Friday, June 25, 2010

இந்தியாவில் வாழும் 97 சதவீத மக்களுக்கு வச்சாச்சு ஆப்பு...


ஆளும் காங்கிரஸ் அரசின் தற்போதைய மகத்தான சாதனை மீண்டும் ஒரு முறை பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு..! இதனால் இந்தியாவில் வாழும் 97 சதவீத மக்களுக்கு வச்சாச்சு ஆப்பு..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்ரவை கூட்டம், இன்று தில்லியில் கூடி விவாதித்தது. ‌ விலை உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 35 அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ. 3 அதிகரிக்கப்பட்டுள்ளது.  டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் , பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3. 73 அதிகரிக்கிறது. இத்தகவலை பெட்ரோலிய துறை செயலர் சுந்தரேசன் தெரிவித்தார். அது மட்டுமின்றி இனி பெட்ரோலியப் பொருற்களின் நிறுவனங்களே அதன் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப விலையினை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும், அதில் மத்திய அரசு தலையிடாது என்றும் முடிவு செய்துள்ளது.

இந்த விலை உயர்வால் சாமன்ய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவித்தார்.  மண்ணெண்ணெய்க்கான மானியம் தொடரும் என்றார். இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறதாம்.

இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 3% பேர் மட்டுமே பணக்காரர்கள் ஆவர்.. மீதமுள்ள  97 சதவீத மக்களனைவரும் நடுத்தர, மற்றும் ஏழை வர்க்கத்தினரும், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவரே ஆவர்.

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால், விலைவாசி விண்ணை உடைத்துக் கொண்டு செல்லப் போகிறது. ஏற்கனவே தற்போது விலைவாசி விண்ணைத் தொட்டுக்கொண்டிருக்கிறது என்பது மறுக்கவியலா உண்மையாகும்.

ஒரு கிலோ அரிசியில் விலை 30 ரூபாய்... சர்க்கரை விலை 40 ரூபாய்... இப்படி அத்தியாவசிய பொருட்களின் விலை இப்போதே உச்சத்தில் இருக்க, இந்த விலையேற்றம் மேலும் அதனை உச்சாணிக்குத்தான் கொண்டு செல்லும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை காரணம் காட்டி அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணை உட்பட அனைத்தும் இன்று நள்ளிரவு முதல் ஏறத்தான் போகின்றன. இதனை சாக்காக வைத்துக் கொண்டு பதுக்கல்காரர்களும் தங்கள் கைவரிசையைக் காட்டத்தான் போகின்றனர்.

இவ்விலை உயர்வால் அம்பானியோ, அமிதாப்போ, சோனியாவோ, மத்திய அமைச்சர்களோ, அரசிழல்வாதிகளோ பாதிக்கப் படப்போவதில்லை. கோடி வீட்டு குப்பனும், குடிசை வீட்டு சுப்பனும்.. நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினரும்தான்.


இனி உணவகங்கள், விடுதிகள் எவற்றிலும் சென்று நிம்மதியாய் சாப்பிடக் கூட முடியாது... நம் தேசம் முன்னேறுகிறதோ இல்லையோ... விலைவாசியில் ஏறுகிறதய்யா..?

நம் மக்கள் என்று விழிக்கிறார்களோ... அன்றுதான் அவர்களுக்கு விடிவுகாலமே..! வாழ்க சனநாயகம்...!

4 comments:

http://rkguru.blogspot.com/ said...

thinamum vaikiraanga aappu...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷ்-ல் என் பதிவும் வந்துள்ளது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

மோகனன் said...

நன்றி தோழரே..!

அடிக்கடி வாங்க..!

யூர்கன் க்ருகியர் said...

தல தலையா அடிச்சிக்கிட்டேன் காங்கிரஸ்க்கு + அதன் கூட்டணிக்கு ஒட்டு போடாதீங்கடான்னு ...

இப்போ ....


சாவுங்கடா !!

மோகனன் said...

என்ன செஞ்சி என்ன பண்ண முடியும் யூர்கன்...

புரட்சி ஏதேனும் ஏற்பட்டால் மட்டுமே மாற்றம் உண்டு...

அடிக்கடி படிக்க வாங்க..!