Wednesday, August 06, 2008

பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.20 லட்சம் கள்ளநோட்டுகள்: ரிசர்வ் வங்கி கண்டுபிடிப்பு

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலம் ஒன்றில் ரூ.20 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் இருந்ததை, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகள்தான் நேபாளம் வழியாக இந்தியாவில் நுழைந்து கள்ளநோட்டுக்களை அதிகளவில் புழக்கத்தில் விடுவதாக சந்தேகம் ஏற்பட்டது. இதனால் நேபாள எல்லை அருகே உள்ள உத்தரப்பிரதேசத்தின் 7 மாவட்டங்களில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலங்களில் உள்ள பணத்தை சோதனை செய்யும்படி ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து உத்தரப்பிரதேசம் சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் துமாரியாகஞ்ச் கிளையில் உள்ள பெட்டகத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இருதினங்களுக்கு முன் சோதனை நடத்தினர். அதில் மொத்தம் ரூ.100 கோடி பணம் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருந்தது. அதிலிருந்து ரூபாய் நோட்டு கட்டுக்கள் முழுவதையும் சோதனை செய்ததில் ரூ.20 லட்சம் அளவுக்கு கள்ளநோட்டுக்கள் இருந்தது தெரிந்தது.

இவை எல்லாம் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள். மேலும் ரூ.70 லட்சம் பணம் குறைவாக இருந்தது. இந்தப் பணமும் கள்ளநோட்டாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சோதனைக்கு முன்பே, இவை அகற்றப்பட்டிருக்கலாம் என பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

வங்கி ஊழியர்களின் கவனக் குறைவால் கள்ளநோட்டுகள் வந்ததா அல்லது வங்கி அதிகாரிகளே இதற்கு உடந்தையா என்பது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறதாம்.

அடங்கப்பா... வங்கியுலுள்ளவனுங்க அனுமதி இல்லாம இது நடக்காதுடா. 20 லட்சம் மதிப்புள்ள நோட்டுகள் கவனக் குறைவா வைக்க முடியாது. நாம 500 ரூபாயை குடுத்தாலா பத்து தடவை திருப்பி திருப்பி பாப்பானுங்க.. இவனுங்களாவது...? ஏமாறுவதாவது... வங்கியிலுள்ள சொங்கிப்பயலுகளை பிடிங்கப்பா... இது புதுவித ஹவாலாவால்ல இருக்கு... நம இனிமே சாக்கிரதையா இருக்கணும் ஏ.டி.எம்.ல கள்ளநோட்டை விட்டுட்டு நம்மள களி தின்ன வச்சிடுவானுங்க....

உத்தரபிரதேச போலிசு மாமா... அவனுவளை சரியா புடிச்சி களி தின்ன வைப்பிங்களா.. இல்ல காசு வாங்கிகிட்டு கமுக்கமா நீங்களும் ரெண்டு கட்டு எடுத்துகிட்டு, அத்தோட அதை அமுக்கிடுவீங்களா..?

வைகைப்புயலு வடிவேலு சொல்ற மாதிரி... இப்படி ஆட்டைய போடுறதுக்கு ரூம் போட்டு யோசிப்பாணுவலோ...?

No comments: