Thursday, July 24, 2008

ஒரு பேதையின் சபதம்

உன்னைப் போல் நானும்
பிறருடன் சிரித்துப் பேசத்தான் ஆசை..!
படபடக்கும் பட்டாம்பூச்சியாய்
பறக்கத்தான் ஆசை..!
குயிலை விட அழகாக
பாடத்தான் ஆசை..!
பி.டி.உஷாவைப்போல்
ஒலிம்பிக்கில் ஓடத்தான் ஆசை..!
இத்தனையும் என்னுள்
விதைத்துக் கொண்டிருக்கிறேன்..!
'கேவலம் நீ ஒரு பெண்தானே'
என்று நீ சொன்ன அந்த
ஒ(தி)ரு வார்த்தையால்
இவ்வளவு மாற்றமும்..!

No comments: