Friday, August 08, 2008

தெரிந்து கொள்ளுங்கள்: ஒலிம்பிக் சின்னம், கொடி, கீதம்......

ஒலிம்பிக் சின்னம்...


ஒலிம்பிக் சின்னம்


ஒலிம்பிக் போட்டியைக் குறிக்கும் சின்னமாக ஒன்றுடன் ஒன்று இணைந்த 'ஐந்து வண்ண வளையங்கள்' உள்ளன. நீலம், கறுப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை என ஐந்துவகையான வண்ணங்களில் அமைந்துள்ளன. இந்த வளையங்கள் ஒவ்வொன்றும் உலகிலுள்ள ஒவ்வொரு கண்டத்தைக் குறிக்கும். ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றைக் குறிக்கின்றன. அண்டார்டிகாவில் மனிதர்கள் வசிப்பதில்லை என்பதால் அதை சேர்க்கவில்லை. இரு அமெரிக்க கண்டங்களை ஒன்றாக்கி விட்டனர். இந்த ஐம்பெருங் கண்டங்களையும், அவற்றை சேர்ந்த வீரர், வீரங்கனைகள் ஒன்று கூடுவதையும் குறிக்கின்றன.

ஒலிம்பிக் கொடி


ஒலிம்பிக் கொடி

வெள்ளை நிறக் கொடியில் ஒலிம்பிக்கின் ஐந்து வளையங்கள் இடம் பெற்றுள்ளன. இவைகளையும் (கொடியின் வெள்ளை நிறம்) சேர்த்து இக்கொடியில் ஆறு வண்ணங்கள் உள்ளன. உலகிலுள்ள நாடுகளின் கொடிகளில் இந்த ஆறு வண்ணங்களில் ஏதாவது ஒரு வண்ணம் இடம் பெற்றிருக்கும். ஒரே உலகம் என்ற கோட்பாட்டை இக்கொடி மறைமுகமாக வலியுறுத்தும். இக்கொடியினை 1914-ல் நவீன கால ஒலிம்பிக் போட்டியினை தோற்றுவித்த பியரி டி கூபர்டின் வடிவமைத்தார்.

ஒலிம்பிக்கின் பெருமை

ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமான விடயம் 'வெற்றி பெறுவது முக்கியமல்ல... சிறப்பாக போராடினோம்' என்பதுதான். வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையுடன், ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதே பெருமைக்குரிய ஒன்றாகும்.

ஒலிம்பிக்கின் தாரக மந்திரம்

லத்தீன் மொழியில் 'சிடியஸ், ஆல்டியஸ், போர்டியஸ்' என்ற சொற்களே ஒலிம்பிக் போட்டியின் தாரக மந்திரமாக அமைந்தன. இதற்கு 'வேகமாய், உயர்வாய், வலுவாய்' என்று பொருளாகும். இதனை மையமாக வைத்தே ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது.

ஒலிம்பிக் கீதம் (THE OLYMPIC ANTHEM)

ஒவ்வொரு நாட்டிற்கும் தேசிய கீதம் இருப்பது போல், ஒலிம்பிக்கிற்கு என்று தனி கீதம் இருக்கிறது. இதனை ஸ்போரிஸ் சமரா என்பவர் இயற்றினார். 1896-ல் ஏதென்ஸில் நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. பிறகு 1954-ல் சர்வதேச ஒலிம்பிக் குழு இப்பாடலை தற்காலத்திற்கு ஏற்றது போல் மாற்றியமைக்க முன் வந்து, சர்வதேச அளவில் இதற்கு போட்டி வைத்தது. இதில் மைக்கேல் ஸ்பைசக் என்பவர் வெற்றி பெற்றார். ஆனால் இவரது பாடலும் நிலைக்கவில்லை. 1958-ல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஸ்போரிஸ் சமரா இயற்றிய பாடல் இசைக்கப்பட்டது. இது மக்களிடையே ஆதரவைப் பெறவும், இதுவே இன்று வரை ஒலிம்பிக் கீதமாக இருந்து வருகிறது.


''Immortal spirit of antiquity,
Father of the true, beautiful and good,
Descend, appear, shed over us thy light
Upon this ground and under this sky
Which has first witnessed thy unperishable fame
Give life and animation to those noble games!
Throw wreaths of fadeless flowers to the victors
In the race and in the strife!
Create in our breasts, hearts of steel!
In thy light, plains, mountains and seas
Shine in a roseate hue and form a vast temple
To which all nations throng to adore thee,
Oh immortal spirit of antiquity!''

(எனக்கு ஆங்கிலத்தில் அவ்வளவு புலமை இல்லை. அதனால் உள்ளது உள்ளபடியே கொடுத்திருக்கிறேன். ஆங்கிலமறிந்தவர்கள் கேட்டு இதனை சரியான முறையில் தமிழில் மொழிபெயர்த்து தர முயற்சிக்கிறேன்)

ஒலிம்பிக்கின் உறுதிமொழி

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் அனைத்து வீரர்களுக்கும் பொதுவான ஒலிம்பிக் உறுதிமொழி இருக்கிறது. ''ஒலிம்பிக் போட்டிகளுக்கான விதிமுறைகளுக்கு கட்டுப்படுட்டு, விளையாட்டின் உண்மையான நெறிமுறையுடன், விளையாட்டின் புகழுக்காகவும், அணிகளின் கௌரவத்திற்காகவும் இந்த போட்டியில் கலந்து கொள்கிறேன் என எல்லா போட்டியாளர்களின் சார்பாகவும் நான் உறுதி அளிக்கிறேன்''.

ஒலிம்பிக் ஜோதி




பெய்ஜிங் ஒலிம்பிக் ஜோதி

புராதன
ஒலிம்பிக் போட்டியின்போது, ஒலிம்பியா நகரில் சூரியக் கதிர்களை லென்ஸ் வழியாக குவித்து ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி போட்டியை தொடங்கி வைப்பார்கள். நவீன ஒலிம்பிக்கில் 1936-ம் ஆண்டு அறிமுகமான இந்த நடைமுறை இன்றுவரை ஒலிம்பிக் பாரம்பரியமாகத் தொடர்கிறது. துவக்க விழாவின் போது ஏற்றி வைக்கப்படும் இந்த ஒலிம்பிக் ஜோதியிலிருந்து ஒலிம்பிக் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள தீபத்தில் ஏற்றப்படும். போட்டிகள் முடியும் வரை இத்தீபம் எரிந்து கொண்டிருக்கும்.

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும் போது இந்த ஒலிம்பிக் ஜோதி, அடுத்து எந்த நாட்டில் ஒலிம்பிக் நடைபெற உள்ளதோ, அந்நகர மேயரிடம் இந்த ஒலிம்பிக் ஜோதியும், ஒலிம்பிக் கொடியும் ஒப்படைக்கப்படும்.

ஒலிம்பிக் சின்னம்: 'டான்சிங் பெய்ஜிங்'




டான்சிங் 'பெய்ஜிங்'

ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் போட்டியை நடத்தும் நாடு அதற்கென பிரத்யோகமான ஒலிம்பிக் சின்னத்தை வடிவமைக்கும். 29-வது ஒலிம்பிக் போட்டிக்கு டான்சிங் பெய்ஜிங் என்ற சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற பின்னணியில், ஒரு மனிதன் மகிழ்ச்சியில் ஆடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழே 'பெய்ஜிங் -2008' என்று எழுதப்பட்டுள்ளது. அதன்கீழ் ஒலிம்பிக்கின் ஐந்துநிற வளையங்களும் இடம்பெற்றுள்ளன. (சிவப்பு நிற பின்னணிசீனாவின் கம்யூனிசத்தை குறிக்கிறதோ என்னவோ...?)

அதிர்ஷ்டம் தரும் பிரத்யோக சின்னங்கள்


ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும், போட்டியை நடத்தும் நாட்டின் சார்பில் பிரத்யோகமான அதிர்ஷ்டம் தரும் சின்னங்கள் (Mascots) வடிவமைக்கப்படும்.



'புவா'


இம்முறை பெய்ஜிங்கில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு சீன நாட்டின் பிரபல உயிரினங்களான (படத்தைப் பாருங்கள்) மீன் (பெய் பெய்), பாண்டா கரடி (ஜிங் ஜிங்), திபெத்திய மான் (யிங் யிங்), ரெட்டை வால் குருவி (நினி), மற்றும் ஒலிம்பிக் ஜோதி (ஹீவான் ஹூவான்-நடுவில் உள்ளது) ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஐந்து சின்னங்களையும் 'புவா' என பெயரிட்டு அழைக்கின்றனர்.

ஒலிம்பியாட் ஆண்டு

ஒரு ஒலிம்பிக் போட்டியின் தொடக்கத்தில் ஆரம்பித்து, அடுத்த ஒலிம்பிக் போட்டியின் தொடக்கத்தில் முடியும் தொடர்ச்சியான 4 ஆண்டு காலத்தை 'ஒலிம்பியாட்' என அழைக்கின்றனர். ஏதென்ஸ் நகரில் 1896-ம் ஆண்டில் நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலிருந்து தொடர்ச்சியாக ஒலிம்பியாட் ஆண்டுகள் கணக்கிடப்பட்டு வருகின்றன. அதன்படி பெய்ஜிங்கில் 29-வது ஒலிம்பியாட் துவங்குகிறது.

பதக்கங்கள்



பதக்கங்களின் முன்புறம்

இப்போட்டியில் வழங்கப்பட உள்ள பதக்கத்தின் ஒரு புறம் 'டான்சிங் பெய்ஜிங்' சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம் சீனாவின் பாராம்பரியத்தை நினைவுகூறும் வகையில், ஒலிம்பிக் மைதானத்தில் டிராகன் இருப்பது போலவும், அதன் முன்னே வீரர் ஒருவர் நிற்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பதக்கத்தின் விட்டம் 70. மி.மீ ஆகும். அதன் தடிமன் 6. மி.மீ ஆகும்



பதக்கங்களின் பின்புறம்

தடகளப் பிரிவிற்கு மட்டும் அதிகபட்சமாக 47 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. குறைந்த பட்சமாக பேஸ்பால் பிரிவிற்கு 1 தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது. இப்போட்டியில் வழங்கப்படும் மொத்த தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 302.

நன்றி: சீன தமிழ் வானொலி நிலையம்,
பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு,
சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு

இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா..!

புராதன ஒலிம்பிக் போட்டிகள் தடைசெய்யப்பட்டு, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ல், ஏதென்ஸில் நடைபெற்றது. அதுமுதல் ஒவ்வொரு நான்காண்டுகளுக்குப்பிறகு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் ஒலிம்பிக் போட்டியில் 14 நாடுகளைச் சேர்ந்த 241 வீரர்கள் கலந்து கொண்டனர். 43 போட்டிகள் நடத்தப்பட்டன.
இரண்டாவது ஒலிம்பிக் போட்டி 1900-ல், பிரான்ஸில் நடைபெற்றது. அது முதல் இன்று வரை இந்திய அணி ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறது. இந்தியா கலந்து கொண்ட முதலாவது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தடகளப்பிரிவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றது.

இதன் பிறகு 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி ஹாக்கி போட்டியில் தங்கம் வென்றது. இதே போட்டியில் 1960 -ல் வெள்ளியும், 1968,1972 -களில் வெண்கலத்தையும் வென்றது.

1952-ல் மல்யுத்தப் பிரிவில் ஒரு வெண்கலம், 1996-ல் டென்னிஸ் பிரிவில் ஒரு வெண்கலம், 2000-ல் பளுதூக்குதலில் ஒரு வெண்கலம், 2004-ல் துப்பாக்கி சுடுதலில் ஒரு வெள்ளியையும் இந்தியா வென்றுள்ளது.

 28 முறை நடைபெற்றுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், 27 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 8 தங்கம், 4 வெள்ளி, 5 மல்யுத்தம் என மொத்தம் 17 பதக்கங்கள்.

1900 துவக்கத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி (ஆதாரம்: மகாகவி பாரதியின் கவிதை வரி ''முப்பது கோடி முகமுடையாள்...'') அப்போது இந்தியா 2 பதக்கங்களை வென்றது. இன்றோ நமது மக்கள் தொகையின் எண்ணிக்கை 113 கோடிக்கும் மேல்... (இதை நீங்கள் படிக்கும் இந்த வினாடியில் புதிதாக 15 குழந்தைகள் பிறந்திருக்கும்). பதக்கம் வெல்கிறார்களோ இல்லையோ... பிள்ளைகளை பெறுவதில் வெல்கிறார்கள்...

30 கோடிக்கே 2 பதக்கம் என்றால் 110 கோடிக்கு 7 பதக்கமாவது வெல்ல வேண்டாமா..? ம்ஹூம்... என்னதாம்பா பண்றீங்க..?

இந்நிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 29-வது ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான தொடக்கவிழாவுடன் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவிலிருந்து 98 பேர் குழு செல்கிறது. அதில் 56 பேர் வீரர், வீராங்கனைகள். பயிற்சியாளர் உள்ளிட்ட மற்றையவர்கள் 42 பேர். அதிகபட்சமாக தடகளப் போட்டிகளில்மட்டும் 16 பேர் பங்கேற்கின்றனர். மொத்தம் 12 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

கடந்த முறை ஏதென்ஸில் நடைபெற்ற போட்டியில் இந்தியா ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே கைப்பற்றியது.

மகளிர் பளுதூக்குதல் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டிருந்த மணிப்பூர் வீராங்கனை மோனிகா தேவி, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால், அவர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கவிழா அணிவகுப்பில், துப்பாக்கி சுடுதல் வீரர் ரத்தோர் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி அணிக்கு தலைமை வகிக்கிறார். 12 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் விவரம் (அடைப்புக்குறியில் அவர்கள் பங்கேற்கும் போட்டி)

வில்வித்தை: மங்கல் சிங் சாம்பியா (தனிநபர்). தோலா பானர்ஜி (தனிநபர்), பாம்பயாலா தேவி (தனிநபர்), பிரனிதா வார்தினேனி (தனிநபர்).

தடகளம்: விகாஸ் கௌட (வட்டு எறிதல்), ரஞ்சித் மகேஸ்வரி (மும்முறை தாண்டுதல்), அஞ்சு ஜார்ஜ் (நீளம் தாண்டுதல்), ஜெ.ஜெ. சோபா (ஹெப்டத்லான்), சுஸ்மிதா சிங்கா ராய் (ஹெப்டத்லான்), பிரமிளா அய்யப்பா (ஹெப்டத்லான்), பிரீஜா ஸ்ரீதரன் (10,000 மீட்டர் அட்டம்), சுரேந்திரா சிங் (10,000 மீட்டர் அட்டம்), ஹர்வந்த் கௌர் (வட்டு எறிதல்), கிருஷ்ண பூனியா (வட்டு எறிதல்), மஞ்சித் கவுர் (400 மீட்டர் அட்டம்), மந்தீப் கௌர் (400 மீட்டர் அட்டம்), சித்ரா கே.சோமன், ராஜா எம். பூவம்மா, மந்தீப் கௌர், சினி ஜோஸ், எஸ். கீதா (400 மீட்டர் தொடர் அட்டம்).

இறகுப்பந்து: அனுப் ஸ்ரீதர் (ஒற்றையர்), சாய்னா நெஹ்வால் (ஒற்றையர்).

துப்பாக்கி சுடுதல்: அபிநவ் பிந்த்ரா (10 மீட்டர் ஏர் ரைபிள்), ககன் நராங் (10 மீட்டர் ஏர் ரைபிள், 50 மீட்டர் ரைபிள் புரோன், 50 மீட்டர் ரைபிள் த்ரீ பொஷிசன்), சஞ்சீவ் ராஜ்புத் (50 மீட்டர் ரைபிள் புரோன், 50 மீட்டர் ரைபிள் த்ரீ பொஷிசன்), சமரேஷ் ஜங் (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), 50 மீட்டர் பிஸ்டல்), மான்ஷெர் சிங் (டிராப்), மானவ்ஜித் சிங் சாந்து (டிராப்), ராஜ்யவர்தன் சிங் ரதோட் (டபுள் டிராப்), அஞ்சலி பாகவத் (10 மீட்டர் ஏர் ரைபிள், 50 மீட்டர் ரைபிள் த்ரீ பொஷிசன்), அவ்னீத் கௌர் சித்து (50 மீட்டர் ரைபிள் த்ரீ பொஷிசன்).

குத்துச்சண்டை: ஜிதேந்தர் குமார் (பிளை வெயிட் பிரிவு), அகில் குமார் (பாந்தம் வெயிட்), அந்த்ரேஷ் லலித் லாக்ர (அபெதர் வெயிட்), விஜேந்தர் விஜேந்தர் (மிடில் வெயிட்), தினேஷ் குமார் (லைட் ஹெவி வெயிட்).

நீச்சல்: விர்தவால் காடே (50 மீட்டர் பிரீ ஸ்டைல், 100 மீட்டர் பிரீ ஸ்டைல், 200 மீட்டர் பிரீ ஸ்டைல்), சந்தீப் சேஜ்வால் (100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்டிரோக், 200 மீட்டர் பிரெஸ்ட் ஸ்டிரோக்), அன்குர் பொசேரியா (100 மீட்டர் பட்டர்பிளை), ரேஹன் போன்சா (200 மீட்டர் பட்டர்பிளை).

துடுப்புப்படகு: பஜ்ரங்லால் தஹார் (ஒற்றையர் ஸ்கல் பிரிவு), தேவேந்தர் குமார் (லைட் வெயிட்), மஞ்ஜீத் சிங் (டபுள் ஸ்கல்ஸ்).

பாய்மரப்படகு: நாச்சாதர் சிங் ஜோஹல் (ஃபின்).

டென்னிஸ்: மகேஷ் பூபதி, -யாண்டர் பயஸ் (இரட்டையர் பிரிவு), சானியா மிர்சா (ஒற்றையர் பிரிவு), சுனிதா ராவ், சானியா மிர்சா (இரட்டையர் பிரிவு).

