Friday, February 19, 2021

மொழி ஆளுமையை வளர்க்கும் புத்தகம் இது - பெருமாள் முருகன் | குறுக்கெழுத்து...



நான் எழுதிய குறுக்கெழுத்து அறுபது, டும் டும் டும் தண்டோரா, வாலுவிடம் கேளுங்கள் ஆகிய மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழா, சென்ற ஆண்டு ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற 43-வது சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்றது.

இந்த விழாவில் எனது தந்தை வீ. மோகன் ராஜ் அவர்களும், எனது தமிழ் பேராசிரியரும், மாபெரும் எழுத்தாளருமான பெருமாள் முருகன் ஐயாவும், மக்களிசைக் கலைஞர், தமிழிசை வேந்தர் கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி ஐயாவும், தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டனர்.

அந்த விழாவினை வடசென்னை தமிழ்ச்சங்கம் முன்னெடுத்து நடத்தியது. அதன் தலைவர் எ.த.இளங்கோவிற்கும், புத்தகங்களை பதிப்பித்த என் எழுத்துலக தாய்வீடான பாரதி புத்தகாலயத்திற்கும், தோழர் நாகராஜனுக்கும், பாவைமதி பதிப்பகத்தின் நிறுவனர் தோழி வான்மதிக்கும் இந்த தருணத்தில் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

இந்த நிகழ்வை நான்கு பாகமாக வெளியிட இருக்கிறேன். முதல் பாகமான இந்த வீடியோவில் நூல் வெளியீட்டுவிழா, அன்பு நண்பர் எ.த.இளங்கோவின் வரவேற்புரை, எனது பெருமதிப்பிற்குரிய பெருமாள் முருகன் ஐயாவின் வாழ்த்துரையும் இடம்பெறுகிறது...

குறுக்கெழுத்து அறுபது, டும் டும் டும் தண்டோரா ஆகிய நூல்கள் சென்னை புத்தகக்காட்சி சாலையில் கிடைக்கும். பாரதி புத்தகாலயத்தில் கிடைக்கும். ஆன்லைனிலும் நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்.

ஆன்லைனில் வாங்க

குறுக்கெழுத்து அறுபது: https://thamizhbooks.com/product/kuru...​

டும் டும் டும் தண்டோரா: https://thamizhbooks.com/product/dum-...​

வாலுவிடம் கேளுங்கள் : உங்கள் வாலு டிவியைத் தொடர்பு கொள்ளுங்கள். 9600045295

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள்..!

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #kurukkezhuthu_arubathu​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

No comments: