Thursday, December 30, 2010

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர் மூன்றாவது உலக மகாயுத்தமே..!



முதல் நடந்த இரு மகாயுத்தங்களும் இரு நாடுகளிடையே ஆரம்பமாகி பல நாடுகளிடையே பரவிய பலமுனைப் போர்களாகும். ஆனால், தமிழருக்கு எதிரான போரோ தொடக்கத்தில் முன்னைய போர்களைப்போல், இரு தேசங்களுக்கான போராக ஆரம்பித்தாலும் தமிழர் தேசத்துக்கு எதிராக சிங்கள தேசத்துடன் பல சக்திவய்ந்த நாடுகளின் பங்களிப்புடனேதான் இப்போர் முடிவு பெற்றது.

சிறீலங்கா நாட்டின் தலைவர் மகிந்தா இராஜபக்சேவின் போருக்கு உதவிசெய்த இருபது நாடுகளுக்கான நன்றி உரை மற்றைய நாடுகளின் எண்ணிக்கையை தெளிவாக்கியதுடன் அவர்களின் பங்களிப்பையும் உறுதிப்படுத்தியுள்ளது.

முதலாவது உலகமகாயுத்தம் பெரும்பாலும் ஐரோப்பாவை மையமாகக் கொண்டே நடைபெற்ற  போர். இப்போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, கங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளும் எதிராக நின்று போரிட்டன. இங்கு இயந்திரத் துப்பாக்கிகள், பீரங்கிகள்நச்சு வளியம்வான்வழிப் போர்முனை, நீர்மூழ்கிக் கப்பல்கள் என்பன போரின் தாக்கத்தை மேலும் அதிகரித்தன.

இருபது நாடுகள் முக்கிய பங்கை வகுத்த இரண்டவது உலகமகாயுத்தம் உலகம் தழுவிய அளவில பல முனைகளில், பல கோணங்களில் நடைபெற்ற யுத்தமாகும். சீனாவின் மீது ஜப்பானின் படையெடுப்பு, ரஷ்யாமீது ஜப்பானின் தாக்குதல், அமெரிக்கா மீது ஜப்பானின் வான்தாக்குதல், ஜெர்மனி மீதான நேசநாடுகளின் போர், ஜப்பான் மீதான அமெரிக்காவின் அணுக்குண்டு வீச்சு போன்றவை இப்போரை உக்கிரமாக்கியது, உலகமயமாக்கியது.

ஆனால் தமிழருக்கு எதிரான போரோ எந்த யுத்தத்தையும் விட நாசகாரமானதும், கோரமானதும், கொடியதுமாகும். இன அழிப்பை மையமாகக் கொண்ட இப்போர் கடந்த இரண்டு உலகமகா யுத்தங்களையும்விட பல மடங்கு போர்க்குற்றங்கள் நிறைந்த, மனித உரிமைகள் மீறப்பட்ட யுத்தமாகும். இந்த யுத்தம் மனித உரிமையை மதித்து நடக்கும் நாடுகளுக்கும் அதை வேண்டிநிற்கும் அமைப்புகளுக்கும் கிடைத்த சவுக்கடியாகும்.

விஞ்ஞான வளர்ச்சியின் உதவியுடன் நவீனமயமாக்கப்பட்ட இரண்டாவது மகாயுத்ததில் பயன்படுத்திய ஆயுதங்களும், சக்திவாய்ந்த நாடுகளின் இன்றைய நூற்றாண்டிற்கான புதியரக ஆயுதங்களும், மாற்றுப்படையின் நடவடிக்கைகளை, நடமாட்டங்களை அவதானிக்கவல்ல நவீன கருவிகளும் தமிழருக்கு எதிரான இப்போரை இரு உலக மகாயுத்தங்களையும்விட உக்கிரமானதாக ஆக்கவில்லையா?

அது மாத்திரமல்லஎந்தப்போரும் இதுவரை முகம் கொடுக்காத அளவிற்கு தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை சரமாரியாகப் பொழிந்ததும், உலகம் கண்டிராத அளவில்  நச்சு வாயுக்களையும், இரசாயனத்தையும் கட்டுப்பாடின்றி அப்பாவித் தமிழர் மீது பாவித்த இப்போர், முன்னைய போர்களைவிட கோரமானதாகச் சித்தரிக்கவில்லையா?

இரண்டாவது மகாயுத்ததில் ஜெர்மனி மீது போர் தொடுத்த நேசநாடுகள், மனித உரிமைக்கு மதிப்பே கொடுக்காத  ஜெர்மனியில் மனித உரிமைகளை மதித்துப் போர்புரிந்தார்கள்ஜெர்மன் நாட்டு மக்களையோ, அவர்கள் உடமைகளையோ, அல்லது கலாச்சாரத்தையோ அழிக்கவேண்டும் என்று அவர்கள் போர்தொடுக்கவில்லைஜெர்மன் ஆட்சியில் நடந்த நாசகாரச் செயல்களை நிறுத்தவும், நீதியை நிலைநாட்டவும்தானே போர்புரிநதார்கள்.

ஆனால், எமக்கெதிரான போரில் தமிழ் இனத்தையும் அவர்கள் வளங்களையும் அழிப்பதே சிங்கள அரசின் அப்பட்டமான எண்ணம், மாற்றுக் கருத்தில்லாத குறிக்கோள். குண்டுவீச்சைத் தாங்கமுடியாமல் கிடங்குகளில் தங்கி இருந்த அப்பாவித் தமிழர்களை உயிரோடு மண்மூடிப் புதைத்ததும்பிடிபட்டவர்களை எரிபொருள் ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்ததும் இப்போரை நாசகாரமானதாகக் காட்டவில்லையா?

சுமாலியாவில் கற்பழிப்பில் பட்டம் பெற்ற சிங்கள இராணுவத்தின் கற்பழிப்புகள் இப்போரின் கோரத் தன்மையை எடுத்துக் கூறவில்லையா? தமிழருக்கு எதிரான இப்போரின்போது நடந்த கற்பழிப்புகள்  இதுவரை நடந்த எல்லாப் போர்களிலும் இடம்பெற்ற கற்பழிப்புகளை விடப் பல மடங்கு என்பதை நன்கு அறிந்த உலகிற்க்கு இப்போர் கொடியதாகத் தெரியவில்லையா?

இப்போரில் பங்கு கொண்ட முக்கிய நாடுகள் சிறு பிரிவுகளாகப் போரிடும்போது அதற்குப் பெயர் உலகமகாயுத்தம் என்றால், ஏறக்குறைய அத்தனை நாடுகளும் ஒன்றாக இணைந்து ஒரு தேசத்தின்மீது தொடுத்த போருக்குப் பெயர் யுத்தமாபோரில் பங்குகொண்டவர்களும், அந்தப் போருக்கு பெயரை வைப்பவர்களும் சக்திவாய்ந்த நாடுகள்தான் என்றால் அவர்கள் என்ன பெயர் வைத்தாலும் சரியா? அதை நாமும் மற்றய நாடுகளும் ஏற்கவேண்டுமா?

சக்தி வாய்ந்த நாடுகளின் புதிய ரக ஆயுதங்களின் பரீட்சைக் களமான தமிழர் தேசத்தில் நடந்த இப்போரரில் அந்த வீர வேங்கைகளை வெல்லமுடியாமல் இருபத்தொரு நாடுகளும் ஓர் அணியாக நின்று, வேங்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டதும், இறுதி வேளையிலும் 6,000 இராணுவத்தினரைக் கொண்று 100,000 எதிரிகளைத் திணறவைத்த இந்த யுத்தம் இரு மகாயுத்தங்களையும்விட எந்த விதத்தில் குறைந்தது?

இது ஓர் ஈழப் போராயிருந்திருந்தால் வீரத்துக்கு வித்திட்ட எம் இனிய உறவுகள் இந்தக் கோழையர்களைப் பந்தாடியிருப்பார்களே..! இது ஓர் உள்நாட்டுப் பிரச்சனையென்றால் தமிழர் தேசத்துக்குள் வர சிங்கள அரசு அனுமதி கோரியிருக்குமா? இப்போர் இரண்டு தேசங்களுக்கான போர். போரில் தம்மால் வெல்லமுடியாததால் மாற்று நாடுகளைத் தன் மாயவலையில் சிக்கவைத்து தீவிரவாதம் என்ற பெயரில் சிங்களத் தேசம் நடாத்திய நயவஞ்சகப் போரல்லவா?