டேபிள் டென்னிஸ்: அச்சந்தா சரத் கமல் (ஒற்றையர் பிரிவு), நேஹா அகர்வால் (ஒற்றையர் பிரிவு).

மல்யுத்தம்: யோகேஷ்வர் தத் (60 கிலோ பிரீஸ்டைல்), குமார் சுஷில் (66 கிலோ பிரீஸ்டைல்), தோமர் ராஜீவ் (120 கிலோ பிரீ ஸ்டைல்).

ஜூடோ: தோம்பி தேவி (48 கிலோ பிரிவு), திவியா (78 கிலோ பிரிவு).

'வெற்றி நமதே..! வென்று வாருங்கள் தங்கங்களே..!'

நன்றி: தினமணி

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி: இன்று பிரம்மாண்ட தொடக்கவிழா

புராதன ஒலிம்பிக் போட்டிகள் தடைசெய்யப்பட்டு, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ல், ஏதென்ஸில் நடைபெற்றது. அதுமுதல் ஒவ்வொரு நான்காண்டுகளுக்குப்பிறகு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் ஒலிம்பிக் போட்டியில் 14 நாடுகளைச் சேர்ந்த 241 வீரர்கள் கலந்து கொண்டனர். 43 போட்டிகள் நடத்தப்பட்டன.

28-வது ஒலிம்பிக் போட்டி, முதல் ஒலிம்பிக் கோட்டி நடத்தப்பட்ட அதே ஏதென்ஸில் நடைபெற்றது. இதில் 201 நாடுகளைச் சேர்ந்த 10,625 வீரர்கள் கலந்து கொண்டனர். 301 போட்டிகள் நடத்தப்பட்டன.

அதைத்தொடர்ந்து, சீன தலைநகர் பெய்ஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான தொடக்கவிழாவுடன் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. சீன அதிபர் ஹு ஜிந்தாவோ சீன நேரப்படி 8.08 (இந்திய நேரப்படி மாலை 5.30) மணிக்கு போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.



நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, சீன தலைநகர் பெய்ஜிங்கில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 24-ம்தேதி வரை நடைபெறும் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மொத்தம் 28 விளையாட்டுகளில் 302 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

‘ஒரு உலகம்...ஒரு கனவு’ என்ற முழக்கத்துடன் ஒலிம்பிக் களத்தில் இறங்கியுள்ள சீனா, தனது பொருளாதார வளர்ச்சியை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான மைதானங்கள், வீரர் மற்றும் வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள் தங்குவதற்கான ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டு, பெய்ஜிங் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

சீனர்களின் ராசியான எண் 8 என்பதால் நாள், மாதம், ஆண்டு மட்டுமல்லாது இரவு 8 மணி 8 நிமிடம் 8 விநாடியில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி ஒலிம்பியாவில் தொடங்கிய ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம், பல்வேறு நாடுகளின் வழியாக 127 நாட்களில், ஒரு லட்சத்து 37 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து செவ்வாய் இரவு பெய்ஜிங் வந்து சேர்ந்தது. கடந்த 2 நாட்களாக சீனாவின் முக்கிய இடங்களின் வழியாக தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்லப்பட்ட ஜோதி, இன்று இரவு தொடக்கவிழாவின் போது சரியாக 8 மணிக்கு ‘பறவைக் கூடு’ தேசிய மைதானத்துக்கு எடுத்து வரப்பட்டு முறைப்படி ஏற்றப்படுகிறது. இதையடுத்து அரங்கில் நடைபெறும் வண்ணமயமான தொடக்க நிகழ்ச்சி சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற உள்ளது.

வெடிமருந்தைக் கண்டுபிடித்த சீனாவில், வண்ணமிகு, கண்கவர் வாணவேடிக்கைகளையும், டிராகன் நடனம் ஆகியவற்றையும் எதிர்பார்க்கலாம். தொடக்கம் மற்றும் நிறைவுநாள் நிகழ்ச்சிகளில் வாணவேடிக்கைகளுக்காக மட்டுமே சுமார் ரூ. 400 கோடி செலவிடப்பட்டுள்ளதாம்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர், சீன அதிபர் ஆகியோரின் வரவேற்புரையை தொடர்ந்து ஒலிம்பிக் கீதம் ஒலிக்க, கொடிகள் ஏற்றப்படுகின்றன. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான புறாக்களை பறக்கவிடுகின்றனர். பின்னர், மைதானத்தில் தொடர் ஓட்டமாக எடுத்துவரப்படும் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படுகிறது.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 56 வீரர், வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி களமிறங்குகிறது. மகளிர் பளுதூக்குதல் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டிருந்த மணிப்பூர் வீராங்கனை மோனிகா தேவி, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால், அவர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கவிழா அணிவகுப்பில், துப்பாக்கி சுடுதல் வீரர் ரத்தோர் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி அணிக்கு தலைமை வகிக்கிறார். 12 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

1996-ல், அட்லாண்டாவில் நடைபெற்ற 26-வது ஒலிம்பிக் போட்டியின் பதக்க வேட்டையில் (16 தங்கங்களுடன்) சீனா 4 வது இடத்தை பிடித்தது. 2000-ல், சிட்னியில் நடைபெற்ற 27வது ஒலிம்பிக் போட்டியின் பதக்க வேட்டையில் (28 தங்கங்களுடன்) 3 வது இடத்தையும், 2004-ல், ஏதென்ஸில் நடைபெற்ற 28- வது ஒலிம்பிக் போட்டியின் பதக்க வேட்டையில் (32 தங்கங்களுடன்) 2 வது இடத்தையும் பிடித்த சீனா, போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்த முறை அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற உறுதியுடன் 600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்துள்ளது.

மேற்குறிப்பிட்ட நான்கு ஒலிம்பிக் போட்டிகளிலும் அமெரிக்காவே பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருந்தது. 2004 ஒலிம்பிக் போட்டியில் மூன்றாமிடம் பிடித்திருந்த ரஷ்யா, மீதம் இரண்டு போட்டிகளில் இரண்டாமிடத்தை பிடித்திருந்தது.

ஒளிரட்டும் ஒலிம்பிக் 2008... வெல்லட்டும் திறமை மிக்க வீரர்கள்... ஓங்கட்டும் உலக ஒற்றுமை..!

Thursday, August 07, 2008

ஆத்தூர் வழியாக சேலம் - சென்னைக்கு புதிய ரயிலுங்கோவ்...

சென்னை எழும்பூரில் இருந்து விருதாசலம், ஆத்தூர் வழியாக சேலம் செல்லும் புதிய ரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது. ஆத்தூர்காரங்க எல்லாம் காலரை தூக்கி விட்டுக்கலாம்.

எங்க ஊரின் 30 வருடக் கனவு நிறைவேறப் போகிறது. எங்க ஊர் சேலம் மாவட்டத்திலிருக்கிற ஆத்தூர். சேலத்திலிருந்து 54 கி.மீ. தூரத்தில் கிழக்கு திசையில் உள்ளது எங்கள் ஆத்தூர். இது ஒரு நகராட்சி. அடியவன் இங்குதான் பிறந்தது, தவழ்ந்தது, நடந்தது, படித்தது என அனைத்தும். இன்று, நான் படித்த படிப்பின் காரணமாக சென்னையின் வந்தேறியாகி விட்டேன். பஞ்சம் பிழைக்க வந்துவிட்டேன்.

எங்கள் ஊருக்கு போக வேண்டுமெனில் பேருந்து வழியாகத்தான் செல்ல முடியும். சென்னையிலிருந்து புறப்படும் பேருந்து திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர் வழியாக சேலம் சென்றடையும். நடத்துனர்கள் சேலம் செல்பவர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆதலால் பெரும்பாலும் எங்கள் ஊர் செல்வதற்கு பேருந்தில் பயணிப்பதானால், நின்று கொண்டுதான் பயணிக்க வேண்டும். பயணம் செய்வதற்கு 7 மணி நேரம் ஆகும். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் நாங்கள் சொந்த ஊருக்குச் செல்லும் அல்லல்கள் கொஞ்சமல்ல, நஞ்சமல்ல...

ரயிலில் செல்லாமென்றால் அதற்கு வழியிருக்காது. சேலம் - விருதாச்சலம் வரைதான் ரயில் வந்து செல்லும். அப்படி அவசரமெனில் விருதாசலத்தில் இறங்கி 3 மணி நேரம் காத்திருப்பிற்குப் பின்னர், திருச்சி வழியாக சென்னை செல்லும் ரயில்களில் தொற்றிக் கொள்ள வேண்டும். ஒரே ரயிலில் செல்வதென்றால் ஆத்தூரிலிருந்து சேலம் சென்றுவிட்டு, அங்கிருந்து தர்மபுரி, வாணியம்பாடி, அரக்கோணம் வழியாக சென்னைக்கு வரவேண்டும்.

இனிமேல் அதற்கு வேலையிருக்காது. எங்கள் ஊர் மக்களின் 30 ஆண்டுகால கனவு நனவாகிறது. நாளை முதல் எங்கள் ஊர் வழியாக சென்னை செல்லும் புதிய ரயில் விடப்படுகிறது. சிறப்பு என்னவென்றால். இது செல்லும் வழியனைத்தும் அகலரயில்பாதையாக மாற்றியமைக்கப்பட்டதாகும். இதனால் பயண நேரம் குறையும், ரயிலும் விரைவாகச் செல்லும்.

சென்னை எழும்பூரில் இருந்து சேலத்துக்கும் (ரயில் வண்டி எண்: 2297), சேலத்தில் இருந்து எழும்பூருக்கும் (ரயில் வண்டி எண்: 2298) புதிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது. இந்த புதிய ரயில் நாளை (8.8.08) மட்டும் மாலை 4.30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் (2297) ரயில், அன்று நள்ளிரவு 11.15 மணிக்கு சேலம் சென்றடையும். 9ம் தேதி முதல் இரவு 11.20 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு சேலம் சென்றடையும். மறுமார்க்கமாக சேலத்தில் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எழும்பூர் வரும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், சின்னசேலம், ஆத்தூர், வாழப்பாடி கேட், அயோத்தியாபட்டினம், சேலம் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். புதிய ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கும்.

இனிமேல் பொங்கல், தீபாவளி என அனைத்து நாட்களிலும் இனிமையான பயணத்தை தொடங்குவோம். அட இடைத்தரகர்களே... இந்த ரயிலையும் உங்க வசதிக்காக வளைச்சுடாதீங்க... ஏழைகளும், நடுத்தர மக்களும் பயன்படுத்திக்கட்டும்...

இவ்வழியாக ரயிலை விடுவதற்கு முயற்சிகள் எடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், என் சார்பாகவும் எங்கள் பகுதி மக்கள் சார்பாகவும், இதனால் பயனுறுகிற அனைத்து பயணிகள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகள்... வாழ்த்துக்கள்..!

Wednesday, August 06, 2008

பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.20 லட்சம் கள்ளநோட்டுகள்: ரிசர்வ் வங்கி கண்டுபிடிப்பு

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலம் ஒன்றில் ரூ.20 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் இருந்ததை, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகள்தான் நேபாளம் வழியாக இந்தியாவில் நுழைந்து கள்ளநோட்டுக்களை அதிகளவில் புழக்கத்தில் விடுவதாக சந்தேகம் ஏற்பட்டது. இதனால் நேபாள எல்லை அருகே உள்ள உத்தரப்பிரதேசத்தின் 7 மாவட்டங்களில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலங்களில் உள்ள பணத்தை சோதனை செய்யும்படி ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து உத்தரப்பிரதேசம் சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் துமாரியாகஞ்ச் கிளையில் உள்ள பெட்டகத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இருதினங்களுக்கு முன் சோதனை நடத்தினர். அதில் மொத்தம் ரூ.100 கோடி பணம் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருந்தது. அதிலிருந்து ரூபாய் நோட்டு கட்டுக்கள் முழுவதையும் சோதனை செய்ததில் ரூ.20 லட்சம் அளவுக்கு கள்ளநோட்டுக்கள் இருந்தது தெரிந்தது.

இவை எல்லாம் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள். மேலும் ரூ.70 லட்சம் பணம் குறைவாக இருந்தது. இந்தப் பணமும் கள்ளநோட்டாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சோதனைக்கு முன்பே, இவை அகற்றப்பட்டிருக்கலாம் என பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

வங்கி ஊழியர்களின் கவனக் குறைவால் கள்ளநோட்டுகள் வந்ததா அல்லது வங்கி அதிகாரிகளே இதற்கு உடந்தையா என்பது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறதாம்.

அடங்கப்பா... வங்கியுலுள்ளவனுங்க அனுமதி இல்லாம இது நடக்காதுடா. 20 லட்சம் மதிப்புள்ள நோட்டுகள் கவனக் குறைவா வைக்க முடியாது. நாம 500 ரூபாயை குடுத்தாலா பத்து தடவை திருப்பி திருப்பி பாப்பானுங்க.. இவனுங்களாவது...? ஏமாறுவதாவது... வங்கியிலுள்ள சொங்கிப்பயலுகளை பிடிங்கப்பா... இது புதுவித ஹவாலாவால்ல இருக்கு... நம இனிமே சாக்கிரதையா இருக்கணும் ஏ.டி.எம்.ல கள்ளநோட்டை விட்டுட்டு நம்மள களி தின்ன வச்சிடுவானுங்க....

உத்தரபிரதேச போலிசு மாமா... அவனுவளை சரியா புடிச்சி களி தின்ன வைப்பிங்களா.. இல்ல காசு வாங்கிகிட்டு கமுக்கமா நீங்களும் ரெண்டு கட்டு எடுத்துகிட்டு, அத்தோட அதை அமுக்கிடுவீங்களா..?

வைகைப்புயலு வடிவேலு சொல்ற மாதிரி... இப்படி ஆட்டைய போடுறதுக்கு ரூம் போட்டு யோசிப்பாணுவலோ...?

பாஸ்போர்ட் கிடைப்பதில் தாமதமா..? நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள்..!

என்னடா இது புதுசா இருக்குன்னு பாக்கறீங்களா... விடயம் இருக்கு தலைவா (அல்லது) தலைவி...

பாஸ்போர்ட் ஆவணங்களை சரிபார்த்து அனுப்ப தாமதமானதால் கோவையைச் சேர்ந்தவருக்கு துபாய் வேலை பறிபோனது. அவருக்கு இழப்பீடாக ரூ.80 ஆயிரத்தை சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதை படித்த பிறகு, உங்களிடம் சொல்வதற்கு வந்து விட்டேன்.

கோவையைச் சேர்ந்த தாமஸ் வில்சன் என்பவர் கடந்த 1998ம் ஆண்டு முதல் துபாயில் ஒரு இன்ஜினியரிங் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்தார். 2006 நவம்பர் 6ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோவை வந்தார்.

விமான நிலையத்தில் குடியுரிமை ஆவணங்கள் சரிபார்ப்பு (இமிகிரேஷன்) பிரிவு ஆய்வாளர் ஒருவர், இவரது ஆவணங்களை சரி பார்த்தார். அப்போது ஆவணங்களில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, அதனை சரிபார்க்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்.

9 மாதங்கள் கழித்து,(அவரது பாஸ்போர்டில் குறைபாடில்லை என்று கூறி) 2007 ஆகஸ்ட் 9ம் தேதி தான் அவருக்கு மீண்டும் பாஸ்போர்ட் கிடைத்தது. அதற்குள், அவரை வேலையில் இருந்து துபாய் நிறுவனம் நீக்கியது.

வேலை பறிபோனதற்கு இழப்பீடு வழங்க கோரி பாஸ்போர்ட் அலுவலகம் மீது தாமஸ் வில்சன், கோவை நுகர்வோர் குறை தீர் மையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ''மண்டல பாஸ்போர்ட் அலுவலக தரப்பில் இருந்து எந்த பதிலும் வழங்கவில்லை. எனவே தவறு நடந்திருப்பதை உறுதி செய்து, தாமஸ் வில்சனுக்கு இழப்பீடாக ரூ.80ஆயிரம் வழங்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

மக்களுக்கு பணியாற்றவே அரசியந்திரங்கள்... அவைகளே, மக்களை தற்போது அலைகழித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நுகர்வோர் நீதிமன்றங்கள் மட்டுமே அரசிடமிருந்தும் சரி, தனியாரிடமிருந்தும் சரி... பொதுசனத்திற்கு நிவாரணம் பெற்றுத் தருகிறது.

அரசு அலுவலகங்கள் எந்த லட்சணத்தில் பணியாற்றுகின்றன என்பதும், அதிலும் குறிப்பாக மிக முக்கிய துறையான பாஸ்போர்ட் அலுவலக செயல்பாடு எந்த அளவிற்கு உள்ளன என்பதை கோடிட்டுக்காட்ட மேற்சொன்ன சம்பவம் ஒரு சிறு உதாரணம்.
நீதிமன்றம்தான் இவைகளுக்கு எதிராக நீதி எனும் சாட்டையை சுழற்றுகின்றன. ஆனாலும் அவ்வலுவலகங்கள் திருந்துவதாக இல்லை.

நான் கடந்த மார்ச் 17-ம் தேதி பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்திருந்தேன்... இன்னும் கிடைத்தபாடில்லை. கேட்டால் இன்னும் காவல் துறை அறிக்கை வரவில்லை என்கிறார்கள்...

நானும் நுகர்வோர் நீதிமன்றம் ஏறவேண்டும் போலிருக்கிறது... வாழ்க அந்த அலுவலகம்... வளரட்டும் அதன் புகழ்...

Tuesday, August 05, 2008

கவியமுதம்

அன்பானவளே
நீ இங்கு நலம்
நான் அங்கு நலமா..?

நமக்கு குழந்தை - அதிலும்
நான் விரும்பிய பெண் குழந்தை
பிறந்து விட்டதென்றாய்..!

அப்பெண்ணிற்கு அமுதமென்று
பெயரிட்டதாகவும் நுண்ணலைபேசி மூலம்
உச்சி முகர்ந்'தாய்..!'

அமுதம் வந்தது கண்டு
மட்டற்ற மகிழ்ச்சியில்
என் மனம் துள்ளிக் குதிக்கிறது..!

அத்தூயவளைக்
காண
எந்தன் உள்ளம்
ஏக்கத்தில் துடிக்கிறது..!

பாழும் பணியின்
காரணமாக
நான் சென்னையில்..!

பாசத்தின்
காரணமாய்
நீயும் என் சேயும்
என் பெற்றோரிடத்தில்..!

விரைந்து வருவேன்...
விண்மீனைப் பார்ப்பேன்
என் மீனை கடிப்பேன்..!

கட்டிக்
கரும்புகளே... கமல மலர்களே...
காத்திருங்கள்
காற்றினும் கடிந்து வருகிறேன்
..!

என் மகள் பிறந்தாளென்ற
செய்தி கேட்டதும் - என்
எழுதுகோல் காகிதத்தை முத்தமிட...

நாம் பெற்ற
அமுதத்திற்கு

இதோ கவியமுதம்..!

உன்னில் நான்
என்னில் நீ
நம்முள் அமுதம்..!

விண்ணில் நீ
உன் கண்ணில் நான்
தாய் மண்ணில் அமுதம்..!

நினைவில் நான்
கனவில் நாம்
உருவில் அமுதம்..!

என் நினைவுகள் நீ ரசிக்கும் பாடலில்
உன் உறவுகள் நம் தேடலில்
அமுதம் நம் கூடலில்..!

நீ பொறுமை
நான் கருமை
அமுதம் நம் பெருமை..!

நீ எந்தன் பிரியம்
நானுந்தன் பிரியம்
அமுதம் நம் பிரியம்..!

நான் உந்தன் மோகம்
நீ எந்தன் தாகம்
அமுதம் நம் ராகம்..!

நீ பொன்மான்
நான் பொல்லாத மான்
அமுதம் நம் புள்ளிமான்..!

பயன்பாட்டிற்கு வருகிறது பத்து ரூபாய் நாணயம்..!



ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களை போல பத்து ரூபாய் நாணயங்களை தாராளமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

பொதுவாக ரூபாய் நோட்டுகள் அச்சிட ஆகும் செலவை விட அதே திப்பு கொண்ட நாணயங்களை அச்சிட அதிக செலவாகும். என்றாலும், நோட்டுகளை விட நாணயங்கள் கூடுதல் காலத்துக்கு உழைக்கும் என்பதால் எல்லா நாடுகளும் நாணயங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட்டு வருகின்றன.

இந்தியாவில் தற்போது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணங்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. இவற்றை ரூபாய் நாணயங்கள் என்றும் 50 காசு வரையிலான நாணயங்களை சிறிய நாணயங்கள் என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.

இந்திய நாணயச் சட்டம் 1906ன் படி ஆயிரம் ரூபாய் மதிப்பு வரை நாணயங்கள் வெளியிடலாம். அதன்படி, ரிசர்வ் வங்கி ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய், நூறு ரூபாய், ஐம்பது ரூபாய், இருபது ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களை வெளியிட்டு வருகிறது. ஆனால் அவைகளனைத்தும் சிறப்பு நாணயங்களாக (சிறப்பு தபால் தலை போன்று) வெளியிட்டு வருகிறது. நாணய சேகரிப்பாளர்களுக்கு இது தெரிந்த விடயம்தான்.



இப்போது மக்களிடையே நாணய பநன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 10 ரூபாய் நாணயங்களை அதிக அளிவில் வெளியிட இந்திய அரசு முடிவு செய்து அதன் பொருட்டு நொய்டாவில் உள்ள இந்திய அரசின் நாணயம் அச்சிடும் மையத்துக்கு கடந்த ஆண்டு ஆர்டர் கொடுக்கப்பட்டது.

கடந்த 7 மாதங்களாக சுமார் 70 லட்சம் பத்து ரூபாய் நாணயங்கள் அச்சிடப்பட்டு பயன்பாட்டிற்கு விட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது அச்சிடப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயம் இரண்டு ரூபாய் நாணயத்தை விட சற்று பெரியதாக இருக்கும். இதன் எடை 8 கிராம். குறுக்களவு 28 மில்லி மீட்டர். அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு மையம் இந்த நாணயத்தை வடிவமைத்துள்ளது. இந்நாணயங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

இந்தியாவில் மும்பை, கொல்கத்தாவில் அலிபூர், ஐதராபாத்தில் சைபாபாத் மற்றும் செர்லபள்ளி, உ.பி.யில் நொய்டா ஆகிய இடங்களில் நாணயம் அச்சிடும் இடங்கள் உள்ளன.



என்ன நாணயம் வந்தால் என்ன..ஏழைகள் வயிறு நிரம்பி விடப்போகிறதா என்ன..?!

மலேசியா ஏர்லைன்ஸில் தமிழில் கால்சென்டர்




மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் குறித்த தகவல்களை தமிழ் மக்கள் எளிதில் அறிந்துகொள்ள வசதியாக தமிழ் கால்சென்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவை சேர்ந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது. பயணிகளின் வசதிக்காக மலாய், ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் கால்சென்டர் சேவையை இந்நிறுவனம் வழங்கி வந்தது. தற்போது, தமிழ் மக்களுக்காக தமிழிலும் கால்சென்டர் வசதிகளை வழங்கி வருகிறது. கடந்த ஜூலை 11-ம் தேதி முதல் இது செயல்பட்டு வருகிறது.

தினமும் இந்திய நேரப்படி காலை 5.30 முதல் இரவு 6.30 வரையிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.30 முதல் மாலை 3.30 வரையிலும் 603 7843 3000 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மலேசியா ஏர்லைன்ஸ் பற்றிய தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ளலாம்.

சர்வதேச அளவில் தமிழுக்கென்று தகவல் சேவை... வாழ்த்துக்கள் மாலேசியன் ஏர்லைன்ஸ்...

Monday, August 04, 2008

பெண் சிசுவின் கேள்வி

அம்மா... நீ உணர்ச்சிகளுக்கு
அடிமையாகாதே..?
அப்படி அடிமையானதால்
கருவாகி உருவாகி விட்டேன்
உன் கருவறையில்
பெண் சிசுவாய்...

என்னால் அப்பனை
அறியமுடியாது - ஆனால்
உன்னை நானறிவேன்
கருவறையில் மட்டும்...

பிறந்தது பெண் சிசு
என்பதால்
கல்லெறிவது போல்
என்னையும் முள்வேலியில்
எறிந்து விட்டாயே...
ஏனம்மா..?

பெண்ணாகப் பிறந்து விட்டால்
பொன், பொருளுடன்
ஆடவனிடம் தரவேண்டும்
என்ற சமூக கட்டிற்கு
பயந்துவிட்டாயா..?

இல்லை... தவறான முறைதனில்
தப்புத் தப்பாய் நீ செய்த
திரைமறைவு காரியங்கள்
உன்னை வெளிச்சத்தில்
கொண்டு வந்துவிட்டதே
என்ற வேதனையா..?

நான் செய்த பாவமென்ன...
நீ சிற்றின்பம் அடைய
நானன்றோ பெருந்துன்பத்திற்கு
ஆளாகியிருக்கிறேன்...

அரசுதான்
உன்போன்றோர்க்கு
ஆயிரம் முறை சொல்கிறதே
பாதுகாப்புடன்..... கொள்ளுங்கள்
பாதுகாப்புடன்..... கொள்ளுங்கள் என்று

அப்படி நீ செய்யாததால்
என்னையல்லவா
இன்று பாதுகாக்காமல்
கொல்லுகின்றாய்..?

இனியேனும் நீ இதுபோன்ற
உணர்ச்சிகளுக்கு அடிமையாகாதே
அப்படி நீ அடிமையானதால்
இன்று என் உயிர்
மெல்ல மெல்ல ஊமையாகிக்
கொண்டிருக்கிறது
முள்வேலிகளின் பிடியில்...

இனியேனும் நீ
உணர்ச்சிகளுக்கு அடிமையாகாதே
என் போன்றோர்
இந்த பாவ பூமியை
பார்க்காத பாக்கியமாவது
கிட்டும்...
(நீயன்றோ உத்தமத் தாய்)

Friday, August 01, 2008

ஓர் ஏழைத் தாயின் தாலாட்டு

பணம் காசு அவளிடம் இல்லை... மாட மாளிகையும் அவர்களுக்கு இல்லை... இருப்பது குடிசையானாலும்... அதுவே அவர்களுக்கு மாளிகையாய்... இதே ஒரு ஏழைத் தாயின் தாலாட்டு...

''ஆராரோ...ஆரிராரோ...
ஆரிராரோ... ஆராரோ..!
சாமி பவனி வரும் நேரத்தில
என் சாமி நீ பிறந்த..!
என் சாமி நீ பொறந்த நேரம்
சாமி கொணம் உனக்கு...!
இங்கே தேருல சாமி வரும்
தெருவெல்லாம் ஊர்கோலம்..!
என் சாமி நீ சுத்திவர
தேக்குத் தேரு உனக்கில்ல..!
மண்ணுல நீ நடந்தா
மனசெல்லாம் வலிக்குதடா..!
மாளிகையில் நீ நடக்க
மனம் போல செல்வம் இல்லை..!
தங்கமே நீ குடிக்க
தங்கப் பாலாடை உனக்கில்லை..!
மாமன் வாங்கி வந்தான்
சங்குப் பாலாடை..!
சர்க்கரையாய் இனிக்குமடா
நான் ஊட்டும் பால் உனக்கு..!
சந்திரனே நீ குடித்து விட்டு
சமத்தாய் நீ உறங்கு..!

பட்டுக்குஞ்சரமே நீ தூங்க
பஞ்சுமெத்தை இங்கில்ல..!
மெத்தையாட்டம் நீ உறங்க
பெத்தவ மடி இருக்கு..!
பணம் காசு இல்லன்னாலும்
பொன்மணியே... பொன்நிலவே...
குறையாத பாசம் மட்டும் நமக்கிருக்கு...!
ஆராரோ..ஆரிராரோ..!''

- ரஜினா. அகரம் கிராமம்.

(ஏழ்மையில் இருந்தாலும், அத்தாயின் மனம் என்றுமே பாசத்தால் உயர்ந்த நிலையில் இருக்கிறது... காசு பணம் இல்லன்னாலும்... பாசம் இருக்குதடா என்கிறாள்... தன்மகன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று, ஏக்கப்பட்டாலும்... உள்ளதை வைத்து திருப்தியுடன் வாழும் வாழ்க்கை இவர்களிடம் மட்டுமே காணக் கிடைக்கும்... இதற்கு நிகரான பாடல் உண்டா...)

தாயின் தாலாட்டு

பெண் குழந்தை என்றால் கிராமங்களில் வெறுத்து விடுவார்கள். அப்பிள்ளைகளை படிக்க அனுப்பாமல்... வீட்டுற்குள் அடக்கி விடுவார்கள்... மதுரைக்கு அருகிலுள்ள கிராமங்களில் பெண்குழந்தைகளை கள்ளிப்பால் விட்டு கொலை செய்யும் பாதகம் இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இவற்றுகு மாறாக தனது பெண்குழந்தையை ஒரு கிராமத்திலிருக்கும் தாய் தாலாட்டும் அழகை கேளுங்கள்...

''அம்மாளுக்கு ஆராரோ.. ஆரிராரோ...
ஆராரோ... ஆரிராரோ..!
நீ பாவாடை சரசரக்க
பள்ளிக்கூடம் போயிவாயேன்..!
நீ பள்ளிக்கூடம் போயிவந்தா
அம்மா பலகாரம் செய்து வைப்பேன்..!
நீ படிச்சாக்கா எம்மா குலப்பெருமை
நம்ம சனம் அங்கே கையெடுக்கும்..!
எம்மா... பணம் காசு நமக்கிருந்தா
பலபேரு கையெடுப்பான்...
குடிப்பெருமை நமக்கிருக்கு
நம்ம குலப்பெருமை தலையெடுக்க
நீ படிச்சி ஆகவேணும்..!
களத்து மேடு நெல்லுகுத்தி
கண்மணியே உன்னை படிக்க வைப்பேன்..!
குடும்பத்துக்கே நெல்லுகுத்தி
குலவிளக்கே உன்னை படிக்க வைப்பேன்..!
பட்டணத்துக்கே நெல்லுகுத்தி
பாலகியே உன்னை படிக்க வைப்பேன்..!
பாலூறும் மனசினிலே எம்மா
பக்குவாமாய் படிக்க வேணும்..!
ஆராரோ... ஆரிராரோ...

அம்மாளுக்கு ஆராரோ.. ஆரிராரோ..!''

- பூங்கொடி, பென்னகர் கிராமம்.

(கல்வியின் அவசியத்தை, கிராமத்திலிருக்கும் ஒருதாய், தன் குழந்தைக்கு எடுத்துரைக்கிறாள்... சமூகத்தால் ஓதுக்கப்பட்ட பிரிவில் அவர்கள் இருக்கிறார்கள். அதை அழித்தெடுக்க கல்விதான் ஆயுதம் என்கிறாள்... இதற்கு இணையான ஒரு படைப்பை நகரத்தில் கிடைத்துவிடுமா..?)

கிராமத்து தாயின் தாலாட்டு...

ஒவ்வொரு பெண்ணுமே படைப்பாளிகள்தான்... அதிலும் குறிப்பாக கிராமத்தில் வாழும் பெண்கள் சிறந்த படைப்பாளிகள் எனலாம்... படைப்பாளியாவதற்கு அவள் படித்திருக்க வேண்டும் என்பதில்லை... பகட்டான நகரத்தில் இருக்க வேண்டும் என்பதில்லை...படிக்காமல் இருந்தாலும் கிராமத்து பெண்கள் பலவிதங்களில், நகரத்து பெண்களைவிட சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள்...

ஒரு குடும்பத்தை உருவாக்குவதும், ஒரு குழந்தையை உருவாக்குவதும் பெண்ணே... ஒரு பெண் எப்போது முழுமையடைகிறாள் என்றால் அவள் ஒரு குழந்தைக்கு தாயாகும்போதுதான் என்கிறார்கள்... (இதற்கு மட்டும்தான் பெண்களா..? என்று பெண்ணியவாதிகள் கொடி தூக்க வேண்டாம்...)

ஒவ்வொரு தாயும் படைப்பாளிகளே... பாடகிகளே... அதற்கு அவள் படித்திருக்க வேண்டும் என்பதில்லை.. தன் வாழ்வில் பட்ட அனுபவமே போதும். படிக்காமலிருந்தாலும் அவளும் கவிதாயினிதான், படைப்பாளிதான்... பாடகிதான்...

கிராமத்தில் வாழும் ஒரு பாமர, ஏழைத்தாய் தன் குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடுகிறாள்... அவள் படிப்பின் வாசமறியாதவள்... அவள் துன்பத்தை மட்டுமே அறிந்தவள்... சமூகத்தால் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டவள்... இதே அவளது குரல்... தென்றலாக.. தேனினும் இனிய தாலாட்டாக...

''ஆராரோ... ஆரிராரோ...
ஆரிராரோ.. ஆராரோ...
உன்னை யானையில போடும்போது
எண்ணமிட்டு போட்டேனோ..?
உன்னை தூளியில போடும்போது
துயரமிட்டு போட்டேனோ..?
தூங்கமா நீ அழற
துக்கம் என்ன சொல்லு கண்ணே..!
தொட்டில் கட்டி தூங்க வைக்க
மச்சு வீடு கட்டவில்ல...
மங்கா என் மாணிக்கமே
கண் மலராம ஏன் அழற...
கட்டில் மெத்தை போட்டு வச்சு
கன்னலுனை தூங்க வைக்க
பொட்டுக்காசு நமக்கில்ல
பொழுது மறைஞ்சபின்னும்
பூவே நீ ஏன் அழற...
அம்மா மடி இருக்கு...
அரும்பே நீ ஏன் அழற
அப்பாவோட தோளிருக்கு...
அழகே நீ ஏன் அழற...
நாங்க செஞ்ச ஓவியமே
ஓயாம நீ அழற
உன் ஒளிவு மறைவு சொல்லு கண்ணே...!
உனக்கு நெய் போட்டு சோறூட்ட
நல்ல காலம் நமக்கு இல்ல..!
உனக்கு பசும்பாலில் சோறூட்ட
பணம் காசு நமக்கு இல்ல..!
பாக்கியம் வரும் வரைக்கும்
பால் நிலவைப் பார்த்துக்கடா..!
ஆராரோ... ஆரிராரோ...
ஆரிராரோ.. ஆராரோ...''


- ஜெயந்தி. கலவை கிராமம்.

இவர்களுக்கு இயற்கைதான் செல்வம். ஏழ்மைதான் உடன்பிறப்பு... ஆனாலும் அத்தாயின் நம்பிக்கை தளரவில்லை... தன் குழந்தைக்கு நம்பிக்கை ஊட்டுகிறாள்... இதற்கு நிகரான படைப்பு உண்டா...
(இதை நகரத்தில் உள்ள, படித்த பெண்கள் செய்வார்களா..?செய்திருக்கிறார்களா..?)

Thursday, July 31, 2008

உழைப்பாளிகளின் உறக்கங்கள்...

கதிரவன் எழுந்தது முதல், அந்தி சாயும் வரை உழைப்பாளிகளின் உடல் மட்டுமல்ல, அவனது நிழல் முதற்கொண்டு உழைக்கும். உடல் உழைப்பாளிகளுக்கு நேரம் எது..? காலம் எது..? ஓய்வு கிடைக்கும் போது, கிடைத்த இடத்தில் உறங்குகிறார்கள். அசதியின் மிகுதியில் அது பகலானாலும் அந்த உழைப்பாளிகளுக்கு உறக்கம் வந்து விடுகிறது.

சென்னையில், நான் கண்ட உழைப்பாளிகளின் உறக்கங்கள்... அப்படியே நிழற்படங்களாய்...


சென்னையின் பரபரப்பான அண்ணாசாலையோரம்... பயணிகளை ஏற்றி ரிக்ஷா வண்டி மிதித்த களைப்பில் உறங்கும் உழைப்பாளி. தன் வாகனமே தனக்கு பட்டு மெத்தையாக... மனித உழைப்பு ஓய்வெடுக்கிறது.. அவருக்கு பின்புறம் உள்ள ஆட்டோ ரிக்ஷா (இயந்திர வண்டி) ஓய்வின்றி அடுத்த பயணிக்காக காத்திருக்கிறது...


சென்னை, மெரீனா கடற்கரையில் ஓய்வெடுக்கும் மீன் வியாபாரத் தொழிலாளி... தன் மிதிவண்டியே தலையணையாய்...



சென்னை, மடிப்பாக்கம் ஏரியை தூர்வாரிய களைப்பில் ஓய்வெடுக்கும் பொக்லைன் வாகனத்தின் ஓட்டுனர்... அவ்வாகனத்தின் சக்கரமே அவருக்கு பஞ்சுமெத்தையாக... அதன் மேல் உறங்கும் உழைப்பாளி...

குழந்தையின் உறவுகள்

அழும் குழந்தையை
அமைதிப்படுத்த
அன்று...

அம்மாவின் தாலாட்டு
அப்பாவின் ஆறுதல் மொழி
அண்ணனின் பாட்டு
அக்காவின் கொஞ்சல்
தாத்தாவின் அரவணைப்பு
பாட்டியின் பாசமொழி...
என உறவுகளின்
பாச விசாரிப்புகளில்
அக்குழந்தையின் வீறிடல் நின்றது..!

இன்றோ வீறிடும்
செல்போன் பாடலோடு
போகிறது
அக்குழந்தையின் உறவுகள்..!

(சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தும் இளம்தம்பதி , தங்கள் குழந்தையை அமைதிப்படுத்த செல்போனை பயன்படுத்தினர். அதைக்கண்ட போது, என்னுள் தோன்றியதை (27.03.2005 -அன்று) எழுதியது)

இயற்கை

இவ்வுலகத்தை
படைத்து...
அதைக் காக்கவும்
அழிக்கவும்
பற்பல காரணிகளையும்
கானல் உயிர்களையும்
கண்டு உயிர்ப்பித்த
பிரம்மா..!

(03.11.2004 அன்று எனது தோழி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இக்கவிதை புனையப்பட்டது.)

பணம் ஒரு வேசி..!

விடாமல் விரட்டும் வறுமை
மனதில் படரும் வெறுமை
மற்றவர் பார்வையில் சிறுமை
மனம் கேட்கிறது பொறுமை..!

வாய்மையை கடைபிடித்தால்
வருவாய் கிடைக்காது..?
பொய்மையைப் பிடித்தால்..!- அதற்கு
வாய்த்திறமை வேண்டும்..!?

எல்லாம் பொய்யாய்ப்போன உலகில்
பொய்மையைப் பிடியேன்... - ஆனால்
இவ்வுலகில் எல்லாம் பணம்
பணம்... பணம்... பணம்..!

பணம் கிட்டாவிடில்
மனம் ஆகிவிடுகிறது ரணம்...
குணம் குமைந்து சாகிறது
மனம் அழுது தொலைக்கிறது..!

பணம் ஒரு வேசி
பணக்காரனிடம் மட்டும் ஒட்டும் பாசி
அவ்வேசி நம்மிடமிருந்தால்
சமூகம் நம்மை உயரத்தில் வைக்கும்
இல்லாவிடில் குப்பையில் தள்ளும்..!

(சென்னையில் வேலை தேடி.. வேலை தேடி ஓய்ந்து போனேன். காய்ந்து, தீய்ந்தும் போனேன்... அதன் விளைவாக, 17.03.2005 அன்று எழுதியது.)

Wednesday, July 30, 2008

ரஜினிகாந்துக்கு ஏன் இந்த வேலை..?

குசேலன் திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரி கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவருக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அதுவும் கன்னட மொழியிலேயே... அவரது மொழிப்பற்றுக்கு பாராட்டுகள்...

மேடையில் ஒரு பேச்சு, மேடையில்லாதபோது ஒரு பேச்சு.. ரஜினிக்கு ஏன் இந்த வேலை. ஐயா..? குசேலன் கர்நாடகாவில் வெளியாகாமல் போனால் யாருக்கென்ன நட்டம் வந்துவிடப்போகிறது. உம்படம்தான் தமிழகத்திலேயே அதிக பணம் பார்க்கிறதே. அது போதாதா..? கர்நாடகத்தில் வெளியிட அனுமதி தாருங்கள் என்று வேண்டுகோள் எதற்கு..?

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் செயல்படாமல் இருப்பதால் 6 கோடி தமிழர்களுக்குதான் நட்டம். அவர்களின் வாழ்வாதார உரிமை நசுக்கப்படுகிறது... அதற்காக நீங்கள் மேடையில் முழங்கியதோடு சரி... செயலில் என்ன காட்டினீர்கள்... அதுசரி அரசாங்கமே இத்திட்டத்தை 'அப்புறம் பாத்துக்கலாம், கிடப்பில் போடு' என்ற போது நீங்கள் என்ன செய்வீர்கள்....

உங்களுக்கு
தேவை... உங்கள் படம் ஓடவேண்டும்... ஒகேனக்கல் குடிநீர் தமிழகத்தில் தேவையான அளவிற்கு ஓடினால் என்ன..? ஓடாவிட்டால் என்ன..? தமிழனுக்கு தண்ணீர் கிடைத்தால் என்ன..? கிடைக்காவிட்டால் என்ன..? அந்தக்கவலை உங்களுக்கு எதற்கு..?

இத்திட்டம் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏதாவது கன்னட மொழியிலேயே கடிதம் அனுப்பியிருக்கிறீர்களா..? என்று கேட்க உள்ளம் துடிக்கிறது... ஆனால் நீங்கள் அரசு சார்ந்தவர் அல்ல என்பதால் விட்டுவிடலாம்.

எப்போதும் ஒரு நிலையில், கொள்கையில் இருக்க வேண்டும். மேடை கிடைத்தது என்பதற்காக... ''மக்கள் என்ன முட்டாள்களா..? ஓகேனக்கலை சொந்தம் கொண்டாடினால் அவர்களை உதைக்க வேண்டாமா? ''என்றுவிட்டு... (இதே சமயம், கர்நாடகத் திரைப்படத்துறையினர் ஒகேனக்கல் கர்நாடகத்திற்கு சொந்தமானது என்று அங்கே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்...) இப்போது... ''ஹி... ஹி... நான் அப்ப பேசினது உங்களை காயப்படுத்தியிருக்கும்... அரசியல் வேறு... சினிமா வேறு... அதை விட்டுடுங்க... என் படம் வெளியாவணும்... வழி சொல்லுங்க..." என்று கடிதம் எழுதியிருப்பது ஏற்புடையதல்ல. அதெப்படி, (தமிழர்களை திருப்திப்படுத்த) அவர்களை வ சைபாடிவிட்டு, இப்போது அவர்களிடமே அனுமதி கேட்கிறீர்கள்..?

ஆக, அரசியல் எனில் ஒரு பேச்சு... சினிமாவெனில் ஒரு பேச்சு... 'பாம்புக்கும் நோகக் கூடாது, தடிக்கும் வலிக்கக் கூடாது' என்பது போல் இருக்கிறது உங்களது நடத்தை... கலை என்பது யாரிடமும் அனுமதி கேட்டு வெளிக்காட்டுவதல்ல... இதற்கு நீங்கள் கடிதம் எழுதாமல் இருந்திருந்தால் உங்களை கண்ணியவான் என்று எண்ணியிருப்பேன். கடிதம் எழுதியதால் அப்படி நினைக்கத் தோன்றவில்லை...

அங்கு படம் வெளியாகவில்லை என்று யாரும் அழவில்லை. அப்படத்தை பார்ப்பதால் அவனுக்கு சோறோ... நீரோ... வந்துவிடாது... அதற்காக வரிந்துகட்டிக் கொண்டு கடிதம் எழுதுகிறீர்கள். அவர்களும் ரஜினி கடிதம் எழுதி கேட்டுக்கிட்டதால வெளியிட அனுமதிக்கிறோம் பந்தாவாக பேட்டியளிக்கிறார்கள்...

படத்துக்கே அனுமதி கேட்க வேண்டியிருக்கிறது... குடிநீருக்கு...? அட போங்கப்பா... தமிழர்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை சினிமாவும் சரி, அரசியலும் சரி நம்மை ஏய்த்து பிழைக்குமே தவிர, நல்லதை செய்யாது என்பது மட்டும் திண்ணம்..!

-----@-----@-----

ரஜினியின்
உண்ணாவிரதப் பேச்சு


தமிழக அரசு ஒகேனக்கல்லில் குடிநீர்த் திட்டத்தைத் தொடங்க கர்நாடக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கு ஆதரவாக கர்நாடகத்தில் திரைப்படத் துறையினர் போராட்டம் நடத்தினர்.

இதுபோல் அத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரி தமிழக அரசுக்கு ஆதரவாக தமிழ்த் திரைப்படத் துறையினர் (கடந்த ஏப்ரல் 4, 2008, சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பேசியதாவது:
''கர்நாடகத்தில் நடைபெறும் சம்பவங்கள் மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. நம் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது. உச்சநீதி மன்ற உத்தரவுக்கு மதிப்பு இருக்கிறதா? இல்லையா?

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் போட்டு இது கர்நாடகம், இது தமிழகம் என பிரிக்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்கும்போது ஓகேனக்கலை சொந்தம் கொண்டாடினால் அவர்களை உதைக்க வேண்டாமா?

நான் மதிக்கும் ஓரு கர்நாடகத் தலைவர்... வட மாநிலத்தில் பொறுப்பில் இருந்தவர்... கர்நாடகத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கு தமிழக முதல்வர் கருணாநிதிதான் காரணம் என்கிறார். எதைச் சொன்னாலும் நம்பி விடுவதற்கு மக்கள் என்ன முட்டாள்களா? எப்போதும் உண்மையைச் சொல்லுங்கள். உண்மை, சத்தியம், நியாயம்தான் சோறு போடும்.

வெறும் அரசியல் காரணங்களுக்காக எந்தக் காலத்திலும் உண்மையை மறைக்க வேண்டாம். மேலே ஓருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். அரசியல் சுயநலத்தையும் தேர்தல் ஆதாயத்தையும் மனதில் வைத்துக்கொண்டு மக்கள் நலனைப் புறக்கணித்துவிடாதீர்கள் என தேவகௌடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா, எஸ்.ஏம்.கிருஷ்ணா ஆகியோருக்கு நான் பணிவாக வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து இந்தப் பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் உடனடியாக முற்றுப்புள்ளி வையுங்கள் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்''
என்றார் ரஜினிகாந்த்.

----------@------------@--------

அப்போதே ரஜினிகாந்த் பேசிய சில கருத்துகளுக்கு கர்நாடகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ரஜினிகாந்த் படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று பல கன்னட சங்கங்கள் அறிவித்ததுடன் போராட்டமும் நடத்தின.

இந்நிலையில் ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா நடித்த குசேலன் படம் ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகம் உள்பட பல மாநிலங்களில் திரையிடப்படுகிறது.

இதையடுத்து கர்நாடகத்தில் அப்படத்தைத் திரையிட ஓத்துழைப்பு அளிக்கக் கோரி கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவரான நடிகை ஜெயமாலாவுக்கு ரஜினிகாந்த் கடிதம் ஏழுதியுள்ளார்.
முற்றிலும் கன்னடத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் ரஜினிகாந்த் கன்னடத்திலேயே கையெழுத்திட்டுள்ளார்.

ரஜினிகாந்த், கர்நாடக திரையுலக அமைப்பிற்கு எழுதிய கடிதம்

கடிதத்தில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:

'ஒகேனக்கல் பிரச்சினையில் நான் பேசிய பேச்சு பலரையும் காயப்படுத்தியிருக்கும், இன்னும் கூட பலர் மறந்திருக்க மாட்டீர்கள் என்பதை நானறிவேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அது என் இயல்புக்கு மாறானதும் கூட.

ஆனால் என்னுடைய ஒரே சிந்தனை, பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதுதான்.

நான் ஏற்கெனவே சொன்னதுபோல, என் படத்தை தமிழர்கள் மட்டுமல்ல, கன்னட மக்களும் மற்ற மொழிக்காரர்களும் கூட பார்த்து ரசிக்கிறார்கள். எனவே குசேலன் படத்தை கர்நாடகாவிலும் வெளியிட ஒத்துழைப்பு தாருங்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்கள் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து தங்கள் திரைத்துறையை வளர்த்துக் கொள்வதை விட்டுவிட்டு, சண்டை போட்டுக் கொள்ளலாமா... இனிமேலாவது, அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்'
என்று எழுதியிருக்கிறார்.

பெங்களூரில் 17 பிரிண்டுகளுடன் குசேலன் வெளியாகும் என்றும் கர்நாடகாவின் இதர பகுதிகளில் 5 தமிழ் பிரிண்டுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குசேலனின் தெலுங்குப் பதிப்பான கதாநாயகுடு, கர்நாடகாவெங்கும் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வெளியாவதால் கர்நாடகம் முழுவதிலுமே குசேலன் வெளியீடு களை கட்டியுள்ளதாம்.

பாவம் ஏமாளித் தமிழர்கள்....

வள்ளிக்கிழவி (சிறுகதை)

காலை வேளையில் அன்னவயல் கிராமம் வயல் வேலைகளுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. கதிரவனின் வசம் பார்த்து கருமமே கண்ணாக வேலை செய்ய கிளம்பியவர்களில் வள்ளிக் கிழவியும் ஒருத்தி...

வள்ளிக் கிழவி என்றால் அக்கிராமத்தில் தெரியாதவர்கள் இருக்காது. சிறு குழந்தைகளுக்கும் கூட அவளைத் தெரியும். அவளது குடும்ப பாரம்பரியம் அப்படி. காலம் செய்த கோலம்.. கணவனை இழந்து தம் இரு மகன்களுக்காக வாழ்கிறாள்...

ஐம்பதைத் தாண்டிய வயது. தனது இரு மகன்களுக்காக உழைத்து...உழைத்து சளைக்காத முகம். அவள் கைரேகையைப்போல் அவள் முகத்திலும் சுருக்க ரேகைகள் ஓடியிருந்தது. அவள் கால் வெடிப்புகள் அவள் பட்ட துன்பங்களை கதை கதையாக சொல்லும். அவளுக்கு சொந்தமாக இருந்த அரை ஏக்கர் நிலத்தில் விதைத்திருந்த நெற்பயிர்களில் இன்று களை பறித்தாக வேண்டும்.

அவளுக்கு சொந்தமான வயக்காட்டிற்கு வந்துவிட்டாள். ஆனால் மனம் அங்கு ஒரு நிலையில் இல்லை... 'காஷ்மீர் பகுதியெங்கும் பதற்றம்' என எட்டு மணி செய்தி கேட்டதிலிருந்து மனது அடித்துக் கொண்டது. மூத்த மகன் மோகனனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. என்ன பண்ணிட்டிருக்கானோ... எப்படி இருக்கானோ... அவனிடமிருந்து ஒரு தகவலும் வரலயே... ம்ஹூம்... ' என்ற பெருமூச்சுடன் களத்துமேட்டிலிருந்து வயலுக்குள் இறங்கினாள்.

மோகனன், இந்திய ராணுவத்தின் இளஞ்சிங்கங்களில் ஒருவன். தாய்ப்பற்றை மனதிற்குள் வைத்து பூட்டிவிட்டு, தாய்நாட்டின் மீது பற்று வைத்து இராணுவத்திற்கு சென்றவன். தாய்நாட்டிற்கு உழைத்தாலும் பெற்ற தாயை மறந்து விடுவானா என்ன... மாதா மாதம் அவனிடமிருந்து பணமும், கடிதமும் வரும். அக்கடிதம்தான் அவளுக்கிருக்கும் பெரும் ஆறுதல்...

இளையவன் செல்வம். கல்லூரியில் இளங்கலை படிப்பில் இறுதியாண்டு மாணவனாக பயின்று கொண்டிருக்கிறான். இன்று ஏதோ ''என்.சி.சி ஷ்பெஷல் கிளாஸ் இருக்கும்மா...'' என்றுவிட்டு சீக்கிரமாகவே கல்லூரிக்கு சென்று விட்டான்.

நானெல்லாம் படிச்சிருந்தாதானே இதெல்லாம் தெரியும். நம்ம அப்பந்தான் நம்மளை வீட்டை விட்டே வெளியவே அனுப்பலியே..என சிந்தித்துக் கொண்டே களையெடுத்துக் கொண்டிருந்தவளை தபால்காரர் பரமசிவம் குரல் கேட்டு நிமிர்ந்தாள்...

''வள்ளியம்மா... உன் பெரிய மகன்கிட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு...''
இந்த வார்த்தையைக் கேட்டதும் அவள் முகத்தில் இருந்த சுருக்கங்கள், சட்டென்று மறைந்து மகிழ்ச்சிக்கு வழிவிட்டது. அவள் முகம் பரவசத்தில் பிரகாசித்தது. 'ராணுவத்துக்கு போயி 5 வருசமாச்சு... மாசத்துக்கு ஒரு கடுதாசி போடுவான்... எப்பவாச்சும் கோன் பண்ணுவான்... என்ன இந்த மாசம் ரெண்டாவது கடுதாசி அனுப்பியிருக்கான்...ஊருக்கு வரேன்னு சொல்லியிருக்கானோ....' என நினைத்தபடியே களத்துமேடேறினாள்.

''தபால்காரரே அதை கொஞ்சம் படிச்சு சொல்லுங்களேன்...'' என்றாள்.

