Wednesday, August 13, 2008

தங்கம் வென்ற சிங்கத்திற்கு வாழ்த்துக் கவிதை..!



இந்தியாவின் இதயத்தை
இன்பக்கடலில் ஆழ்த்திய
இனிய தங்கமே..!

நூற்றிப்பத்து கோடி மக்களின்
தங்கம் வெல்லும் ஆவலை
தனியாளாய் நின்று
வென்று வந்த சிங்கமே..!

ஒலிம்பிக் என்ற உலக மேடையில்
இந்தியாவின் பெருமையை
இருத்தி வைத்த தங்கமே..!

உத்திரகண்ட் பெற்றெடுத்த உதயமே
உழைப்பின் சிகரமே
சீனத்தில் முத்திரை பதித்த சிங்கமே..!

உந்தன் சாதனையால்
இந்தியத்தாய் பெருமிதம் கொள்கிறாள்
உன் திறமைக்கு வாழ்த்து சொல்கிறாள்..!

நீன் புகழ் வாழி... நீ நீடுழி வாழி...
என வாயார வாழ்த்துகிறாள்...
அதனோடு எங்கள் வாழ்த்தும்...

உந்தன் உழைப்பால் நாங்களனைவரும்
பெருமையடைகிறோம்...
வாழ்க நீ எம்மான்..!

--@--@--@--@--@--@--

ஒலிம்பிக் குறித்த எனது முந்தைய பதிவுகள்...

*தெரிந்து கொள்ளுங்கள்: ஒலிம்பிக் சின்னம், கொடி, கீதம்......

*இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா..!

*பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி: இன்று பிரம்மாண்ட தொடக்கவிழா

4 comments:

மஹாராஜா said...

nalla iruku

NaseeMoga said...

fine...

மோகனன் said...

வருகைக்கும்... வாழ்த்திற்கும் நன்றிகள்...

மோகனன் said...

நன்றிங்க பானு...