இரண்டு மகாயுத்தங்களை விட பலமடங்கு ஆயுதபலத்தையும், நவீன போர்க் கருவிகளையும், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும், நச்சு வாயுக்களையும், இரசாயனத்தையும், கற்பழிப்புகளையும், அப்பாவி மனிதரை மண்மூடி உயிரோடு புதைத்தது போன்ற மனித அவலங்களையும், ஹிட்லரே செய்யாத சித்திரவதைகளையும் கொண்ட இருபத்தொரு நாடுகள் இணைந்து நடாத்திய ஈழத் தமிழருக்கு எதிரான போர், எப்படிப் பார்த்தாலும் மூன்றாவது உலகமகா யுத்தமே. இதை யாராலும் மறைக்கவோ அல்லது காரணம் காட்டி மறுக்கவோ முடியாது.

இன அழிப்பை நிறுத்த இரண்டாவது உலகமகாயுத்தமென்றால், ஒரு இனத்தை அழிப்பதற்கு மூன்றாவது உலகமகா யுத்தமா? அதுவும் மனிதாபிமானம் நிறைந்த இன்றைய உலகிலா? மனித உரிமைக்கு முதலிடம் கொடுக்கும் இந்த நூற்றாண்டிலா?

அரச பயங்கரவாதத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதும் ஓர் அறவழிப் போராட்டம்தான் என்பதை உணராத உலகின் தவறான முடிவுதானே இந்தச் சக்திவாய்ந்த நாடுகளின் சிங்களத் தேசத்துடனான சங்கமம். உரிமை வேண்டிப் போராடிய ஓர் இனத்தின் நியாயமான போர் உலகமகா யுத்தமாக உருவெடுத்ததற்கும்மனித உரிமைக்கும் மனிதாபிமானத்திற்கும், ஒரு  சவாலாக மாறியதற்கும் காரணம்தான் என்ன?

அநீதி செய்தால் மட்டும் பாவமல்ல, அநீதி செய்வதைப் பார்த்துக்கொண்டிருப்பதுமே பாவம் என எண்ணும் இந்த நூற்றாண்டில் இப்படியான ஓர் இன அழிப்பாஉலகம் கண்டிராத ஓர் மனிதப் பேரவலமா? அதுவும் சக்திவாய்ந்த நாடுகளின் பங்களிப்புடனா இந்தத் தவறு நடந்தது? இதற்கான பரிகாரம்தான் என்ன?

உலகத் தலைவர்களே! நீதி வேண்டி நிற்கும் தொண்டு நிறுவனங்களே, அமைப்புக்களே!

நீதிக்காகப் போராடினோம், நியாயத்தின் வழி நின்றோம். ஏறக்குறைய 32 ஆண்டுகள் மீண்டும் எம்மை நாமே ஆண்டோம். ஆக்கிரமிக்க வந்த இராணுவத்தை மட்டும்தான் அழித்தோமேயல்லாமல் சிங்கள மக்களையலல. நாம் சிங்களவர்களைப்போல் மாற்றாரின் வேதைனை கண்டு மகிழ்பவர்களுமல்ல, மாறறு இனத்தின் அழிவுகண்டு ஆனந்தப்படும் அரக்கர்களுமல்ல.

வீரம் வேறு தீவிரவாதம் வேறு என்பது உங்களுக்கு விளங்காத விடயமா? தீவிரமே செய்யாத எம்மைத் தீவிரவாதிகள் எனக்கூறி உலக அரங்கிலே எமக்குக் கரி பூசினீர்களே, இது நீதியாபாராமுகம் காட்டிய நாடுகள் ஒருபுறமாகவும், எமது திறமையும், வளர்ச்சியும் கண்டு வெதும்பிய நாடுகள் மறுபுறமாகவும் நின்று எம் வீரத்துக்கு விலை பேசினீர்களே, எமது நீதிக்கான போரை ஊனப்படுத்தினீர்களே... இது நியாயமா?

உங்கள் செயலால், வெற்றியின் விளிம்பிலே நின்ற ஒரு கண்ணியமான இனம், நீதிக்காக நியாய வழியில் போராடிய ஒரு தேசம் இன்று நிலைகெட்டு நிற்கிறதே. இவர்களின் இன்றைய நிலைக்கு நீங்களும்தானே காரணம். ஈழத்தமிழர்கள் மீண்டும் உரிமையுடன் வாழ, அவர்கள் வாழ்வை வளமாக்க உதவ வேண்டியது உங்கள் கடமையல்லவா? இதில் உங்களுக்கும் பங்குண்டல்லவா?

போரின்போது பாராமுகம் காட்டிய அரசுகளின் தலைவர்களும், தெரிந்தோ தெரியாமலோ இப்போரில் பங்குகொண்ட நாடுகளும், அநீதி கண்டும் ஒன்றுமே செய்யமுடியாமல் தவித்த மனித உரிமைக்கான அமைப்புகளும், போர்க்குற்றத்துக்கான நிறுவனவங்களும், ஜக்கிய நாடுகள் சபையும் தமிழர்களுக்கு உதவக் கடமைப் பட்டவர்களே.

அர்த்தமுள்ள அரசியல் போரை நடாத்தும் 'நாடு கடந்த தமிழீழ அரசு'டன் இணையுங்கள். நடந்ததை மறப்போம், நடக்க வேண்டியதைச் செய்வோம். போர் குற்றம் புரிந்தவர்களை, மனித உரிமைகளை மீறியவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம்.

உங்கள் இராஜதந்திர நகர்வும், எங்கள் கண்ணியமான செயற்பாடும் ஈழத்தமிழரின் அபிலாசைகளை நிறைவு செய்யட்டும். நன்றி.

கலாநிதி ராம் சிவலிஙம்
பிரதிப் பிரதமர், கல்வி, கலாச்சாரம், உடல்நல மந்திரி - நாடுகடந்த தமிழீழ அரசு

Monday, December 20, 2010

சென்சுரியனில் 50-வது செஞ்சுரி அடித்து உலக சாதனை படைத்தார் சச்சின்..!


செஞ்சுரியன்: சர்வதேச டெஸ்ட் அரங்கில் 50 வது சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை நேற்று (19.12.2010) சச்சின் தெண்டுல்கர் படைத்தார்.

தென் ஆப்ரிக்காவிலுள்ள செஞ்சுரியன் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை சச்சின் படைத்தார்.

(இந்த சென்சுரியன் மைதானத்தில் அதன் பெயருக்கேற்றாற் போல செஞ்சுரி அடித்து செஞ்சுரியில் சாதனை நிகழ்த்தியிருக்கிறார் நமது சச்சின்...)

தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டைன் பந்து வீச்சில் ஒரு ரன் எடுத்து, சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 50வது சதத்தை அடித்து வரலாறு படைத்தார். (197 பந்துகளை சந்தித்து 1 சிக்ஸர், 12 பவுண்டரிகள் அடித்து 100 ரன்களை எட்டினார் சச்சின்...)

தொடரும் சச்சினின் சாதனை பயணம்...

1989ல் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். கடந்த 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவர் நிகழ்த்திய சில முக்கிய சாதனைகள்: 

@ டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராகவும் சச்சின் சதம் அடித்துள்ளார்.

@ டெஸ்ட் அரங்கில் அதிக முறை (20) 150 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையும் இவர் படைத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் லாரா 19, ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் 18 முறை 150 ரன்கள் எடுத்துள்ளனர்.

@ டெஸ்ட் அரங்கில் அடித்துள்ள 50 சதத்தில், 28 அயல்நாடுகளிலும், 22 இந்தியாவிலும் எடுத்துள்ளார்.

@ இதுவரை 6 இரட்டைசதம் அடித்துள்ள சச்சினின் 50 சதத்தில் 15 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

@ சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 46 சதங்களும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 50 சதங்களும் அடித்து, உலகிலேயே அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை தக்கவைத்துக் கொண்டுள்ளார்

50 சதங்கள் கடந்து வந்த பாதை

சச்சின் தனது முதல் டெஸ்ட் சதத்தை கடந்த 1990ல் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் அடித்தார். பின் தொடர்ந்து அசத்திய இவர் தற்போது தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 50வது சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் விபரம்:

முதல் சதம் - இங்கிலாந்து - மான்செஸ்டர் - 1990
10வது சதம் - இங்கிலாந்து - நாட்டிங்காம் - 1996
20வது சதம் - நியூசிலாந்து - மொகாலி - 1999
30வது சதம் - இங்கிலாந்து - லீட்ஸ் - 2002
40வது சதம் - ஆஸ்திரேலியா - நாக்பூர் - 2008
50வது சதம் - தென் ஆப்ரிக்கா - செஞ்சுரியன் - 2010

ஆஸ்திரேலியாவிற்க்கு எதிராக அதிக சதம்

தனது 50 டெஸ்ட் சதத்தில் சச்சின், அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 சதங்கள் அடித்துள்ளார். அடுத்து இலங்கைக்கு எதிராக 9, இங்கிலாந்துடன் 7 சதங்கள் அடித்துள்ளார். 

சாதனையில் அதிசய ஒற்றுமை

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (200*) எடுத்த வீரர் என்ற சாதனையை சச்சின் (எதிரணி - தென் ஆப்ரிக்கா) ஏற்படுத்திய போது அவருடன் எதிர் முனையில் களத்தில் இருந்தவர் கேப்டன் தோனி. தற்போது, டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து சச்சின் மற்றொரு வரலாறு படைத்த போதும், இவருடன் களத்தில் இருந்தவர் தோனி என்ற பெருமை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இந்த இரண்டு சாதனைகளுமே தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் பந்து வீச்சில் நிகழ்த்தியது என்பது கூடுதல் சிறப்பம்சம்...


சச்சினுடைய தந்தையின் பிறந்தநாளான நேற்று, சச்சின் இந்த சாதனையை நிகழ்த்தி, இந்த சாதனை சதத்தை மறைந்த அவரது தந்தைக்கு அர்பணித்துள்ளார்.

சர்வதேச ஒரு தினப் போட்டியில் இன்னும் 4 சதங்களை சச்சின் அடித்தால்... அதிலும் 50 சதம் கண்ட வீரர் என்ற பெருமை மட்டுமின்றி... ஒருதின மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 100 முறை 100 ரன்களைக் கடந்த உலகின் முதல் (மற்றும் கடைசி) வீரர் என்ற பெருமையைப் பெறுவார்... அந்த நாள் வெகு தொலைவில் இல்லை...

அந்த சாதனை மனிதருக்கு இந்த ரசிகனின் அன்பு வாழ்த்துகள்... தொடருட்டும் உமது சாதனைப் பயணம்...! 

Wednesday, November 24, 2010

கரூரில் காவல் துறையினர் கற்பழித்ததால் இலங்கை தமிழ்ப் பெண் தற்கொலை: 8 மாதங்களுக்குப் பிறகு சிபிஜ வழக்குப் பதிவு

சென்னை, நவ. 24: அண்மையில் கோவையில் பள்ளிச் சிறுமியை கடத்தி கற்பழித்து கொலை செய்த ஓரு காமுகனுக்கு சைலேந்திர பாபுவின் தலைமையிலான காவல் துறை என்கவுண்டர் தண்டனை கொடுத்து, மக்களிடம் பாராட்டு பெற்றது.

ஆனால் கரூரில் உள்ள காவல் துறையினர் இந்தியாவின் மானமே பறிபோகும் அளவிற்கு மனித சமுதாயமே மன்னிக்கமுடியாத கீழ்த்தரமான செயலை செய்துள்ளனர். அந்த கொடூரச் சம்பவத்தின் பிளாஷ் பேக்...

கரூர் மாவட்டம், ராயனூரில் இலங்கை அகதி முகாமில் வசித்து வந்த பத்மாவதி (வயது 28) என்பவர், கடந்த மார்ச் மாதம் தனக்குத் தானே மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செந்து கொள்ள முயன்றார். பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மூன்று வார போரட்டத்திற்குப் பிறகு மருத்துவமனையிலேயே கடந்த 28.03.10 அன்று உயிரிழந்துள்ளார்.

இந்த பத்மாவதியின் கணவரான குமார் என்பவரை, கரூர் காவல்துறையினர் ஒரு கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர் இந்த நிலையில் குமார் உங்களை பார்க்க விரும்பியதாக பத்மாவதியிடம் கூறி, அவரையும் அவரது தாயையும் காவல் துறையின் வாகனத்திலேயே அழைத்துச் சென்றுள்ளனர்.

முகாமிற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரியும் காவல்துறையினருடன் காவல் நிலையத்திற்குச் செல்ல அனுமதித்த நிலையில் அவரை அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவ்விருவரையும் காவல் நிலையத்திற்குச் செல்லாது தனியார் வீடொன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளன்ர், பத்மாவதியின் தாயாரை வெளியே இருக்க வைத்து விட்டு, பத்மாவதியை மட்டும் உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர்.

மூன்று மணி நேரத்திற்குப் பிறகு பத்மாவதியின் தாயார் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார். பத்மாவதியை அவர் பார்த்த போது அலங்கோலமான நிலையில், உடல் நடுங்கியபடி, கசங்கிய காகிதம் போல் கிடந்திருக்கிறார். அவர் தன்னை மூன்று காவலர்கள் கற்பழித்து விட்டதாக தாயாரிடம் கதறியபடி கூறியிருக்கிறார். அழுது கொண்டிருந்த இருவரேயும் அதட்டி, இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டால் பத்மாவதியின் கணவரைச் சுட்டுக் கொன்று விடுவோம் என்று மிரட்டி இருக்கின்றனர். பின்பு இருவரையும் அதே வாகனத்தில் ஏற்றி முகாமிற்கே திரும்ப கொண்டு வந்து விட்டு விட்டனர்.

இந்த நிலையில் வீடு திரும்பிய பத்மாவதி அவமானம் தாங்காமல் தனக்குத் தானே எண்ணை ஊற்றி தீமூட்டிக் கொண்டுள்ளார். பின்னர் பலத்த தீக்காயங்களுடன் கரூர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பத்மாவதி, மூன்று வாரங்களுக்குப் பிறகு சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார்.

உயிரிழப்பதற்குச் சற்று முன் மனித உரிமைவாதியும்,பெண்ணிலைவாதியுமான ஒருவரிடம் தனது மரண வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். அதை அவர் தனது வீடியோ மொபைலில் பதிவு செய்திருக்கிறார்.

அந்த வாக்கு மூலத்தில் முக்கிய விஷயங்கள் உள்ளடங்கி இருப்பதாக தெரிவித்துள்ள அந்த பெண்ணிலைவாதி அதன் சிறு பகுதியை வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவரை காட்டுவதாகக் கூறி தன்னையும் தனது தாயாரையும் காவல்துறையினர் அழைத்துச் சென்றதாகவும் எனினும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் தனியான கம்பவுண்ட் ஒன்றிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தன்னை காவலர்கள்  கற்பழித்தார்கள் என்றும், கடைசி வரை தனது கணவரைக் காட்டவில்லை என்றும் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தபோது ‘இந்தப் பெண் வயிற்றுவலிகாரணமாகவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக’ தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக அவர் இறந்த அன்றே அவசர அவசரமாக பத்மாவதியின் சடலத்தை காவல் துறையினர் தகனம் செய்துள்ளனர். இதற்காக FIR  எனப்படும் முதல் தகவல் அறிக்கையும், வழக்கும் பதிவு செய்யப்பட வில்லை. கற்பழிப்பு செய்தோர் கைது செய்யப்படவுமில்லை.

இது குறித்து இந்தியாவின் மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் பெண்ணுரிமை அமைப்புக்கள் கடுமையான விமர்சனங்களை அப்போதே வெளியிட்டனர். ஆனால் பலனில்லை... பிளாஷ் பேக் முடிந்தது.

இனி விஷயத்திற்கு வருவோம்... இந்த விவகாரம் தற்போது உயர் நீதிமன்ற தலையீட்டால் மீண்டும் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 


இனியேனும் காமவெறி பிடித்த அந்த காவலர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்களா..? ஒரு சிறுமியை கற்பழித்தவனை என்கவுண்டர் செய்த காவல் துறையினர், இந்த கறுப்பு ஆடுகளை இனங்கண்டு என்கவுண்டர் செய்யுமா..? தமிழக முதல்வரின் பொறுப்பில் இருக்கும் இந்த துறையில் இனியேனும் இது போன்ற சம்பவங்கள்  நடைபெறாமலிருக்குமா...


வீடிழந்து, நாடிழந்து நம்மையே சரணம் என்று நாடி வந்த நம் உடன் பிறவா தமிழனத்தாரை, தரங்கெட்ட நாய்கள் சூறையாடுவது தகுமோ... அந்த கேடுகெட்ட மூன்று நாய்களும் செய்த இந்த இழி செயல், அவர்கள் அவர்களது தாயை, தங்கையை, அக்காவையே இப்படி அழித்தற்குச் சமமாகும்...


நெஞ்சு பொறுக்கவில்லை தோழர்களே... இந்த நாய்களை இனியேனும் நம்மண்ணில் விட்டு வைத்தால் தமிழனம் தலை நிமிராது... நிமிரவே நிமிராது...


வாழ்க தமிழக காவல் துறை... வளர்க தமிழ் சமுதாயம்... அடபோங்கடாங்க... நீங்களும் உங்க சமுதாயமும்...!

(இதன் ஆங்கில மூலச் செந்திக்கு:  http://timesofindia.indiatimes.com/city/chennai/HC-moved-for-probe-into-womans-rape/articleshow/6978470.cms)

Tuesday, November 23, 2010

17-வயது பள்ளி மாணவனை கத்தி முனையில் கற்பழித்த 10 பெண்கள் - அதிர்ச்சியூட்டும் செய்தி

பாப்புவா நியூ கினியா, நவ. 23: ஆஸ்திரேலியாவிற்கு அருகே உள்ள ஆப்பிரிக்க நாடான பாப்புவா நியூ கினியாவில் 17-வயது பள்ளி மாணவனை கத்திமுனையில் 10 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பாப்புவா நியூ கினியா நாட்டின் தெற்கு ஹைலட்ஸ் மாகாணத்தில் உள்ள மெண்டி முனிகு மாவட்டத்தில் இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது.  இப்பகுதியில், கடந்த நவம்பர் 19, 2010 அன்று பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது சிறுவனை 10 பெண்கள் திடீரென வழிமறித்தனர். சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியை காட்டி மிரட்டினர். இதில் 4 பெண்கள் அந்த சிறுவனை கற்பழித்துள்ளனர்.

இது குறித்து மெண்டி மாவட்டத்தின் போலீஸ் அதிகாரி டெட்டி டெய் கூறுகையில்,  ‘சிறுவனிடம் பாலத்காரம் செய்த பெண்கள் (மிருகங்கள்) யார் என்பது இது குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறோம். தற்போது அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

அச்சிறுவன் அளித்த வாக்குமூலத்தில் தனக்கு ஏதேனும் எய்ட்ஸ், எச்.ஐ.வி. பாதிப்பு வந்துவிடும் என அஞ்சுவதாகவும், தன்னை கற்பழித்த பெண்களுக்கு ஏதேனும் எச்.ஐ.வி. உள்ளனவா என சோதனை செய்யும்படியும் கூறியுள்ளான்.

உலக சுகாதார அமைப்பான யுனிசெப் கடந்த 2008-ல் வெளியிட்ட அறிவிக்கையில் இலகிலேயே மிக அதிகளவு கற்பழிப்பு குற்றங்கள் பாப்புவா நியூ கினியா நாட்டில்தான் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளது. இதே அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், உலகின் அதிகம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ள நாடும் இந்த நாடுதான் என அறிவித்திருக்கிறதாம்.

அதனாலேயே அந்த சிறுவன் தனக்கு எய்ட்ஸ் பாதிப்பு வந்துவிடுமோ என பீதியில் உள்ளதாக போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ‘இரவு நேரங்களில் பெண்கள் பாதுகாப்பு செல்ல வேண்டும் என இதுநாள் வரை அறிவுரை கூறி வந்தேன்... இனி ஆண்களுக்கும் இதே அறிவுரையை கூறவேண்டிய நிலை வந்து விட்டது.

இங்கு பதிவு செய்யப்படும் கற்பழிப்பு குற்றங்களில் பாதிக்கப் படுவோர்களில் பாதி சதவீதத்தினர் 15 வயதுக்கும் குறைவானவர்கள். இதில் 13 சதவீதம் பேர் 7 வயதிற்கும் குறைவானவர்கள்’ என்றார் டெட்டி.


(இதனுடைய ஆங்கில மூலச் செய்திக்கு: http://www.news.com.au/world/boy-gang-raped-by-four-women-at-knifepoint-in-papua-new-guinea/story-e6frfkyi-1225958505014)