அவரும் கடிதத்தை பிரித்தார். உள்ளே மோகனனின் கையெழுத்து ஆற்றுப் பிரவாகமாக நேர்த்தியாக ஓடியிருந்தது... உடன் படிக்கலானார்...

''அன்புள்ள அம்மாவிற்கு...

தாய்நாட்டைக் காக்கும் இராணுவ வீரன் மோகனன் எழுதிக் கொள்வது... இதுவரை உன் மகன் என்றுதான் எழுதி வந்திருக்கிறேன். இன்று இப்படி எழுதுவதற்கும் அர்த்தமிருக்கிறதம்மா... என்னை, இத்தேசத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து விட்டேன். அதான் அப்படி எழுதியிருக்கிறேன்...

உன் முகம் பார்த்து ஐந்து வருடங்களாகி விட்டது. உன்னையும் தம்பியையும் பார்க்க வேண்டுமென்று முன்பு எழுதியிருந்தேன். இப்போது அது முடியாது.
எப்படி அம்மா இருக்கிற... தம்பி எப்படி இருக்கான்... அம்மா நாங்களிருவரும் உன் முகம் மட்டுமே அறிந்தோம். அப்பா நாங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும்போதே இறந்து விட்டதால்... நீ எங்களை வளர்க்க, நீ பட்ட துன்பங்களை நானறிவேன்...

இதோ நாங்கள் வளர்ந்து விட்டோம். அம்மா... நீ எனக்கு நிலாச் சோறு ஊட்டிய தருணங்கள்... சிறு வயதில் நானும் தம்பியும் நமது கிராமத்தில் போட்ட ஆட்டங்கள், ஏரியில் மீன் பிடித்தது என என் நினைவுகள் என்னுள் வந்து, வந்து செல்கிறது. தீபாவளியன்று பொம்மை துப்பாக்கிக்காக நானும் தம்பியும் போட்ட சண்டையை இன்னமும் நினைத்து மகிழ்கிறேன்.

பொம்மை துப்பாக்கியை கையில் பிடித்தவன் இன்று உண்மையான துப்பாக்கியை ஏந்திக் கொண்டிருக்கிறேன். இதோ எனது சரித்திரம் ஆரம்பித்து விட்டதம்மா... நான் பிறந்த பிறப்பின் பயனை இனிதான் அடையப் போகிறேன். நீ கொடுத்த தாய்ப்பாலுக்கு வேலை வந்து விட்டது. நம் தேசத்தின் நலன் காக்கும் வேளை வந்துவிட்டது.

கார்கில் போர் எனக்கு கடுகளவாக தெரிகிறது இன்று. ஏனெனில் அதைவிடப் பெரிய போருக்கு உன் மகன்... இல்லை... இந்த பாரதத்தாயின் மகன் கிளம்பப் போகிறான்.

இந்திய மண்ணையும், காற்றையும் சுவாசித்த எனக்கு, எதிரி நாட்டின் சுவாசத்தை அழிக்க ஆணை வந்துவிட்டது. இந்தியாவை ஆக்கிரமித்திருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளை நோக்கி இந்த புலி பாய்ந்து செல்லப் போகிறது.

நான் பெற்ற பயிற்சியின் முழு பலமும் இங்கே பரிசோதிக்கப்படும். இதுவரை அப்பகுதிக்கு சென்ற 10 கமாண்டோ படையினரில் இருவர் மட்டுமே மீண்டிருக்கின்றனர். இதே எனது படை... இதற்கு நான்தான் தலைவன்...

தாக்குதலுக்கு வேண்டிய ஆயுதம்... தாக்க வேண்டிய இடம்... உள்பட அனைத்தும் வந்துவிட்டது. நம் நாட்டின் எதிரிகள் காலனை சந்திக்கும் நாள் மட்டும் இன்னும் குறிக்கப்படவில்லை. விரைவில் அதுவும் குறிக்கப்பட்டு விடும். தகவல் கிடைத்ததும் வில்லிலிருந்து புறப்படும் அம்பெனப் புறப்பட்டுவிடுவோம்...

கடைசியாக உன்னிடம் நான் போனில் பேசியபோது, ''எப்பய்யா... ஊருக்கு வருவ.. அம்மாவை பாக்க வரமாட்டியா... அம்மா ஞாபகம் இல்லியா..?'' என்று நீ உன் அடிவயிற்றிலிருந்து உச்சரித்த வார்த்தைகள் மட்டும் என் மனதை கீறிக் கொண்டிருக்கிறதம்மா...

எங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டால், அதற்கு அடையாளமாக நட்சத்திரங்களை கொடுப்பார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால்... வீரமரணம் அடைந்தாலும் நட்சத்திரங்காளாய் ஒளிவீசுவோம் என்பதைக் காட்டத்தான் அம்மா. என்னை நினைத்து ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தக்கூடாது. அப்படி சிந்தினால் அது சுயநலமாகி விடும்.

நான் சென்று, வெற்றியுடன் திரும்புவேன். அப்படி ஒரு வேளை திரும்பவில்லையெனில் கவலைப்படாதே... என் மனதில் நீக்கமற நிறைந்திருப்பது நீயும், எனது தேசமும்தான்...

அன்னவயலிற்கு நான் அனுப்பும் கடைசி கடிதம் இதுவாகக் கூட இருக்கலாம். கடைசி காலத்தில் பெற்ற தாய்க்கு வேண்டிய பணிகளை செய்யவேண்டியவனாயிற்றே... என கலங்காதே. அப்பணியை நம் பாரத தாய்க்கு செய்து கொண்டிருக்கிறேன்.

எதிரிகளை அழிப்பதில் எமனாக செல்கிறேன். ஒருவேளை நான் இறந்தால் என்னைப் போல் பலர் இத்தேசத்திற்காக பிறப்பார்கள்.. கவலை வேண்டாம் அம்மா..

கடைசியாக உன்னிடம் வேண்டுவது, ''தம் தேசத்திற்கு துடிப்பான இளைஞர்கள் தேவை. இக்கடிதம் கண்டவுடன் தம்பி செல்வத்தையும் இராணுவத்திற்கு அனுப்பு.. ஏனென்றால் எங்களைப் போன்ற பிள்ளைகளால்தான் நம் பாரதத்தாய் நிம்மதியாக வாழமுடியும். கண்கலங்காமல் இதை நிறைவேற்றம்மா...

சென்று, வென்று வருகிறேன். வாழ்க பாரதம்..!

இப்படிக்கு
உன் மகன்
மோகனன்''

கடிதத்தை படித்து முடித்தவுடன், பரமசிவத்தின் கண் கலங்கியிருந்தது. வள்ளிக்கிழவியின் முகத்தைப் பார்த்தார். அவள் கண்ணில் இருந்து ஆறாய் ஓடிய கண்ணீர் சட்டென்று நின்றது. அக்கண்ணில் தீர்க்க சிந்தனையின் சாயல் 'இளையவன் செல்வம் வந்ததும், அவனையும் இராணுவத்திற்கு அனுப்ப வேண்டும்'.

(09.07.2002 அன்று, எனது சொந்த ஊரான ஆத்தூரில் இருந்தபோது எழுதிய சிறுகதை)

Tuesday, July 29, 2008

தமிழுக்கும் பதினாறு பேறு..!

உலகில் 'கல்தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி... நம் தமிழ்க்குடி' என்றார்கள் நம் தமிழாய்ந்த ஆன்றோர்கள். உலகின் பழமையான மொழிகளில் முதன்மையானது நம் தமிழ் மொழி. அச்சிறப்பு வாய்ந்த நம் தமிழ் மொழி 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது உலகறிந்த உண்மை. அது என்றுமே செம்மொழிதான் என்பது 'உள்ளங்கை நெல்லிக்கனி'. ஆயினும் நமது நடுவண் அரசு. அதிகாரபூர்வமாக 12-10-2004-இல் தான் தமிழ் மொழி செம்மொழி என அறிவித்தது. அதன் சிறப்புகள் அரசியல் பின்புலம் காரணமாகவே வெளியே வந்தது போல் ஒரு மாயையும் ஏற்பட்டிருக்கிறது..(அதாங்க... எங்களுக்கு ஆதரவு தந்தா... உங்களுக்கு வேண்டியதை செய்வோம்னு ஆளும் மத்திய அரசு சொல்லிச்சே...)

'ஞாயிறைக் கையால் மறைப்பார் இல்' என்பது நம் முன்னோர் வாக்கு. அதுபோல தமிழ்த்தாயின் சிறப்பை இவர்கள் மறைத்தாலும். காலந்தாழ்த்தி அனுமதி வழங்கினாலும், அவளுக்குரிய சிறப்பை அவள் இழக்கமாட்டாள்.

நம் தாய்த்தமிழிடம் பிறமொழிகளிடம் இல்லாத தனிச்சிறப்புகளும் பெருமைகளும் எண்ணற்றவை இருப்பதாக மொழிப் பேராசிரியர்கள் (மட்டும்தான்) மொழிகிறார்கள். ஆனால் தமிழ் மரபில் பிறந்தவன் மொழிய மறுக்கிறான்...? (அவனுக்கு அது தெரிந்தால்நானே என்று கேள்வி கேட்பது புரிகிறது). ஆனால் பிற நாட்டினர் தமிழின் தனித்தியங்கும் தன்மைகண்டு வியக்கிறார்கள், போற்றுகிறார்கள்.

தமிழின் சொந்தங்களாகிய நாம்தான் சீரிளமைத் தமிழின் சிறப்பினை உணராமல் இருக்கிறோம். இவற்றைக் களைய 'மொழிஞாயிறு' தேவநேயப் பாவணர் இதோ செம்மொழியாம் நம் மொழியின் 16 சிறப்புகளைப் பட்டியலிடுகிறார் படியுங்கள்.

தொன்மை - பழமைச் சிறப்பு
முன்மை - முன்தோன்றிய சிறப்பு
எண்மை - எளிமைச் சிறப்பு
ஒண்மை - ஒளியார்ந்த சிறப்பு
இளமை - மூவாச் சிறப்பு
வளமை - சொல்வளச் சிறப்பு
தாய்மை - சில மொழிகளை ஈன்ற சிறப்பு
தூய்மை - கலப்புறாச் சிறப்பு
செம்மை - செழுமைச் சிறப்பு
மும்மை - முப்பிரிவாம் தன்மைச் சிறப்பு
இனிமை - இனிய சொற்களின் சிறப்பு
தனிமை - தனித்தியங்கும் சிறப்பு
பெருமை - பெருமிதச் சிறப்பு
திருமை - செழிப்பார்ந்த சிறப்பு
இயன்மை - இயற்கைச் சிரிப்பு
வியன்மை - வியப்புச் சிறப்பு


(முதலிய 16 பேறுகளைப் பெற்ற நம் தமிழுக்குப் பெருவாழ்வு கிடைக்கப் பாடுபட வேண்டாம். அவளை சிதைக்காமல், நவீன முறையில் வாழவிட்டால் போதும். நன்றி)

Monday, July 28, 2008

'பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க' சரி..! அந்த பதினாறு..?

திருமணத்திற்கு செல்கிறோம். திருமணம் முடிகிறது. புதுமணத் தம்பதிகள் பெரியவர்கள் கால்களில் விழுந்து வாழ்த்து பெறுகிறார்கள். அப்போது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க' என பெரியோர் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தும்போது திருமண வீடே சிரிப்பினால் அதிரும்.

இதற்கு "பதினாறு பிள்ளைகளைப் பெற்று பெரு வாழ்வு வாழ்க" என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் இதற்கு அது சரியான பொருள் இல்லை. பெரியவர்கள் கூறும் பதினாறு பேறுகளில் ஒரு பேறு குழந்தை ஆகும். மற்றவை எவை..? எங்கிருந்து வந்தது இந்த வாக்கியம்..? யார் சொன்னது..?

நமது தமிழ் இலக்கியங்களில் ஒன்றான அபிராமி அந்தாதியை இயற்றிய அபிராமி பட்டர்தான் இதன் ஆசிரியர். அவர்தான், அவருக்கு பிடித்த அபிராமியிடம், மக்களுக்கு பதினாறு பேறுகளை வழங்கு என வேண்டினார்...

அச்செய்யுள்...

''சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ தனயை மாதேவி! நின்னைச்
சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில்
நோயின்மை கல்வி தனதானியம் அழகு புகழ் பெருமை இளமை
அறிவுசந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி

தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ் வளிப்பாய்.
சுகிர்த குணசாலி! பரிபாலி! அனுகூலி! திரி சூலி! மங்கள விசாலி!
மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை வளர்திருக் கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமிமகிழ் வாமி! அபிராமி உமையே!''


--அபிராமி பட்டர்

பதினாறு
பேறுகள் (பதினாறு செல்வங்கள்)

(1) நோயற்ற வாழ்வு
(2) கல்வியறிவு
(3) உணவு. அரிசி கோதுமை, துவரை, கடலை போன்ற தானியங்கள்
(4) தனம் (பொன், பொருள், பிற செல்வங்கள்)
(5) அழகான வதனம், உடல்
(6) நீங்காப் புகழ்
(7) ஆணவமில்லாத நற்பெருமை
(8) நீடித்த இளமை (மனதிற்கும், உடலிற்கும்)
(9) நற்செயல்கள்
(10) நன்மக்களைப் பெறுதல் (இதுதான் குழந்தைப் பேறு)
(11) உடல் மற்றும் உள்ளத்து வலிமை
(12) துணிவு
(13) நீண்ட ஆயுள்
(14) எடுத்த செயல்கள் யாவினும் வெற்றி
(15) நல்லெண்ணம் (நல்வினை)
(16) (மேற்சொன்ன பதினைந்து பேறுகளையும் ஒரு சேர அனுபவிக்கும்) நுகர்ச்சி.

(இது குறித்து மேலும் அறிந்த தமிழ் கூறும் நல்லுலகவாதிகள், இதில் பிழையிருப்பின் தகுந்த சான்றுகளுடன் குறிப்பிட்டால் திருத்திக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன். நன்றி.)

தொடர் குண்டு வெடிப்புகள்- மத்திய அரசின் கையாலாகத்தனம்..!

பெங்களூரில் தொடர் குண்டு வெடிப்பு... அஹமதாபாத்தில் தொடர் குண்டு வெடிப்பு... 45க்கும் மேற்பட்டோர் பலி... 100 மேற்பட்டோர் படுகாயம்... நாம் என்ன இந்தியாவில் இருக்கிறோமா.. ஈராக்கில் இருக்கிறோமா... எங்கே போய்க் கொண்டிருக்கிறது நம் தேசம்.

''........தண்ணீர் விட்ட வளர்த்தோம்..........
எங்கள் கண்ணீரல் காத்தோம்...'' என்று அன்றே முழங்கினான் முண்டாசு கவிஞன் பாரதி. இன்று அத்தேசத்தை வெடிகுண்டுகளுக்கும், அந்நிய சக்திகளின் ஊடுருவல்களுக்குமல்லவா இடம் கொடுத்து விட்டோம்...

அமைதிப் பூங்காவில் வெடிகுண்டு... அப்பாவி மக்கள் உயிரிழப்பு... இதற்கு மானங்கெட்ட மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததோடு அடங்கி விட்டது. அட அயோக்கிய அரசே... உங்கள் கண்டனம் யாருக்கடா வேண்டும்... எந்தன் சகோதரர்கள் அங்கே வெடிகுண்டிற்கு பலியாகி விட்டனரே... யார் அவர்களை திருப்பித் தருவார்கள்... உனது கண்டனம் அவர்களைத் திருப்பித் தருமா..? இல்லை உந்தன் கண்டனம்தான் அந்த தீவிரவாதிகளை திருந்தச் செய்து விடுமா..?

நல்லாட்சி செய்வீர்கள் என்றுதானே 100 கோடி மக்களில் 60 கோடி மக்கள் உங்களை ஆட்சியில் ஏற வைத்தனர்... மக்களைக் காக்க வேண்டிய நீங்கள்... மனிதர்களை இரையாக்கி விட்டீர்கள்..? நாங்கள் என்னடா பாவம் செய்தோம்...

இதற்கு 'மத்திய உளவுத்துறை செயலிழந்து விட்டது' என்று எதிர்கட்சியினர் அறிக்கை விட்டுள்ளனர். அவ்வளவே... அவர்களுக்கு தேவை அந்த அரியணை...

ஐயா.. உளவுத்துறை செயலிழக்கவில்லை ... அவர்களுக்கு (ஆளும் மத்திய அரசிற்கு) சாதகமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க தொண்ணனுடன், ஆளும் கட்சி அணுசக்தி கூட்டு, பொறியல், அவியல் என்ற விவகாரத்தில் பங்கு போட்டது. இதில் சம்பந்தி கிடைக்கவில்லையோ அல்லது சம்பங்கு கிடைக்கவில்லையோ (அவர்களுக்கே வெளிச்சம்) இடதுசரிகள் பின்வாங்கிவிட்டனர்.. ஆதரவு மறுத்தோம் உமக்கு... ஆட்சியை விட்டு இறக்கு... என வாய்ப்பந்தலிட்டனர்.

ஆளும்கட்சி விட்டார்களா... நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவோம் என்றார்கள்... அங்கே செயலாற்றியது உளவுத்துறை.. எந்த அமைச்சர் என்ன செய்கிறார்.. அவர் யாருக்கு சாதகமாக இருக்கிறார்... ஒருவேளை அரசுக்கு எதிராக இருந்தால்... அவரது (சுய) தேவைகள்..(?!) என்ன..? எப்படி அவர்களை ஆளுங்கட்சி தரப்பில் திருப்பலாம் என்று அத்துறையினரை முடுக்கி விட்டு வேலை வாங்கினர்.

விளைவு... ஆளுங்கட்சி பல கோடிகளை கொட்டியது... வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.. அவர்களை நம்பி வாக்களித்த ஏமாளி மக்களுக்கு குண்டுவெடுப்புகள் மூலம் வாய்க்கரிசி போட்டது.

ஆளுங்கட்சியின் கைப்பாவைகள்தானே அரசியந்திரங்கள்.. அப்புறம் எங்கே... அந்நியர் சதி, ஊடுருவல்... குண்டு வெடிப்பு... தீவிரவாதச் சதி... இவற்றையெல்லாம் கண்காணிக்கப் போகிறார்கள்... அவர்களை கையும் களவுமாக பிடிக்கப் போகிறார்கள்...

'ஊசி இடம் கொடுத்தால்தான்... நூல் நுழைய முடியும்' என்பது நமது மூத்தோர்களின் (பட்டறிவால் கிடைத்த) சொலவடை. அதுபோல அந்நிய சக்திகளுக்கு இந்திய மண்ணில் இடமளித்தது முதல் தவறு... அவர்களை சுதந்திரமாக உள்ளே நடமாட விட்டது அதைவிட மாபெரும் தவறு...

விளைவு தொடர் குண்டு வெடிப்புகள்... கோவை, மும்பை, இந்திய பாராளுமன்றம், காஷ்மீர், பெங்களூர், அஹமதாபாத் என குண்டுவெடிப்பு சம்பவங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன.

பெங்களூரில் கட்டவிழ்து விடப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு நடந்ததும் அடுத்த நிமிடமாவது சுதாரித்திருக்க வேண்டாமா... இவைகளை ஏன் செய்யவில்லை... என்னாயிற்று உளவுத்துறைக்கு... காவல் துறைக்கு..? அவர்களை சரியான முறையில் வேலைவாங்கும் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் என்னாயிற்று..?

'அட போங்க தம்பி.. அவனுங்க அரசாங்கத்தை காப்பத்தறதுக்கே... அவனுங்களால முடியல... ஆதரவு இல்லை..அதான் தொல்லை...ன்னு அமைச்சர்களை சந்தோஷப்படுத்தறானுங்க.. மக்களை காப்பத்தறதாவது... போப்பா...' என்று எனது பக்கத்து வீட்டு பெரியவர் இரு தினங்களுக்கு முன்பு சொன்னது இன்னும் என் மனதில் அசிரிரியாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அதன் விளைவு... அடுத்த தாக்குதல் அஹமதாபாத்தில்... அப்பாவி மக்கள் கைசிதறி, கால் சிதறி... எதனால் இறக்கிறோம் என்றுணரும் முன்னே மரணவாசலுக்குள் இழுத்துக் கொள்ள(ல்ல)ப்படும் அவலம்...எல்லாம் அரசின் மெத்தனத்தால் வந்ததுதானே...

மக்களைக் காப்பாற்றவே மக்களாட்சி... அழிப்பதற்கு அல்ல... உளவுத்துறையை ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு திருப்பி விடுங்கள்... அந்நியர்களை இந்திய மண்ணில் கால் அல்ல அந்த கேடு கெட்ட நாய்களின் நிழல் கூட நம்மண்ணில் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்... மீறினால் பார்ததும் அவர்களைக் கொல்லுங்கள்...

என் மனசாட்சியே என்னை கேள்வி கேட்டது... 'அட மடையா... நாடாளுமன்றத்தையே குண்டு வீசித்தாக்கிய கொலைபாதகன் அப்சல் குருவுக்கு ஆயுதம் தாங்கிய காவல் வைத்து, ஊட்டமுடன் இருக்க கறி சோறு இட்டு காத்து வருகின்றனர்...

இம்மாதிரியான ஈனப்பன்றிகளை இன்னும் வைத்திருக்கிறது இந்த அரசு... இவன் இங்கு செய்தது போல் சவுதியிலேயோ, குவைத்திலேயோ குண்டுவெடிப்பை நிகழ்த்தி, மாட்டிக் கொண்டால்... இன்னேரம் அவனை விட்டு வைத்திருப்பார்களா.... அவனை உப்புக்கண்டம் போட்டு கைமா (அ) மவுத்தாக்கியிருப்பார்கள்... இந்தியாவாயிற்றே... போடா....

அவர்களுக்கு பிடிக்காதவர்களை என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுத் தள்ளுவார்களே தவிர... தீவிரவாதிகளை அல்ல... பாவம் நமது தேசம் தாங்கிகள் (எமது இராணுவத்தினர்)... கடுங்குளிரென்றும் பாராமல், சூறாவளியென்றும் பாராமல்... கார்கில், காஷ்மீர் என அனைத்து பகுதிகளையும் தமது இன்னுயிரையும் ஈந்து காத்து வருகின்றனர்...

இங்குள்ள ஆட்சியாளர்களோ.. அவர்களை காவு கொடுப்பது மட்டுமின்றி அப்பாவி மக்களையும் காவு கொடுக்கின்றனர்... அவனவன் மடி நிறைந்தால் போதும்.. அடுத்தவன் நிலை எப்படி ஆனால் என்ன என்ற நிலைதான் இன்றைய ஆட்சியாளர்களிடம்...' என்று குமுறுகிறது.

நாம் இதுவரை வெற்றிகரமாக சோதனை செய்து வந்த (அக்னி) ஏவுகணைகளின் வேகத்தை மிஞ்சியது... விலைவாசி... பெருந்தனக்காரனின் வயிறு போல் பணவீக்கம்... சோம்பித் திரியும் ஓநாய்கள் போல் அரசியல் வாதிகள்... அதில் அண்ட நினைக்கும் அரசு இயந்திரங்கள்...

ஏழை, பணக்காரன். உயர்ந்தவன், தாழ்ந்தவன். வேலை உள்ளவன், வேலை இல்லாதவன்... என ஏற்றத்தாழ்வு நிலை இந்தியாவெங்கும் நிறைந்திருக்கிறது... அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. 8 மணி நேரம் குளுகுளு அறையில் இருந்தபடி அந்நிய நாட்டிற்கு பணிசெய்கிறவருக்கு 5 முதல் 6 லகரத்தில் சம்பளம். வாரம் இருநாள் விடுமுறை.. உல்லாச வாழ்க்கை...

24 மணி நேரமும் மக்களைக் காக்கும் (?) காவல்துறை நண்பர்களுக்கு 4 லகரத்தில் சம்பளம்... விடுமுறையா... மூச்..... (அதிலு பலர் மாமூல் வாங்கிக் கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது தனிக்கதை...)

இப்படி இருந்தால் காவல் துறை ஏன் கள்ளத்துறையாக மாறாது... கயவர்களை விட்டுவிட்டு கண்ணியமானவர்களை அடிக்காது... அவர்களும் மனிதர்கள்தான்... அவர்களுக்கு தேவையானதை செய்யுங்கள்... அவர்களுடைய சேவை மேம்படும்.

அந்நிய நாட்டு சக்திகள் உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டாம். எவ்வளவு அந்நிய செலவாணி கொட்டுகிறது என்றாலும் யாரையும் அனுமதியாதே... தீவிரவாதிகளை அழிக்க ஆயுதம் தூக்கு... விரைவான விசாரணை.. உடனடி தீர்ப்பு... நிறைவேறட்டும் தண்டனை.

ஒரு அப்சல்குருவை விட்டு வைத்ததன் விளைவு.. இன்று பல அப்சல் குருக்கள் இந்தியத்தாயின் மடியில் வெடிகுண்டுகளை வீசியிருக்கின்றனர்... இவர்களை எப்படி ஒழிப்பது.. அழிப்பது...

இவ்விஷக்கிருமிகள் செய்யும் வேலையால், இவர்களது சமுதாயமே தலைகுனிகிறது... எங்கே நிமிரும் இந்தியா... எப்போது வல்லரசாகும்... என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை உங்கள் வசதிக்கேற்ப நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்...

வாழ்க பாரத அரசியல்... வளர்க அதன் புகழ்... வாழ்க மக்கள் (நெற்றியில் பட்டை) நாமம்

Friday, July 25, 2008

காதலின் நியதி

இருட்டும் வெளிச்சமும்
பிரபஞ்சத்தின் நியதி..!
பிறப்பும் இறப்பும்
இயற்கையின் நியதி..!
இன்பமும் துன்பமும்
வாழ்க்கையின் நியதி..!
வெற்றியும் தோல்வியும்
வீரத்தின் நியதி..!
உலக நியதிகளெல்லாம்
இப்படியிருக்க
நீ யுவதியாகி என்னை
அவதிப்பட வைப்பது மட்டும்
எவ்வகை நியதி..?
ஓ... இது காதலின் நியதி..!

என் தேகத்தில் சந்தேகம்

அழகிய நீர்நிறை குளத்தில்
வெண்தாமரை வீற்றிருப்பதை
கண்டிருக்கிறேன்... களித்திருக்கிறேன்...
இன்றோ சாலையில் காண்கிறேன்
ஓர் அழகிய வெண்தாமரை
நீரில் நனைந்தபடி..!

என்ன விந்தையடா..?
யார் செய்த மாயமடா..?
சாலையில் மழை பெய்து கொண்டிருக்க
வெண்தாமரை நனைந்தபடி வருகிறதே..!
தாமரையை நீர் நெருங்காதே...?

என் தேகத்தில் சந்தேகம் முளைக்க
அத்தாமரையை நெருங்கினேன்...
அருகில் சென்றபோதுதான் தெரிந்தது
அடடே.. இது அன்னப்பறவையல்லவா..?

அழகிய அன்னம் அற்புதமாக
மழையை ரசித்தபடி நின்றிருக்க
அதனிடம் வினவினேன்...
மழை கண்டு வந்தாயோ அன்னமே..?
இந்த மனம் வேண்டி வந்தாயோ
பொற்கிண்ணமே..?

பதிலில்லை...
அதற்கு பதிலாக
தன் வெண்முத்து பற்கள்
தெரியும்படி மின்னலாய்
சிந்திய புன்னகையை என் முகத்தில்
விசிறியடித்தது...

கிறங்கிப் போனேன்...
மழையே அழகு..!
அதில் நீ நனைவது அதைவிட அழகு
இதற்கு நான் யாருக்கு நன்றி சொல்ல
மழைக்கா..? உனக்கா..?

(தன் காதலி மழையில் நனைந்தபடி, மழையை ரசித்துக் கொண்டிருக்க... அவளது காதலனோ அவள் நனையும் அழகைக் கண்டு கவிதையாக உளறுகிறான்.. அதன் விளைவே இக்கவிதை...)

Thursday, July 24, 2008

'காதி'யின் புலம்பல்

கா(ந்)தியில் உள்ளதால்தானோ
என்னவோ
காந்தி மறைந்ததும்
அவரை மறந்த கையோடு
என்னையும் மறந்து விட்டார்கள்...

பெரும்புள்ளி

எங்கள் தலைவர்
அரசியலில் பெரும்புள்ளி
காக்காய் பிடித்து காரியம்
சாதிப்பதில் வல்லவர்
அதால்தானோ என்னவோ...
அவர் இறந்தவுடன் அவருக்கு
வைத்த சிலையில்
காகங்கள் வைத்தன எச்சப்புள்ளி...

கற்றுக்கொள்

ஒருவனுக்கு ஒருத்தியென
வாழக் கற்றுக் கொள்...
ஏனென்றால் எமன் ஒன்றும்
எருமையில் வரவில்லை அப்பனே
மெதுவாக வருவதற்கு...
எயிட்ஸ் மூலம் வந்து கொண்டிருக்கிறான்
ஏவுகணை போல்...

நீர்க்குமிழிகள்

வழிதவறி உருவான
நீர்க்குமிழிகள்...
இலக்கில்லாமல்
ஆற்றின் நீரோட்டத்தில்
மிதந்து செல்கின்றன...
விரைவில்
பட்டுடைந்து போக...
மனித சமுதாயத்திலும்
நீர்க்குமிழிகளாய்
எயிட்ஸ் நோய்க் குழந்தைகள்...

ஒரு பேதையின் சபதம்

உன்னைப் போல் நானும்
பிறருடன் சிரித்துப் பேசத்தான் ஆசை..!
படபடக்கும் பட்டாம்பூச்சியாய்
பறக்கத்தான் ஆசை..!
குயிலை விட அழகாக
பாடத்தான் ஆசை..!
பி.டி.உஷாவைப்போல்
ஒலிம்பிக்கில் ஓடத்தான் ஆசை..!
இத்தனையும் என்னுள்
விதைத்துக் கொண்டிருக்கிறேன்..!
'கேவலம் நீ ஒரு பெண்தானே'
என்று நீ சொன்ன அந்த
ஒ(தி)ரு வார்த்தையால்
இவ்வளவு மாற்றமும்..!

வற்றாதது

பசியால் வயிறு வற்றினாலும்
கண்ணீர் மட்டும் வற்றவேயில்லை
இந்த ஏழை மக்களுக்கு...

தாஜ்மஹால்

இரு பறவைகளின் இல்லற இன்பத்தில்
ஒரு பறவை இறந்துவிட
மறு பறவை கட்டிய வெள்ளைக் கூடு...

Wednesday, July 23, 2008

பெண் குழந்தையின் கேள்வி


அம்மா...
நான் செய்த
தவறென்ன...

உணர்ச்சியால்
நீ செய்த
திரைமறைவு
தப்பிற்கு...

நானல்லவா
குப்பை தொட்டியில்
வீசப்பட்டிருக்கிறேன்..?

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்... அந்த பத்து எது?

'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அவர்களிடம் யார் இதை சொன்னாங்க... இதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால்... எல்லோரும் சொல்றாங்க அதான் சொன்னேன் என்பார்கள்... இதனை கூறியது யார்..? எங்கே..? எப்போது..? ஏன்..? என்ற கேள்விக்கு தினமணியில் வெளிவந்த தமிழ்மணி சிறுகோடிட்டு காட்ட.., அதை நான் ஆய்ந்து அகழ்ந்தெடுத்ததில் (இப்படியெல்லாம் சொல்லனுமா...?) கண்டுபிடித்'தேன்'. படித்'தேன்'. உண்மையில் அது 'தேன்' தான்..!

இந்த வார்த்தையை நமக்களித்தவர், நம் தமிழ்க் குலத் தோன்றல், தமிழாய்ந்த மூதாட்டி ஔவைதான். அவர் மானுடருக்கென்று 'நல்வழி' என்னும் தலைப்பில் 40 செய்யுளை நமக்கு (சு)வாசிக்கத் தந்திருக்கிறார்.
அதில் 26 வதாக வரும் செய்யுள்.. இதோ...

'மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்'

- நல்வழி, 26வது செய்யுள்

இதன்
பொருள் 'பசியென்று வந்துவிட்டால் மானம், உயர்குலம், கல்வி, வலிமை, அறிவுடைமை, ஈகை, தவம், உயர்வு, முயற்சி, தேனின் கசிவு போன்ற சொல்லுடைய நற்குலப் பெண்களைத் காதலித்தல் போன்ற பத்து பண்புகளையும் பறந்து போகச் செய்து விடும்' என்பதே ஆகும்.

ஒரு செய்யுளில் உலகிற்கே உணர்த்தும் கருத்து இதுவெனில், இப்பெருமை நம் ஔவைக்கு மட்டுமன்று, நம் தமிழ்க் குலத்திற்கும்தான். வாழ்க எந்தமிழ்.

முக்கனிகள் எவை..?

நம்மிடம் முக்கனிகள் எவையென்று கேட்டால் மா, பலா, வாழை என்போம். ஆனால் சங்க காலத்தில் இதற்கு சரியான பதில் கடுக்காய், நெல்ல்லிக்காய், தான்றிக்காய் (அதாவது இதன் கனிகள்) ஆகும். எப்படி என்று வினவுபவர்கள்...மேலும் படியுங்களேன்..

"விலக்கில் சாலை யாவர்க்கும் வெப்பின் முப்பழச்சுனை
தலைத்தணீர் மலரணிந்து சந்தனம் செய் பந்தரும்
கொலைத்தலைய வேற்கணார் கூத்தும் அன்றி ஐம்பொறி
நிலத்தலைய துப்பெலா நிறைது ளும்பும் ஊர்களே''

-(சீவகசிந்தாமணி, 75வது செய்யுள்)

இச்செய்யுளுக்கான விளக்கம்:

இந்நாட்டிலுள்ள ஊர்கள் தோறும் யாவர்க்கும் விலக்குதல் இல்லாத அன்னச் சத்திரங்கள் உள்ளன. வெம்மையில்லாத சுனையில் காலையில் எடுத்த தண்ணீரில் பூவும் சந்தனமும் இட்ட தண்ணீர்ப் பந்தல்கள் உள்ளன. வேல்போன்ற விழிபெற்ற மாதர் கூத்தாடும் இடங்கள் உள்ளன. மேலும் அங்கே ஐம்பொறிகளால் (ஐம்புலன்கள்) நுகரும் பொருள்கள் அனைத்தும் நிறைந்து ததும்பும் என்கிறார் சீவகசிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்கத்தேவர் .

இச்செய்யுளில் வந்துள்ள 'முப்பழம்' (முக்கனிகள்) என்பதற்குச் சாதாரண உரையாசிரியர்கள் உரையெழுதினால், முப்பழம் - மா, பலா, வாழைக் கனிகள் ஏன்றெழுதிவிடுவர். 'காய்மாண்ட தெங்கின் பழம் வீழ......'(சீவகசிந்தாமணி - 31வது செய்யுள்) எனத் தொடங்கும் நாட்டு வளப் பாடலில் இம்முக்கனிகளைத் திருத்தக்கத்தேவர் குறிப்பிட்டுள்ளார்.

நச்சினார்க்கினியர் (உரையாசிரியர்), முன்பு முக்கனிகள் கூறப்பட்டதை நினைவில் கொண்டு இங்கே (சீவகசிந்தாமணி-75வது செய்யுள்) முப்பழம் - கடு(க்காய்), நெல்(ல்லிக்காய்)-, தான்றி(க்காய்) என்பனவற்றின் பழங்கள் என்று சரியாக எழுதினார்.

பண்டைத் தமிழர், நாவிற்கு நலம் தரும் மா, பலா, வாழைக் கனிகள் தரும் மரங்களை மட்டும் வளர்க்கவில்லை. உடலுக்கு நலந்தரும், பிணிகளைப் போக்கும் மருத்துவ குணம் கொண்ட மரங்களையும் வளர்த்தனர் ஏன்பதை உளங்கொண்டு கடு, நெல், தான்றி என்று முப்பழத்துக்கு விளக்கம் தந்தார்.

சரிதானே..!

Saturday, July 19, 2008

இல்லை... இல்லவே இல்லை..!

ஆப்கானிஸ்தானில் ரயில்கள் இல்லை..!
ஆப்பிரிக்காவில் புலிகள் இல்லை..!
ஈக்களுக்கு பற்கள் இல்லை..!
ஈசலுக்கு வயிறு இல்லை..!
சவுதியில் நதிகள் இல்லை..!
சந்திரனில் வாயுமண்டலம் இல்லை..!
சுண்டெலிக்கு வியர்ப்பது இல்லை..!
மண்ணுளி பாம்பிற்கு கண்கள் இல்லை..!
யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை..!
மலைப்பாம்பிற்கு விஷமில்லை..!
பாம்பு, மீன் போன்றவற்றிற்கு கண்ணிமைகள் இல்லை..!
யமுனை ந்தி கடலில் கலப்பது இல்லை..!
வடதுருவத்தில் நிலப்பரப்புகள் இல்லை..!
வண்ணத்துப்பூச்சிக்கு வாயில்லை..!
முதலைக்கு நாக்கில்லை..!
பாம்பிற்கு காதில்லை..!
வௌவாலிற்கு பார்வை இல்லை..!
தவளைக்கு கழுத்து இல்லை..!
நண்டிற்கு தலை இல்லை..!
காண்டாமிருகம் தன் கொம்பினால் யாரையும் தாக்குவது இல்லை..!(கடைசியில் உள்ளது மிகவும் முக்கியமுங்கோவ்...)
அல்பேனியாவில் மதங்களே இல்லை..!

மோகனனின் கலாட்டா

(மோகனன் அவனது நண்பரை வழியில் சந்திக்கிறான்… அப்போது நண்பர் மோகனனைப் பார்த்து …)

"வாடா… எப்ப வந்த"
"நான் வந்து 28 வருடமாச்சு…"
"நான் அதை கேக்கலடா"
"அப்ப வந்தவனை ஊரிலிருந்து எப்ப வந்தன்னு கேக்கமாட்ட..?"
"வந்தவுடனே ஆரம்பிச்சிட்டியா...?"
"போகும்போது ஆரம்பிக்க முடியாதே…"
"சரி அத விடுடா…"
"நான் எதையும் பிடிச்சிகிட்டு இருக்கலையே… நீ எதை விடச் சொல்ற…"
"டே அப்பா… உங்கிட்ட…"
"நான் எப்படா உனக்கு அப்பாவானேன்…"
"உன்னைச் சொல்லலடா…"
"என்னைச் சொல்லன்னா…....... டேய்… ஆனாலும் உனக்கு தைரியம் அதிகம்டா… உன் அப்பாவை ‘டே’ அப்பாங்கற…"
"ஐயோ………?"
"ஏண்டா எங்கயாவது அடி பட்டுடிச்சா…"
"(கோபமாக…) இ... இல்லடா…"
"அப்ப எதுக்குடா ‘ஐயோ’ன்ன..?"
"உங்கிட்ட பேசறதுக்கு பதிலா… சுவர்கிட்ட பேசலாம்டா…"
"சுவர்கிட்ட பைத்தியம்தாண்டா பேசும்…"
"ஆமா நான் பைத்தியம்… ஆமா நான் பைத்தியம்…" (என்று அலறியபடியே என் நண்பன் தலைதெறிக்க ஓடியதைப் பார்க்க உங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை…" )

(மோகனன் கலாட்டா தொடரும்)

Thursday, July 17, 2008

கும்பகோணம் பள்ளி தீ விபத்து - கவிதாஞ்சலி

கும்பகோணத் துயரம்




கோவில்களின் நகரமாம்
கும்பகோணம்
பல தெய்வங்கள் பதவிசாக
பக்தர்களுக்கு காட்சியளிக்கின்ற
நகரமாம் அது..?
தெய்வங்கள் வாழும் நகரமல்ல...
நரகம் அது..!

அட சண்டாளத் தெய்வங்களே...
கல்வி கற்க வந்து
கனி மொழி கூறும்
மழலைகள் தீயினில் கருகும் போது
எங்கே போய்த் தொலைந்தீர்கள்...

கல்லடா நாங்கள் கடவுளல்ல
என்று மதிகெட்ட மக்களுக்கு
மீண்டுமொருமுறை
'தீ'யிட்டுக் காட்டிவிட்டாய்


ஏ... 'தீ'யே...
உன் 'தீ' நாக்குகளை
ஒன்றுமறியா பிஞ்சுகளிடமா
காட்ட வேண்டும்..?

அத்தூய உள்ளங்களை
துடிக்கத் துடிக்க
'தீ'க்கிரையாக்கி விட்டாயே..?
அப்படி என்ன 'தீ'ப்பசி உனக்கு..?

உன் உக்கிரத்தை
வக்கிரமாக ஏன் குழந்தைகளிடம்
காட்டினாய்..?

பிஞ்சுகள் என்றும் எதிர்ப்பு காட்டது
என்ற எண்ணத்திலா
அப்படி எரித்தாய்..?


அம்மழலைகளைப் பெற்ற
பெற்றோர்களின்
கண்ணீரைக் கண்டாயோ..?
அது கல்லையும் கரைய வைத்து விடும்

அத்தனை உயிர்களையும்
உன் 'தீ'ய வயிற்றுக்கு
இரையாக்கிவிட்டு
ஏதும் நடவாதது போல்
இருக்கிறாயே..?

உனை ஓன்றும் செய்ய
முடியாது
என்ற இறுமாப்பா...?

பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்தான்
அனாதைகளாகியதை
கேள்விப்பட்டிருக்கிறோம்...
அந்தோ உன்னால்
பிள்ளைகளை
இழந்து நாங்களல்லவா
அனாதைகளாகி விட்டோம்...


உன் வீரத்தை 'தீ'ரத்தை
இனியேனும்
குழந்தைகளிடம் காட்டாதே..?
ஒன்றுமறியா
ஏழைகளிடம் காட்டாதே?

'தீ'யோர்கள் இந்நாட்டினில்
(சு)தந்திரமாய்
திரிந்து கொண்டிருக்கிறார்கள்...


'தீ'விரவாதிகள் என்ற பெயரால்
போலி அரசியல்வாதிகள் என்ற பெயரால்
போதைச் சாமியார்கள் என்ற பெயரால்
இன்னும் எத்தனையோ
'தீ'யவர்கள்…

அவர்களிடம் உன் 'தீ'ரத்தை காட்டு
அவர்களை 'தீ'யிட்டழி
உலகம் உன்னை வாழ்த்தும்...

சிதைகளை மட்டுமே எரிக்க
உனக்கு உரிமையுண்டு
இனியேனும் உயிர் விதைகளை
எரிக்காதே...
எங்கள் வயிற்றினில்
'தீ'யினை மூட்டாதே...

-மோ. கணேசன்.


(கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 மொட்டுக்கள் உதிர்ந்து நான்காமாண்டு நினைவு நாள் (16.07.2008) இன்று. உயிர் நீத்த பிஞ்சுகளுக்கு என் கண்ணீர்க் கவிதாஞ்சலி...


Friday, July 11, 2008

பெண் உருவ காய்களைத் தரும் தாய்லாந்து மரம் 'நரீபோல்' (Nareepol)

பணம் என்ன மரத்திலயா காய்க்குது என்ற சொலவடை நம்மில் உண்டு. இங்கு பெண் மரத்தில் காய்க்கிறாள். நம்புங்கள். இயற்கையின் படைப்பில் இப்படியும் ஒரு விந்தை..!


எனது அலுவலக நண்பர் ஒருவர், அவருக்கு வந்த மின்னஞ்சலை எனக்கு அனுப்பினார். அதைப் பார்த்ததும் அசந்து விட்டேன். என் கண்ணை என்னாலேயே நம்பமுடியவில்லை. தாய்லாந்திலுள்ள 'நரீபோல்' (Nareepol) என்ற மரத்தின் காய்கள் அத்தனையும் பெண்களைப் போல் இருக்கின்றன. என்னால் நம்பமுடியாமலும் இருக்க முடியவில்லை.


கூகிள் தேடுபொறியில் இம்மரம் பற்றி கேட்டதில்.. 'உண்மைதான் நண்பா... நம்பு...' என்று சொல்லாத குறையாக 1000 ஆதாரங்களை நிழற்படத்துடன் என் கணினியில் துப்பியது. பார்த்தேன். அம்மரத்தில் காய்த்திருக்கும் காய்கள் அனைத்தும் அடிபிறழாமல் அப்படியே பெண்ணாக இருக்கின்றன.


தாய்லாந்து மொழியில் நரீ(Naree) என்றால் பெண் என அர்த்தமாம். போல் (Pol) என்றால் மரம் என அர்த்தமாம். பெண் வடிவ காய்கள் காய்ப்பதால் இதற்கு இப்பெயர் வந்ததாம்.

பெண் வடிவத்திலுள்ள காய்கள்... ஏதோ மாங்காய் தொங்குவது போல தொங்கிக் கொண்டிருக்கின்றன. இம்மரத்தை நேரில் பார்க்க வேண்டுமெனில் பேங்காக்கிலிருந்து 500 கி.மீட்டர் தொலைவிலுள்ள பெட்சாபூன் மாகாணத்திற்கு (Petchaboon province) செல்ல வேண்டுமாம்...

இணையத்தில் இதுகுறித்து கண்ணில் விளக்கெண்ணெய் விடாமல் தேடியதில் தாய்(லாந்து) மொழியிலுள்ள விக்கிபீடியாவில் தகவல் இருக்கிறது. இம்மொழி தெரிந்தவர்கள் இந்த இணைப்பை சொடுக்கினால் அப்பக்கத்தை பார்க்கலாம்.

கீழே உள்ள ஓவியங்கள் இரண்டும், தாய்லாந்தின் பழமையான ஓவியங்கள் என சொல்லப்படுகிறது. அதிலும் இந்த மரம் இடம்பிடித்துள்ளது...






(இயற்கையின் குறும்பா... இல்லை, செயற்கையாக யாராவது குறும்பு வேலை செய்து விட்டார்களா என்றும் தெரியவில்லை... சந்தேகம் இன்னும் அகலவில்லை... தாய்லாந்து நண்பர்கள் இருந்தால் கேட்டு சொல்லுங்கள்... இது குறித்து அதிகம் தகவல் தெரிந்தவர்கள், எனக்கு மின்னஞ்சல் செய்யவும்... தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்..)

அக்மார்க் முத்திரை


அக்மார்க் முத்திரை, அக்மார்க் பொருட்கள் என்று கேள்விப் பட்டிருப்போமல்லவா.... அதன் பணி என்ன, எதற்கெல்லாம் தரச்சான்றிதழ் வழங்குகிறது என்பதை அறிந்துகொள்ள அக்மார்க் இணையதளத்திற்கு செல்லுங்கள்

Monday, July 07, 2008

தமிழ் சொற்களை அகர வரிசைப்படுத்த...

தமிழ் எழுதுகருவியான NHM Writer மற்றும் NHM Convertor ஆகியவற்றைத் தந்த நியூ ஹொரைசான் மீடியாவின் தொழில் நுட்பக் கலைஞர் திரு நாகராஜனின் புதிய படைப்பு NHM Lister. இது ஒரு ஆன்லைன் கருவி.

இதன் பயன்கள்.

யூனிகோடில் எழுதப் பட்ட தமிழ் பட்டியல்களை உருவாக்க, ஒரே சொடுக்கில் அகர வரிசைப் படுத்த உதவுகிறது. ஆங்கிலச்சொற்கள், எண்கள், சின்னங்களை நிராகரித்தோ இணைத்தோ பட்டியலை வரிசைப் படுத்த முடியும்.

தனிச் சொற்களின் எண்ணிக்கை, மொத்தச் சொற்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கிட்டுத் தருகிறது. அகர வரிசைப் படுத்தப் பட்ட பட்டியலை சொற்களின் எண்ணிக்கையுடனோ தனிச் சொற்களின் பட்டியலாகவோ copy செய்து கொள்ளலாம்.

பட்டியல்களை உருவாக்க, வரிசைப்படுத்த, சொற்களைக் கணக்கிட என பல்வேறு தேவைகளின் அடிப்படையில் நம்மில் பலருக்கும் இது போன்ற ஒரு கருவி அவசியமாக இருக்கும்.

இதன்
பயன்கள், நிறைகுறைகள் பயனாளிகளின் தேவையின், பயன்பாட்டின் அடிப்படையில் இருக்கும்.

குறையாடுகள் ஏதேனும் இருந்தாலோ, இன்னும் தேவையான வசதிகள் பற்றியோ தெரிவித்தால் நண்பர் நாகராஜன் அவர்கள் இக்கருவியை மேம்படுத்த உதவும்.

தமிழ் சொற்களை அகர வரிசைப்படுத்த NHM Lister -ஐ பயன்படுத்துவதற்கு இங்கே சொடுக்கவும்.

நன்றி: சிந்தாநதி

பயர்பாக்ஸில் தமிழை சிதையாமல் படிக்க...

இண்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு அடுத்தபடியாக வேகமாக முன்னேறி வந்த பயர்பாக்ஸ் உலவி தமிழ் வலைப்பதிவுகளைப் படிப்பதில் மட்டும் சில பிரச்சினைகளை சந்தித்தது. ஒழுங்கு படுத்தப்பட்ட (Align) பத்திகளை கொண்ட வலைப்பதிவுகள், இணையப் பக்கங்கள் இழைபிரிந்து, தமிழ் குதறப்பட்டு காட்சியளித்தது.

இந்தப் பிரச்சினை அடுத்த பதிப்பிலாவது நீங்காதா என்ற நப்பாசையில் அடுத்தடுத்த பதிப்புகளுக்காக காத்திருப்பது வழக்கமாகி விட்டது.
தற்போது அதற்கு தக்க நிவாரணம் கிடத்திருக்கிறது.

பயர்பாக்ஸ் 3 பீட்டா 2 என்ற மேம்படுத்தப்பட்ட உலவி மூலம் அது சாத்தியமாயிருக்கிறது! தற்போது தமிழ் சிதையாமல் பயர்பாக்சில் வேலை செய்கிறது!! தமிழ்த்தளங்களில் ஒழுங்காக வேலை செய்கிறது!!!

விண்டோஸ் பயனர்களுக்கான ஆங்கில இடைமுகப்பு பயர்பாக்ஸ் 3 பீட்டா 2 பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

மேக், லினக்ஸ், மற்றும் பல மொழிகளுக்கான பயர்பாக்ஸை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இடைமுகப்பு இந்திய மொழிகளில் இந்தியோ, தமிழோ இல்லை. மாறாக குஜராத்தி, பஞ்சாபி மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

நன்றி: சிந்தாநதி

Wednesday, July 02, 2008

பிரபலங்களின் முழுப் பெயர்கள்

நாம் அறிந்த தலைவர்கள், பிரபலங்கள், அறிஞர்கள் ஆகியோர்களின் முழு அல்லது இயற்பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய சிறப்புப் பெயர்கள், பட்டப் பெயர்களாலேயே பொதுவாக அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.

அதன் சிறு முயற்சிதான் இது... இதில் பிழையிருப்பின் தகுந்த ஆதாரங்களோடு சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வேன். நிறைய பிரபலங்களின் பெயரை சேர்க்கப்படவில்லயென்பது உண்மையே. ஏனெனில் எனது சிற்றறிவிற்கு எட்டியவரை கொடுத்துள்ளேன். அப்பிரபலங்களும் இதில் இடம்பெறச் செய்யவேண்டுமென்று நீங்கள் கருதினால், அவர்களது பெயரை எமக்கு அனுப்பி வைத்து உதவுங்கள்... நன்றி.

(சாதிப் பெயர்களில் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும் எடுத்துக்கொண்ட தலைப்பு அப்படி என்பதால், என்னை சமாதானப்படுத்திக் கொண்டு பதிவுசெய்கிறேன்)


நேதாஜி சுபாஷ் சந்திரா - 'மாவீரன்' நேதாஜி
கோபால்சாமி துரைசாமி நாயுடு - ஜி. டி. நாயுடு
வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் - வ.வே.சு.ஐயர்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி - 'மகாத்மா' காந்தி
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் - டாக்டர் அம்பேத்கர்
குமாரசாமி காமராஜ் - 'பெருந்தலைவர்' காமராசர்
மொரார்ஜி ரஞ் சோட்ஜி தேசாய் - மொரார்ஜி தேசாய்
மேரி தெரசா போஜாக்சியூ - அன்னை தெரசா
ஈரோடு வெங்கட்ட நாயக்கர் ராமசாமி - தந்தை பெரியார்
நெல்சன் ரோலிக்லாஹ்லா மண்டேலா - நெல்சன் மண்டேலா
காஞ்சீவரம் நடராஜன் அண்ணாதுரை - பேரறிஞர் அண்ணா
மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் - ம.பொ.சி

மருதூர் கோபலன் ராமச்சந்திர மேனன் - 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர்
வைக்கம் நாராயணி ஜானகி - வி.என்.ஜானகி (எம்.ஜி.ஆரின் 3 - வது மனைவி)
கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் - கே.பி. சுந்தராம்பாள்
மதராஸ் ராஜகோபால் நாயுடு ராதாகிருஷ்ணன் - எம்.ஆர்.ராதா
பலுவாயி பானுமதி ராமகிருஷ்ணா - நடிகை பானுமதி
பொள்ளாச்சி சின்னப்பா வீரப்பா - பி.எஸ்.வீரப்பா
புரூஸ் ஜுன் ஃபேன் லீ - புரூஸ் லீ
கோச்சேரில் ராமன் நாராயணன் - கே.ஆர். நாராயணன்
பாமுலபார்தி வெங்கட நரசிம்மராவ் - பி.வி. நரசிம்மராவ்
இந்தர் குமார் குஜ்ரால் - ஐ.கே. குஜ்ரால்

ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா - ஜே.ஆர்.டி. டாடா
புதுக்கோட்டை உலக நாதப்பிள்ளை சின்னப்பா - பி.யூ.சின்னப்பா
மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியகராஜ பாகவதர் - எம்.கே. தியகராஜ பாகவதர்
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி - எம்.எஸ். சுப்புலட்சுமி
அவுல்
பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் - ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
சான் கோங் சாங் - ஜாக்கி சான்
கட்டசேரி ஜோசப் யேசுதாஸ் - கே.ஜே.யேசுதாஸ்
அல்லா ரகா ரஹ்மான் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

Saturday, June 28, 2008

கற்பின் விலை..? (குறுங்கவிதைகள்)

கற்பின் விலை

கல்வித்தாயினுடைய
கற்பின் விலை
டொனேஷன்..!

--*--*--*--*--*--*--*--

எருது

மனிதர்களின் வாழ்க்கை
வண்டியை ஓட்ட
நான் சுமக்கிறேன் பாரத்தை..!

--*--*--*--*--*--*--*--

இசை

ஐந்தறிவு மாக்களையும்
வசப்படுத்த
ஆறறிவாளன் கண்டுபிடித்த
அற்புத சக்தி..!

--*--*--*--*--*--*--*--

கங்காரு

கர்ப்பப்பையில் சுமந்தது
போதாதென்று
வயிற்றுப்பையிலும் சுமக்கும்
உத்தமத்தாய்..!

--*--*--*--*--*--*--*--

அரசின் அறிவிப்பு

இன்று உலக
எயிட்ஸ் ஒழிப்பு தினம்
கடைபிடியுங்கள்
காண்டத்தோடு..!

--*--*--*--*--*--*--*--

மழை

பூமிப்பெண்ணைப்
பார்த்து
வானமகன்
விடும் ஜொள்..!

--*--*--*--*--*--*--*--

முகில்

பூமிப்பந்தை
குளிர்விக்க
இயற்கையளித்த இலவச
குளிர்சாதனக் கருவி..!

--*--*--*--*--*--*--*--

விதவை

பிறருக்கு
வெளிச்சம்
கொடுப்பதற்காக
தன்னையே அழித்துக் கொள்ளும்
மெழுகுவர்த்தி....

--*--*--*--*--*--*--*--

Friday, June 27, 2008

ஹைக்கூ கவிதைகள் அல்ல குறுங்கவிதைகள்..!

மூன்று அல்லது நான்கு வரிகளில் எழுதப்படும் கவிதைகளை... 'ஹைக்கூ கவிதைகள்' என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஜப்பானிய வடிவமாக இருக்கும் 'ஹைக்கூ', கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியான நம் தமிழ்க்குடியின் முதுபெரும் மூத்த புலவரான வள்ளுவர் எழுதிய குறள் வடிவம்தான். வித்தியாசம் எனெனவெனில், அவர் இலக்கணச் சுத்தமாக, மரபு நடையில், இரண்டே அடிகளில் ஐயந்திரிபர சொல்லிவிடுவார். அந்த இரண்டு வரிகளில் முதல் வரியை இரண்டாக மடித்து எழுதினால் குறள் மூன்று வரிகளாகிவிடும். அதைத்தான் 'ஹைக்கூ' வும் செய்கிறது. ஆனால் புதுக்கவிதை நடையில்...

நமக்குதான் தமிழிலேயே அனைத்தும் இருக்கிறதே பிறகு ஏன் 'ஹைக்கூ' கவிதை என்கிறீர்கள். முத்து, முத்தாய் மூன்றே வரிகளில் எழுதுவதை, நறுக்குத் தெரித்தாற்ப் போல் நான்கே வரிகளில் எழுதுவதை இனி குறுங்கவிதைகள் என்ற அழைக்கலாமே..! இதுநாள்வரை நான் அப்படித்தான் அழைத்திருக்கிறேன். அழைத்துக் கொண்டே இருப்பேன்.

இனி எனது குறுங் கவிதைகள்...

--0--0--0--0--0--0--0--

தண்ணீர்க்குடம்

எத்தனை முறை தூக்கிலிட்டாலும்
உயிர் பிரியாமல் உறவாடும்
உலோக உயிரி..!

--0--0--0--0--0--0--0--

பிச்சைக்காரன்

நிகழ்கால சோகந்தன்னை
எதிர்காலம் வென்றிடவே
ஏந்துகிறான் திருவோடை..!

--0--0--0--0--0--0--0--

வேண்டுதல்

குந்த குடிசை வேணும்
கடவுளே..?
வேண்டுதல்
அரச மரத்துப் பிள்ளையாரிடம்..!

--0--0--0--0--0--0--0--

எயிட்ஸ்

நவயுக
எமதர்மனின்
கலியுக
எமவாகனம்..!

--0--0--0--0--0--0--0--

கடியாரம்

கால தேவனை
நொடிக்குள் அடக்கும்
எந்திரக்குருவி..!

--0--0--0--0--0--0--0--

கருமி

எதிர்காலம் சிறக்க
நிகழ்கால வாழ்வை
சிதைக்கும் கிருமி..!

--0--0--0--0--0--0--0--

அகிம்சை

அண்ணலின் ஆயுதமாம்
அகிம்சை..!
இங்கேயும் 'ஆயுதம்'..!

--0--0--0--0--0--0--0--

எரிமலை

பூமித்தாயின்
சிவப்பு
எச்சில்..!

--0--0--0--0--0--0--0--

இயந்திர மனிதர்கள் (ரோபோக்கள்)

கலியுக பிரம்மாக்கள்
படைத்த
நவயுக மானி(ட்)டர்கள்..!

--0--0--0--0--0--0--0--

குளோனிங் முறை

மெய் ஞானம் கொண்ட
விஞ்ஞான மனிதர்களின்
அஞ்ஞான முயற்சி..!

--0--0--0--0--0--0--0--

முதுமை

மானுட காவியத்தின்
கடைசி
அத்தியாயம்..!

--0--0--0--0--0--0--0--

மரணம்

மனிதமெனும் சரித்திரத்தில்
கடைசி வாக்கியத்தின்
முற்றுப்புள்ளி..!

--0--0--0--0--0--0--0--

திருக்குறள்

தருமி எனும் தமிழ்மக்களுக்கு
தெய்வப்புலவன் தந்த
பொற்கிழி..!

--0--0--0--0--0--0--0--

பள்ளி...

தமிழுக்கு தொண்டு செய்த
ஔவையின் நினைவாக
ஒரு பள்ளி - பெயர் மட்டும்
ஔவையார் அகாடமி..!

--0--0--0--0--0--0--0--

Saturday, June 21, 2008

நிலத்தின் அளவீடுகள்

நடுத்தர வர்க்கத்தினரும், ஏழையும் வேண்டுவது குடியிருக்க ஒரு வீடு. இப்போது வீடு வாங்குவது நடக்கின்ற காரியமா? நிலம் வாங்குவோம் என்பவர்களுக்கு நிலத்தின் அளவீடுகள் சரிவரத் தெரிவதில்லை (நான் உள்பட) அதற்காக இந்த பதிவு...

1சதுர அடி - 1 அடி'' x 1 அடி''
10 சதுர அடி - 10 அடி'' x 10 அடி''
435.6சதுர அடி - 1 சென்ட் (Cent)
1076 சதுர அடி - 1 ஏர் (Are)
1200 சதுர அடி - ½ கிரவுண்டு (Ground)
2400 சதுர அடி - 1 கிரவுண்டு
43560 சதுர அடி - 1 ஏக்கர்
107637.8 சதுர அடி - 1 ஹெக்டேர்

1 சென்ட் - 435.6 சதுர அடி (Sq. ft)
10 சென்ட் - 4356 சதுர அடி
100 சென்ட் - 43560 சதுர அடி

1 ஏக்கர் = 43560 சதுர அடி
= 100 சென்ட்
= 40.5 ஏர்கள்
= 0.471 ஹெக்டேர்
= 18.15 கிரவுண்டுகள்

1 குழி - 144 சதுர அடி
3 குழி - 1 சென்ட்
30 குழி - 1 மா(Maa)
1 காணி - 1.322 ஏக்கர்

1 மீட்டர் - 3.280833 அடி (Feet)
1 மைல் - 5280 அடி (Feet)

@இதில் என் அறிவிற்கு எட்டியவரை சரியாகத் தந்திருக்கிறேன். பிழையிருப்பின் தகுந்த ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன். நன்றி.

('காணி நிலம் வேண்டும்' என்று மகாகவி பாரதி குறிப்பிட்ட நிலத்தின் அளவு இதை நான் படித்தபோதுதான் தெரிந்து கொண்டேன்)

Tuesday, June 17, 2008

சாதி ஒழிப்பு

(பணி நிமித்தமாக பண்ருட்டியில் 2004, ஆகஸ்டு 2-ம் தேதி தினமலரில் வந்த செய்தி...'(படிப்பதற்காக..?)சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காக 9 வகுப்பு மாணவி தற்கொலை' படித்ததும் பதறித் துடித்தது என் மனம்... என் உள்ளக்குமுறல்கள் இதோ...)

அட கேடு கெட்ட சமுதாயமே
சாதி வெறி பிடித்த
சமுதாயமே
உன்னால் இன்று ஒரு உயிர்
போய்விட்டதே...
மீட்டுத் தரமுடியுமா உன்னால்..?

அட மதிகெட்ட அரசே
அழுகிய மனம்
கொண்ட அரசே
சாதிகள் இல்லையென்று
வீதிக்கு வீதி
விளம்பரம் செய்வாய்...
ஆனால் சட்டப்படி சாதி பார்த்து
சாதிச் சான்றிதழ் வழங்குவாய்...

எதற்கிந்த
பச்சோந்தி வேடம்
சாதிப்பிரிவால்
கிடைத்ததென்ன உனக்கு..?

வேற்றுமையில் ஒற்றுமை
என ஓதிவிட்டு
இன்ன சாதி இவன்
இவள் இன்ன சாதி என
சான்றளிக்கிறாயே...

சாதிப் பேய் பிடித்த
சதிகார அரசே
சனியன் பிடித்த அரசே
என்று நீ மாறுவாய்..?
எப்போது நீ
எளியவர்களைக் காப்பாய்..?

நடுவண் அரசு
நல்லரசு...
மக்களுக்கு
நன்மை பயக்கும் அரசு...
என பத்திரிகைகளில்
பக்கத்திற்குப் பக்கம்
பகட்டாய் விளம்பரம்..?

இதோ ஓர் உயிர்
கேவலம் ஒரு
சாதிச் சான்றிதழ்
கிடைக்கவில்லை என
தன்னுயிரை மாய்த்துக் கொண்டது பார்..!
மதிகெட்ட அரசே
பொய் வேடம் உனக்கெதற்கு..?

அம்மாணவி
ஓர் அன்னை தெரசாவாக
ஜான்சி ராணியாக
விண்வெளி வீரங்கனையாக
ஏன் ஒரு வீரத்திருமகளாக
வந்திருப்பாள்..!

நடந்ததா அது..?
உன் கேடு கெட்ட சாதித்தனத்தால்
உனது அதிகாரத்திலுள்ள
அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால்...
அவர்கள் குடும்பம்
உற்சாகத்தில் ஊறித் திளைக்க
வறியவர்களிடம்
வஞ்சகமில்லாமல் லஞ்சம்
கேட்டதால்...
தீயிலே வெந்து விட்டாள்...

சாதிகளைச் சொல்லி சான்றிதழ்
தரும் உன்னை
தீயிட்டுக் கொளுத்துவேன்
உன் தீங்கான எண்ணங்களுக்கு
எழுத்தாணி தீட்டுவேன்
உன் சவப்பெட்டி
சாதிச் சட்டங்களை
ஆணி கொண்டறைவேன்..!

மக்கள் நலன் காக்கும்
அரசு நீ என்றால்
சாதிகளை ஒழி..!
சாதிச் சான்றிதழை ஒழி..!

சாதிகள் உண்டெனில்
அது ஆணொன்று
பெண்ணொன்று சொல்..!
சாதி வெறி பிடித்த நாய்களின்
காதில் விழும்படி சொல்..!

இல்லையேல் விழுந்தடித்து ஓடு
இல்லையெனில்
நான் ஓடவைப்பேன்..!

எந்த நாட்டிலும் காணா
பல சாதிகள் இங்குண்டு பாரீர்...
அதன் பேரில் பல சாதிக்
கட்சிகளுமுண்டு பாரீர்...
சாதிக் கட்சித் தலைவர்கள்
சாதியின் பெயரைச் சொல்லி
உண்டு கொழுக்கிறார்கள் பாரீர்...

அவன் சாதியாக இருந்தாலும்
ஏழையாக.. ஏமாளியாக
இருப்பவனிடம்
சாதிவெறி தூண்டி விட்டு
குளிர் காயும் குள்ள நரிகள்
இங்குண்டு பாரீர்...

இவ்வளவு நடந்தும்
குட்டக் குட்டக் குனியும்
ஏமாளி மக்களே..?
முதுகெலும்பில்லாத அப்பிராணிகளே
சாதிகளுக்கெதிராக என்று
எழுவீர்கள்..?
இந்த தேசத்தை
எப்போது காப்பீர்கள்..?

எழுங்கள்... இன்றிலிருந்தாவது
விழித்தெழுங்கள்...
விரைந்தெழுங்கள்...
சாதிகள் இல்லையென்று
சொல்லுங்கள்...
அச்சகதியிலிருந்து
வெளியே வாருங்கள்..
சாதியை விட்டொழியுங்கள்...

நீ என்ன சாதி என்று
கேட்பவனின்
வாயைக் கிழித்தெறியுங்கள்...
மதங்களை மறந்து
மனிதர்களை நேசியுங்கள்...

நமக்காகவே அரசு
நல்லோர்களைத் தேர்ந்தெடுங்கள்
அவர்கள் துணையோடு
சாதியை விரட்டுவோம்
சாதி மதமில்லா
சமுதாயம் படைப்போம் வாருங்கள்...

என்னருமை மக்களே
எனது உடன் பிறவா உள்ளங்களே
நம் எதிர்கால சந்ததிகளாவது
சாதியைப் பேசாமல்
கேட்காமல் இருக்கச் செய்வோம் வாருங்கள்..!

மோ. கணேசன். 02.08.2004.

அரசியல்வாதியின் வேண்டுதல்..?

திருப்பதி ஏழுமலையானே...
இந்த தேர்தலில்
என்னை நீ ஜெயிக்க வச்சா
எனக்கு ஓட்டு போட்ட
ஊர் மக்களுக்கு மொட்டையடிச்சு
உனக்கு கிரீடம் சாத்துறேன்..!

(பணி நிமித்தமாக பண்ருட்டியில் தங்கியிருந்த போது, 20.08.2004 அன்று காலையில் எழுதியது)

Monday, June 16, 2008

புரட்சித் திருமணம்

திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதாம் - எப்படி
இந்தச் சாதிக்காரனுக்கு
அவனுடைய சொந்த சாதியில்தான்
மணமுடிக்கப்பட வேண்டுமென்று...

மதம் விட்டு மதம் மாறியோ
சாதி விட்டு சாதி மாறியோ
மணக்கக் கூடாது... - மாக்கள்
செய்து வைத்திருக்கும் மடத்தனமான வரையறை..!

மடத்தனம் இது மடமைத்தனம்
என்று எதிர்த்துச் செய்தால்
ஏசல் விழும்... பூசல் எழும்...
பல சமயங்களில் உயிரே வீழும்..!

சாதி விட்டு சாதி மாறி மணம் செய்தால்
அது கலப்புத் திருமணமாம்...
எந்த அறிவாளியடா(?) இதற்கு அப்படியொரு
கேவலமான பெயர் வைத்தான்..?

மனித இனத்தை விட்டுவிட்டு
விலங்கினத்தையா மணம் செய்தோம்?
அதை கலப்பு மணம் என்று
கடிந்து சொல்வதற்கு..?

அந்தத் திருமணத்தை...
சாதிகள் ஒழிய... சமத்துவம் மலர...
நற்சமுதாயம் வளர மனமொத்த தம்பதிகள்
செய்த புரட்சித் திருமணமென்று சொல்லுங்கள்..!

சமயசார்பற்ற நாடு என்பதை விட
சாதி மதமற்ற நாடு என்று
சொல்லிக் கொள்வதில்
நாம் பெருமைப் படலாம்..!

இனியேனும் அதை கலப்பு மணம்
என அழைக்காதீர்கள்...
புதிய சமுதாயம் படைக்கும்
'புரட்சித் திருமணங்கள்' என்று சொல்லுங்கள்..!

சாக்காடான சாதிகளின் பெயரால்
மதம் பிடித்த மதங்களின் பெயரால் - இனி
எக்கொடுமைகளும் நடவாமலிருக்க
நாடெங்கும் நடக்கட்டும் 'புரட்சித் திருமணங்கள்'
அதற்கு ஆதரவு நல்கட்டும் இளைஞர் மனங்கள்...

- மோ. கணேசன்.

Saturday, June 14, 2008

காதலனின் ஏக்கம்...

ம் பெற்று வந்தேனோ உனைப் பார்க்க
திநிறை மலர் கண்ணால் எனை நீ நோக்க
மோம் கொண்டேனடி உன்மேல் பெண்ணே..!
நாணேறும் அம்பைப் போல் உன் முன்னழகும்
ரடிக்கும் பின்னழகும், மயக்கும் உன் சிரிப்பும்
ன்மத்தம் ஊட்டுதடி என்னன்பே அருகில் வா..!