Monday, July 28, 2008

தொடர் குண்டு வெடிப்புகள்- மத்திய அரசின் கையாலாகத்தனம்..!

பெங்களூரில் தொடர் குண்டு வெடிப்பு... அஹமதாபாத்தில் தொடர் குண்டு வெடிப்பு... 45க்கும் மேற்பட்டோர் பலி... 100 மேற்பட்டோர் படுகாயம்... நாம் என்ன இந்தியாவில் இருக்கிறோமா.. ஈராக்கில் இருக்கிறோமா... எங்கே போய்க் கொண்டிருக்கிறது நம் தேசம்.

''........தண்ணீர் விட்ட வளர்த்தோம்..........
எங்கள் கண்ணீரல் காத்தோம்...'' என்று அன்றே முழங்கினான் முண்டாசு கவிஞன் பாரதி. இன்று அத்தேசத்தை வெடிகுண்டுகளுக்கும், அந்நிய சக்திகளின் ஊடுருவல்களுக்குமல்லவா இடம் கொடுத்து விட்டோம்...

அமைதிப் பூங்காவில் வெடிகுண்டு... அப்பாவி மக்கள் உயிரிழப்பு... இதற்கு மானங்கெட்ட மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததோடு அடங்கி விட்டது. அட அயோக்கிய அரசே... உங்கள் கண்டனம் யாருக்கடா வேண்டும்... எந்தன் சகோதரர்கள் அங்கே வெடிகுண்டிற்கு பலியாகி விட்டனரே... யார் அவர்களை திருப்பித் தருவார்கள்... உனது கண்டனம் அவர்களைத் திருப்பித் தருமா..? இல்லை உந்தன் கண்டனம்தான் அந்த தீவிரவாதிகளை திருந்தச் செய்து விடுமா..?

நல்லாட்சி செய்வீர்கள் என்றுதானே 100 கோடி மக்களில் 60 கோடி மக்கள் உங்களை ஆட்சியில் ஏற வைத்தனர்... மக்களைக் காக்க வேண்டிய நீங்கள்... மனிதர்களை இரையாக்கி விட்டீர்கள்..? நாங்கள் என்னடா பாவம் செய்தோம்...

இதற்கு 'மத்திய உளவுத்துறை செயலிழந்து விட்டது' என்று எதிர்கட்சியினர் அறிக்கை விட்டுள்ளனர். அவ்வளவே... அவர்களுக்கு தேவை அந்த அரியணை...

ஐயா.. உளவுத்துறை செயலிழக்கவில்லை ... அவர்களுக்கு (ஆளும் மத்திய அரசிற்கு) சாதகமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க தொண்ணனுடன், ஆளும் கட்சி அணுசக்தி கூட்டு, பொறியல், அவியல் என்ற விவகாரத்தில் பங்கு போட்டது. இதில் சம்பந்தி கிடைக்கவில்லையோ அல்லது சம்பங்கு கிடைக்கவில்லையோ (அவர்களுக்கே வெளிச்சம்) இடதுசரிகள் பின்வாங்கிவிட்டனர்.. ஆதரவு மறுத்தோம் உமக்கு... ஆட்சியை விட்டு இறக்கு... என வாய்ப்பந்தலிட்டனர்.

ஆளும்கட்சி விட்டார்களா... நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவோம் என்றார்கள்... அங்கே செயலாற்றியது உளவுத்துறை.. எந்த அமைச்சர் என்ன செய்கிறார்.. அவர் யாருக்கு சாதகமாக இருக்கிறார்... ஒருவேளை அரசுக்கு எதிராக இருந்தால்... அவரது (சுய) தேவைகள்..(?!) என்ன..? எப்படி அவர்களை ஆளுங்கட்சி தரப்பில் திருப்பலாம் என்று அத்துறையினரை முடுக்கி விட்டு வேலை வாங்கினர்.

விளைவு... ஆளுங்கட்சி பல கோடிகளை கொட்டியது... வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.. அவர்களை நம்பி வாக்களித்த ஏமாளி மக்களுக்கு குண்டுவெடுப்புகள் மூலம் வாய்க்கரிசி போட்டது.

ஆளுங்கட்சியின் கைப்பாவைகள்தானே அரசியந்திரங்கள்.. அப்புறம் எங்கே... அந்நியர் சதி, ஊடுருவல்... குண்டு வெடிப்பு... தீவிரவாதச் சதி... இவற்றையெல்லாம் கண்காணிக்கப் போகிறார்கள்... அவர்களை கையும் களவுமாக பிடிக்கப் போகிறார்கள்...

'ஊசி இடம் கொடுத்தால்தான்... நூல் நுழைய முடியும்' என்பது நமது மூத்தோர்களின் (பட்டறிவால் கிடைத்த) சொலவடை. அதுபோல அந்நிய சக்திகளுக்கு இந்திய மண்ணில் இடமளித்தது முதல் தவறு... அவர்களை சுதந்திரமாக உள்ளே நடமாட விட்டது அதைவிட மாபெரும் தவறு...

விளைவு தொடர் குண்டு வெடிப்புகள்... கோவை, மும்பை, இந்திய பாராளுமன்றம், காஷ்மீர், பெங்களூர், அஹமதாபாத் என குண்டுவெடிப்பு சம்பவங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன.

பெங்களூரில் கட்டவிழ்து விடப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு நடந்ததும் அடுத்த நிமிடமாவது சுதாரித்திருக்க வேண்டாமா... இவைகளை ஏன் செய்யவில்லை... என்னாயிற்று உளவுத்துறைக்கு... காவல் துறைக்கு..? அவர்களை சரியான முறையில் வேலைவாங்கும் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் என்னாயிற்று..?

'அட போங்க தம்பி.. அவனுங்க அரசாங்கத்தை காப்பத்தறதுக்கே... அவனுங்களால முடியல... ஆதரவு இல்லை..அதான் தொல்லை...ன்னு அமைச்சர்களை சந்தோஷப்படுத்தறானுங்க.. மக்களை காப்பத்தறதாவது... போப்பா...' என்று எனது பக்கத்து வீட்டு பெரியவர் இரு தினங்களுக்கு முன்பு சொன்னது இன்னும் என் மனதில் அசிரிரியாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அதன் விளைவு... அடுத்த தாக்குதல் அஹமதாபாத்தில்... அப்பாவி மக்கள் கைசிதறி, கால் சிதறி... எதனால் இறக்கிறோம் என்றுணரும் முன்னே மரணவாசலுக்குள் இழுத்துக் கொள்ள(ல்ல)ப்படும் அவலம்...எல்லாம் அரசின் மெத்தனத்தால் வந்ததுதானே...

மக்களைக் காப்பாற்றவே மக்களாட்சி... அழிப்பதற்கு அல்ல... உளவுத்துறையை ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு திருப்பி விடுங்கள்... அந்நியர்களை இந்திய மண்ணில் கால் அல்ல அந்த கேடு கெட்ட நாய்களின் நிழல் கூட நம்மண்ணில் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்... மீறினால் பார்ததும் அவர்களைக் கொல்லுங்கள்...

என் மனசாட்சியே என்னை கேள்வி கேட்டது... 'அட மடையா... நாடாளுமன்றத்தையே குண்டு வீசித்தாக்கிய கொலைபாதகன் அப்சல் குருவுக்கு ஆயுதம் தாங்கிய காவல் வைத்து, ஊட்டமுடன் இருக்க கறி சோறு இட்டு காத்து வருகின்றனர்...

இம்மாதிரியான ஈனப்பன்றிகளை இன்னும் வைத்திருக்கிறது இந்த அரசு... இவன் இங்கு செய்தது போல் சவுதியிலேயோ, குவைத்திலேயோ குண்டுவெடிப்பை நிகழ்த்தி, மாட்டிக் கொண்டால்... இன்னேரம் அவனை விட்டு வைத்திருப்பார்களா.... அவனை உப்புக்கண்டம் போட்டு கைமா (அ) மவுத்தாக்கியிருப்பார்கள்... இந்தியாவாயிற்றே... போடா....

