Tuesday, May 27, 2008

எனது நண்பனுக்கு திருமண வாழ்த்து...



சு
கமான சுமைகளை சுமக்கப் போகும்
எங்கள் அருமை நண்பர்களே..! - ஈ
ரேழு ஜென்மங்கள் நிலைத்திருக்கும் திருமண
பந்தத்தில் இணையவிருக்கும் நல் இதயங்களே..!
ஷ்டமும் கஷ்டமும் நிறைந்தது வாழ்க்கை
அதில் இனிமையைக் காண்பது உங்கள் வேட்கை..!

ட்டுப்பாடுகள் நிறைந்த இச்சமூகத்தில்
புரட்சி மணம் செய்கின்ற வைரங்களே..!
வினைகள் பல உண்டு திருமண வாழ்க்கையில்
விட்டுக்கொடுத்தும், தட்டிக் கொடுத்தும் வாழ்ந்தால்
தாழ்வில்லை உங்கள் வாழ்வில்..! - என்றென்றும்
தொடரட்டும் உங்கள் பந்தம்... வாழ்க நீவீர்..!

-அன்பு நண்பா... உன் திருமண வாழ்வில் உன்னத நிலையை அடைய எனது நல்வாழ்த்துகள்..!



என்றென்றும் நட்பு'டன்'

மோ. கணேசன்.

(எனது நண்பரின் பெயர் சுரேஷ். அவரது மனைவியின் பெயர் கவிதா. நான் எழுதிய வாழ்த்து மடலில் இவர்களிருவரின் பெயரும் முதலெழுத்தாக வரும்படி எழுதியிருக்கிறேன். கண்டுபிடித்தாயிற்றா...)

2 comments:

Tamilparks said...

அருமையா வரிகள்

மோகனன் said...

நன்றி..!