ஆளயே பார்க்க முடியல… அவன் இல்லாதது எதிர் டீம்ல ஒரு குறையாவே இருக்கு”

“அதானே... ஆப்போசிட் டீம் கேப்டனாச்சே நீ... உனக்கு விளையாட சரியான எதிர் டீம் ஆட்கள் வேணுமே... சரிடா மச்சி.. எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்பறேன். முடிஞ்சா இந்த ஞாயித்துக் கிழமை விளையாடறதுக்கு வர பாக்கறேன்...” என விடைபெற்றுக் கொண்டான் சீனி.

“சரி மாப்ள… அப்ப நானும் வீட்டுக்கு கிளம்பறேன்…” என்றபடியே நவநீதன் தனது சைக்கிளை கிளப்பினான். வழியில் அங்கே, இங்கே என சுற்றி விட்டு, வீடு வந்து சேர்ந்த போது மணி இரவு எட்டு முப்பது ஆகி இருந்தது.

வந்ததும் கைகால்களை கழுவிக் கொண்டு உட்கார்ந்தான். சன் டிவியில் பெப்ஸி உமா போலியான புன்னகையோடு யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

கண்கள் டிவியைப் பார்த்துக் கொண்டிருக்க, நவநீதனின் அம்மா தட்டில் சாதம் வைத்துக் கொடுத்தார்.

டிவி பார்த்தபடியே சாதத்தை நவநீதன் சாப்பிட்டு முடிக்கவும், மணி ஒன்பது என்று அவன் வீட்டு கடிகாரம் மணியடிப்பதற்கும் சரியாக இருந்தது.

காற்று வாங்குவதற்காக வெளியில் வந்த நவநீதனை, பக்கத்து தெருவிலிருந்து வந்த அழுகுரல்கள் கவனத்தை ஈர்த்தது.
'யாரு இந்த நேரத்துல அழுதுகிட்டு இருக்கிறது?' என்று யோசித்தபடியே அங்கே போனான்.

“ஐயோ... என் பேரனை பேய் பிடிச்சிருச்சி போலருக்கே... அடி மகமாயி உனக்கு கண்ணில்லையா...” என்று அழுதபடியே தெய்வங்களை வசைபாடிக் கொண்டிருந்தார் பாவாயி.

கிரிக்கெட் விளையாடும் பையன்கள் அனைவரும் சங்கரின் வீட்டு முன்பு நின்றிருந்தார்கள். அவர்களைப் பார்த்த நவநீதன் “என்னடா எல்லாரும் சங்கர் வீட்டு முன்னாடி நிக்கறீங்க..?’’ என்று கேட்டான்

அங்கே நின்றுருந்தவர்களில் ஒருவனான கார்த்திக், சங்கருக்கு நடந்தவற்றை சுருக்கமாக சொல்லவும், நவநீதன் அதை நம்பவில்லை.

“போடாங்... எதாச்சும் அசிங்கமா சொல்லிடப் போறேன். பேய் பிடிச்சுடுச்சு, பிசாசு அடிச்சிடுச்சின்னு... ஏமாந்தவன்கிட்ட போய் இந்த கதையெல்லாம் சொல்லு…” என்றான் நவநீதன்.

அப்போது சங்கரின் வீட்டு முன்பு, வேகமாக வந்த ஆட்டோ ஒன்று அவசரமாய் பிரேக் போட்டு நின்றது.

அடுத்த நிமிடமே வீட்டின் உள்ளேயிருந்து சங்கரை வேதாசலமும், அவனுடைய மாமா ராமுவும் கைதாங்கலாக ஆட்டோவிற்கு அழைத்து வந்தார்கள்.

சங்கரைப் பார்த்த நவநீதன் முகத்தில் ஆயிரம் அதிர்ச்சி ரேகைகள் ஓடின. கிரிக்கெட்டில் இவன் பேட் செய்ய வந்தால் ஒரு மாமிச மலை பேட் செய்வது போல் வருவான். இரும்பு போல இருக்கும் கார்க் பந்தை அனாசயமாக சிக்ஸருக்கு விரட்டி அடிப்பான். இவன் விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் சிரமம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் போன்று இருந்தவன், இப்போது பார்பதற்கு ஓமக்குச்சி நரசிம்மன் போல ஒட்டிப் போய் தெரிந்தான்.

அவனைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீளாத நவநீதன், அருகிலிருந்த கார்த்திக்கிடம் “இவனுக்கு என்னாச்சிடா... பாடிபில்டர் மாதிரி இருந்த இவன் உடம்பு, ரெண்டே நாள்ல இப்படி பல்லி மாதிரி ஒடுங்கிப் போச்சு?”


 “அதான் சொன்னேன்ல அண்ணா... எல்லாம் பேய் பண்ணற வேலைண்ணா…” என்று திகில் கலந்த குரலில் பதில் அளித்தான் கார்த்திக்.

“நான் இதை நம்பமாட்டேன். சங்கரை இப்போ எங்கடா கூட்டிகிட்டு போறாங்க?”

“தேவியாக்குறிச்சியில ஒரு பாய் இருக்குறாராம். அவர் இந்த மாதிரி பேய்களை ஓட்டுறதுல கில்லாடியாம். அவர்கிட்ட போனா சரியாயிடும்னு அங்கே போகப் போறாங்கண்ணா…” என்றான் கார்த்திக்.

“அப்ப ராமனாதன்கிட்ட காண்பிச்சது என்னாச்சு..?”

“அட… அவன் டாக்டரா இருந்தாதானே .. அவனே கம்பௌண்டரா இருந்தவன்... அவன் கொடுத்த ஊசி மருந்து எதும் வேலைக்காகலையாம்..?” என்றான் கார்த்திகிற்க்கு அருகிலிருந்த பெரியசாமி.

“அவனுக்கு பேய் பிடிச்சிருக்கா இல்லையான்னு நான் நேர்ல பார்த்து தெரிஞ்சுக்கணும். அதனால நானும் இவங்க கூட போறேன். என் அம்மாகிட்ட எவனும் சொல்லிடாதிங்கடா...” என்றபடி நவநீதனும் ஆட்டோவிற்குள் ஏறப் போனான்.

ஆட்டோவிற்குள் சங்கரின் அம்மா, சங்கர், சங்கரின் சித்தி சிவகாமி, ஆகியோர் அமர்ந்திருக்க, “நானும் துணைக்கு வரேன்…” என்றபடி அவர்களுடன் புற ஓரத்தில் நவநீதன் உட்கார்ந்து கொண்டான்.
ஆட்டோவின் சீட் பகுதி முழுதும் இவர்களனைவரும் உட்காருவதற்கே சரியாக இருந்தது. இதனால் வேதாசலத்திற்கு உட்கார இடமில்லாமல் போனதால், கால் வைக்கும் இடத்தில் வேதாசலம் அமர்ந்து கொண்டார்.

கீழே உட்கார்ந்தவர் சங்கரின் கைகளைப் பிடித்த படி, அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, ஆட்டோ விர்ரென்று கிளம்பியது.

டிவிஎஸ்ஸில் ராமுவும், அவனுடைய நண்பன் வெள்ளியங்கிரியும் ஆட்டோவை பின் தொடர்ந்து வந்தார்கள்.

சேலம் டூ கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலையில் திரும்பிய ஆட்டோ, கள்ளக்குறிச்சி இருக்கும் திசையில் ஓட ஆரம்பித்தது. தேவியா குறிச்சிக்கு குன்றத்தூரிலிருந்து சரியாய் 17 கிலோ மீட்டர் தூரம். ஆட்டோவில் போனால் 25 நிமிடத்தில் அந்த ஊரை தொட்டு விடலாம்.

தேவியாக்குறிச்சியை நோக்கி ஆட்டோ அந்த இரவு நேரத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்க, டிவிஎஸ்ஸும் விடாமல் ஆட்டோவை பின் தொடர்ந்தது.

சங்கரின் நிலையைக் கண்டு வேதாசலம் அழ ஆரம்பித்தார். அதைக் கண்டு கமலம்மாளும் அழ, சங்கரின் சித்தி “என்ன மாமா நீங்களே இப்படி அழுவலாமா... பாருங்க அக்காவும் அழுவுது.. எல்லாம் சரியா போயிடும் அழாதீங்க...’’ என்று தேற்றினாள்.

சிவகாமியின் ஆறுதலால் சற்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டார் வேதாசலம். ஆனால் அவரது கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருந்தது.

இரண்டு கிலோ மீட்டர் தூரம் கூட ஆட்டோ போயிருக்காது வேதாசலம் திடீரென்று விகாரமாக சிரிக்க ஆரம்பித்தார். அவர் கண்ணீல் குரூரம் கொப்பளித்தது. அவர் தன் பல்லை நறநறவென்று கடிக்க ஆரம்பித்தார்.

நவநீதன் முதற்கொண்டு அனைவரும் திகிலில் உறைந்தனர்.

அப்போது..?

6 comments:

யூர்கன் க்ருகியர் said...

ஹலோ ..ஏன் இப்படி பயமுறுத்துறீங்க ??

மோகனன் said...

வாங்க யூர்கன்

இது என் வாழ்வில் கண்ட சம்பவம்... பயப்படாதீங்க...


வருகைக்கு நன்றி யூர்கன்..!

karthi said...

anna 8th part ah release pannunga ...pls ..its interesting.. by karthikeyan

மோகனன் said...

கூடிய விரைவில் 8-வது பாகம் வெளிவரும்..

தங்களின் காத்திருப்புக்கு நன்றி..!

karthi said...

anna ippadi 8th partum suspense la muduchikangale............

மோகனன் said...

அதுதான் தொடர்கதையின் சிறப்பு நண்பா