அவர்களுக்கு பிடிக்காதவர்களை என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுத் தள்ளுவார்களே தவிர... தீவிரவாதிகளை அல்ல... பாவம் நமது தேசம் தாங்கிகள் (எமது இராணுவத்தினர்)... கடுங்குளிரென்றும் பாராமல், சூறாவளியென்றும் பாராமல்... கார்கில், காஷ்மீர் என அனைத்து பகுதிகளையும் தமது இன்னுயிரையும் ஈந்து காத்து வருகின்றனர்...

இங்குள்ள ஆட்சியாளர்களோ.. அவர்களை காவு கொடுப்பது மட்டுமின்றி அப்பாவி மக்களையும் காவு கொடுக்கின்றனர்... அவனவன் மடி நிறைந்தால் போதும்.. அடுத்தவன் நிலை எப்படி ஆனால் என்ன என்ற நிலைதான் இன்றைய ஆட்சியாளர்களிடம்...' என்று குமுறுகிறது.

நாம் இதுவரை வெற்றிகரமாக சோதனை செய்து வந்த (அக்னி) ஏவுகணைகளின் வேகத்தை மிஞ்சியது... விலைவாசி... பெருந்தனக்காரனின் வயிறு போல் பணவீக்கம்... சோம்பித் திரியும் ஓநாய்கள் போல் அரசியல் வாதிகள்... அதில் அண்ட நினைக்கும் அரசு இயந்திரங்கள்...

ஏழை, பணக்காரன். உயர்ந்தவன், தாழ்ந்தவன். வேலை உள்ளவன், வேலை இல்லாதவன்... என ஏற்றத்தாழ்வு நிலை இந்தியாவெங்கும் நிறைந்திருக்கிறது... அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. 8 மணி நேரம் குளுகுளு அறையில் இருந்தபடி அந்நிய நாட்டிற்கு பணிசெய்கிறவருக்கு 5 முதல் 6 லகரத்தில் சம்பளம். வாரம் இருநாள் விடுமுறை.. உல்லாச வாழ்க்கை...

24 மணி நேரமும் மக்களைக் காக்கும் (?) காவல்துறை நண்பர்களுக்கு 4 லகரத்தில் சம்பளம்... விடுமுறையா... மூச்..... (அதிலு பலர் மாமூல் வாங்கிக் கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது தனிக்கதை...)

இப்படி இருந்தால் காவல் துறை ஏன் கள்ளத்துறையாக மாறாது... கயவர்களை விட்டுவிட்டு கண்ணியமானவர்களை அடிக்காது... அவர்களும் மனிதர்கள்தான்... அவர்களுக்கு தேவையானதை செய்யுங்கள்... அவர்களுடைய சேவை மேம்படும்.

அந்நிய நாட்டு சக்திகள் உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டாம். எவ்வளவு அந்நிய செலவாணி கொட்டுகிறது என்றாலும் யாரையும் அனுமதியாதே... தீவிரவாதிகளை அழிக்க ஆயுதம் தூக்கு... விரைவான விசாரணை.. உடனடி தீர்ப்பு... நிறைவேறட்டும் தண்டனை.

ஒரு அப்சல்குருவை விட்டு வைத்ததன் விளைவு.. இன்று பல அப்சல் குருக்கள் இந்தியத்தாயின் மடியில் வெடிகுண்டுகளை வீசியிருக்கின்றனர்... இவர்களை எப்படி ஒழிப்பது.. அழிப்பது...

இவ்விஷக்கிருமிகள் செய்யும் வேலையால், இவர்களது சமுதாயமே தலைகுனிகிறது... எங்கே நிமிரும் இந்தியா... எப்போது வல்லரசாகும்... என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை உங்கள் வசதிக்கேற்ப நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்...

வாழ்க பாரத அரசியல்... வளர்க அதன் புகழ்... வாழ்க மக்கள் (நெற்றியில் பட்டை) நாமம்

No comments: