Friday, July 25, 2008

காதலின் நியதி

இருட்டும் வெளிச்சமும்
பிரபஞ்சத்தின் நியதி..!
பிறப்பும் இறப்பும்
இயற்கையின் நியதி..!
இன்பமும் துன்பமும்
வாழ்க்கையின் நியதி..!
வெற்றியும் தோல்வியும்
வீரத்தின் நியதி..!
உலக நியதிகளெல்லாம்
இப்படியிருக்க
நீ யுவதியாகி என்னை
அவதிப்பட வைப்பது மட்டும்
எவ்வகை நியதி..?
ஓ... இது காதலின் நியதி..!

என் தேகத்தில் சந்தேகம்

அழகிய நீர்நிறை குளத்தில்
வெண்தாமரை வீற்றிருப்பதை
கண்டிருக்கிறேன்... களித்திருக்கிறேன்...
இன்றோ சாலையில் காண்கிறேன்
ஓர் அழகிய வெண்தாமரை
நீரில் நனைந்தபடி..!

என்ன விந்தையடா..?
யார் செய்த மாயமடா..?
சாலையில் மழை பெய்து கொண்டிருக்க
வெண்தாமரை நனைந்தபடி வருகிறதே..!
தாமரையை நீர் நெருங்காதே...?

என் தேகத்தில் சந்தேகம் முளைக்க
அத்தாமரையை நெருங்கினேன்...
அருகில் சென்றபோதுதான் தெரிந்தது
அடடே.. இது அன்னப்பறவையல்லவா..?

அழகிய அன்னம் அற்புதமாக
மழையை ரசித்தபடி நின்றிருக்க
அதனிடம் வினவினேன்...
மழை கண்டு வந்தாயோ அன்னமே..?
இந்த மனம் வேண்டி வந்தாயோ
பொற்கிண்ணமே..?

பதிலில்லை...
அதற்கு பதிலாக
தன் வெண்முத்து பற்கள்
தெரியும்படி மின்னலாய்
சிந்திய புன்னகையை என் முகத்தில்
விசிறியடித்தது...

கிறங்கிப் போனேன்...
மழையே அழகு..!
அதில் நீ நனைவது அதைவிட அழகு
இதற்கு நான் யாருக்கு நன்றி சொல்ல
மழைக்கா..? உனக்கா..?

(தன் காதலி மழையில் நனைந்தபடி, மழையை ரசித்துக் கொண்டிருக்க... அவளது காதலனோ அவள் நனையும் அழகைக் கண்டு கவிதையாக உளறுகிறான்.. அதன் விளைவே இக்கவிதை...)

Thursday, July 24, 2008

'காதி'யின் புலம்பல்

கா(ந்)தியில் உள்ளதால்தானோ
என்னவோ
காந்தி மறைந்ததும்
அவரை மறந்த கையோடு
என்னையும் மறந்து விட்டார்கள்...

பெரும்புள்ளி

எங்கள் தலைவர்
அரசியலில் பெரும்புள்ளி
காக்காய் பிடித்து காரியம்
சாதிப்பதில் வல்லவர்
அதால்தானோ என்னவோ...
அவர் இறந்தவுடன் அவருக்கு
வைத்த சிலையில்
காகங்கள் வைத்தன எச்சப்புள்ளி...

கற்றுக்கொள்

ஒருவனுக்கு ஒருத்தியென
வாழக் கற்றுக் கொள்...
ஏனென்றால் எமன் ஒன்றும்
எருமையில் வரவில்லை அப்பனே
மெதுவாக வருவதற்கு...
எயிட்ஸ் மூலம் வந்து கொண்டிருக்கிறான்
ஏவுகணை போல்...

நீர்க்குமிழிகள்

வழிதவறி உருவான
நீர்க்குமிழிகள்...
இலக்கில்லாமல்
ஆற்றின் நீரோட்டத்தில்
மிதந்து செல்கின்றன...
விரைவில்
பட்டுடைந்து போக...
மனித சமுதாயத்திலும்
நீர்க்குமிழிகளாய்
எயிட்ஸ் நோய்க் குழந்தைகள்...

ஒரு பேதையின் சபதம்

உன்னைப் போல் நானும்
பிறருடன் சிரித்துப் பேசத்தான் ஆசை..!
படபடக்கும் பட்டாம்பூச்சியாய்
பறக்கத்தான் ஆசை..!
குயிலை விட அழகாக
பாடத்தான் ஆசை..!
பி.டி.உஷாவைப்போல்
ஒலிம்பிக்கில் ஓடத்தான் ஆசை..!
இத்தனையும் என்னுள்
விதைத்துக் கொண்டிருக்கிறேன்..!
'கேவலம் நீ ஒரு பெண்தானே'
என்று நீ சொன்ன அந்த
ஒ(தி)ரு வார்த்தையால்
இவ்வளவு மாற்றமும்..!

வற்றாதது

பசியால் வயிறு வற்றினாலும்
கண்ணீர் மட்டும் வற்றவேயில்லை
இந்த ஏழை மக்களுக்கு...

தாஜ்மஹால்

இரு பறவைகளின் இல்லற இன்பத்தில்
ஒரு பறவை இறந்துவிட
மறு பறவை கட்டிய வெள்ளைக் கூடு...

Wednesday, July 23, 2008

பெண் குழந்தையின் கேள்வி


அம்மா...
நான் செய்த
தவறென்ன...

உணர்ச்சியால்
நீ செய்த
திரைமறைவு
தப்பிற்கு...

நானல்லவா
குப்பை தொட்டியில்
வீசப்பட்டிருக்கிறேன்..?

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்... அந்த பத்து எது?

'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அவர்களிடம் யார் இதை சொன்னாங்க... இதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால்... எல்லோரும் சொல்றாங்க அதான் சொன்னேன் என்பார்கள்... இதனை கூறியது யார்..? எங்கே..? எப்போது..? ஏன்..? என்ற கேள்விக்கு தினமணியில் வெளிவந்த தமிழ்மணி சிறுகோடிட்டு காட்ட.., அதை நான் ஆய்ந்து அகழ்ந்தெடுத்ததில் (இப்படியெல்லாம் சொல்லனுமா...?) கண்டுபிடித்'தேன்'. படித்'தேன்'. உண்மையில் அது 'தேன்' தான்..!

இந்த வார்த்தையை நமக்களித்தவர், நம் தமிழ்க் குலத் தோன்றல், தமிழாய்ந்த மூதாட்டி ஔவைதான். அவர் மானுடருக்கென்று 'நல்வழி' என்னும் தலைப்பில் 40 செய்யுளை நமக்கு (சு)வாசிக்கத் தந்திருக்கிறார்.
அதில் 26 வதாக வரும் செய்யுள்.. இதோ...

'மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்'

- நல்வழி, 26வது செய்யுள்

இதன்
பொருள் 'பசியென்று வந்துவிட்டால் மானம், உயர்குலம், கல்வி, வலிமை, அறிவுடைமை, ஈகை, தவம், உயர்வு, முயற்சி, தேனின் கசிவு போன்ற சொல்லுடைய நற்குலப் பெண்களைத் காதலித்தல் போன்ற பத்து பண்புகளையும் பறந்து போகச் செய்து விடும்' என்பதே ஆகும்.

ஒரு செய்யுளில் உலகிற்கே உணர்த்தும் கருத்து இதுவெனில், இப்பெருமை நம் ஔவைக்கு மட்டுமன்று, நம் தமிழ்க் குலத்திற்கும்தான். வாழ்க எந்தமிழ்.

முக்கனிகள் எவை..?

நம்மிடம் முக்கனிகள் எவையென்று கேட்டால் மா, பலா, வாழை என்போம். ஆனால் சங்க காலத்தில் இதற்கு சரியான பதில் கடுக்காய், நெல்ல்லிக்காய், தான்றிக்காய் (அதாவது இதன் கனிகள்) ஆகும். எப்படி என்று வினவுபவர்கள்...மேலும் படியுங்களேன்..

"விலக்கில் சாலை யாவர்க்கும் வெப்பின் முப்பழச்சுனை
தலைத்தணீர் மலரணிந்து சந்தனம் செய் பந்தரும்
கொலைத்தலைய வேற்கணார் கூத்தும் அன்றி ஐம்பொறி
நிலத்தலைய துப்பெலா நிறைது ளும்பும் ஊர்களே''

-(சீவகசிந்தாமணி, 75வது செய்யுள்)

இச்செய்யுளுக்கான விளக்கம்:

இந்நாட்டிலுள்ள ஊர்கள் தோறும் யாவர்க்கும் விலக்குதல் இல்லாத அன்னச் சத்திரங்கள் உள்ளன. வெம்மையில்லாத சுனையில் காலையில் எடுத்த தண்ணீரில் பூவும் சந்தனமும் இட்ட தண்ணீர்ப் பந்தல்கள் உள்ளன. வேல்போன்ற விழிபெற்ற மாதர் கூத்தாடும் இடங்கள் உள்ளன. மேலும் அங்கே ஐம்பொறிகளால் (ஐம்புலன்கள்) நுகரும் பொருள்கள் அனைத்தும் நிறைந்து ததும்பும் என்கிறார் சீவகசிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்கத்தேவர் .

இச்செய்யுளில் வந்துள்ள 'முப்பழம்' (முக்கனிகள்) என்பதற்குச் சாதாரண உரையாசிரியர்கள் உரையெழுதினால், முப்பழம் - மா, பலா, வாழைக் கனிகள் ஏன்றெழுதிவிடுவர். 'காய்மாண்ட தெங்கின் பழம் வீழ......'(சீவகசிந்தாமணி - 31வது செய்யுள்) எனத் தொடங்கும் நாட்டு வளப் பாடலில் இம்முக்கனிகளைத் திருத்தக்கத்தேவர் குறிப்பிட்டுள்ளார்.

நச்சினார்க்கினியர் (உரையாசிரியர்), முன்பு முக்கனிகள் கூறப்பட்டதை நினைவில் கொண்டு இங்கே (சீவகசிந்தாமணி-75வது செய்யுள்) முப்பழம் - கடு(க்காய்), நெல்(ல்லிக்காய்)-, தான்றி(க்காய்) என்பனவற்றின் பழங்கள் என்று சரியாக எழுதினார்.

பண்டைத் தமிழர், நாவிற்கு நலம் தரும் மா, பலா, வாழைக் கனிகள் தரும் மரங்களை மட்டும் வளர்க்கவில்லை. உடலுக்கு நலந்தரும், பிணிகளைப் போக்கும் மருத்துவ குணம் கொண்ட மரங்களையும் வளர்த்தனர் ஏன்பதை உளங்கொண்டு கடு, நெல், தான்றி என்று முப்பழத்துக்கு விளக்கம் தந்தார்.

சரிதானே..!

Saturday, July 19, 2008

இல்லை... இல்லவே இல்லை..!

ஆப்கானிஸ்தானில் ரயில்கள் இல்லை..!
ஆப்பிரிக்காவில் புலிகள் இல்லை..!
ஈக்களுக்கு பற்கள் இல்லை..!
ஈசலுக்கு வயிறு இல்லை..!
சவுதியில் நதிகள் இல்லை..!
சந்திரனில் வாயுமண்டலம் இல்லை..!
சுண்டெலிக்கு வியர்ப்பது இல்லை..!
மண்ணுளி பாம்பிற்கு கண்கள் இல்லை..!
யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை..!
மலைப்பாம்பிற்கு விஷமில்லை..!
பாம்பு, மீன் போன்றவற்றிற்கு கண்ணிமைகள் இல்லை..!
யமுனை ந்தி கடலில் கலப்பது இல்லை..!
வடதுருவத்தில் நிலப்பரப்புகள் இல்லை..!
வண்ணத்துப்பூச்சிக்கு வாயில்லை..!
முதலைக்கு நாக்கில்லை..!
பாம்பிற்கு காதில்லை..!
வௌவாலிற்கு பார்வை இல்லை..!
தவளைக்கு கழுத்து இல்லை..!
நண்டிற்கு தலை இல்லை..!
காண்டாமிருகம் தன் கொம்பினால் யாரையும் தாக்குவது இல்லை..!(கடைசியில் உள்ளது மிகவும் முக்கியமுங்கோவ்...)
அல்பேனியாவில் மதங்களே இல்லை..!

மோகனனின் கலாட்டா

(மோகனன் அவனது நண்பரை வழியில் சந்திக்கிறான்… அப்போது நண்பர் மோகனனைப் பார்த்து …)

"வாடா… எப்ப வந்த"
"நான் வந்து 28 வருடமாச்சு…"
"நான் அதை கேக்கலடா"
"அப்ப வந்தவனை ஊரிலிருந்து எப்ப வந்தன்னு கேக்கமாட்ட..?"
"வந்தவுடனே ஆரம்பிச்சிட்டியா...?"
"போகும்போது ஆரம்பிக்க முடியாதே…"
"சரி அத விடுடா…"
"நான் எதையும் பிடிச்சிகிட்டு இருக்கலையே… நீ எதை விடச் சொல்ற…"
"டே அப்பா… உங்கிட்ட…"
"நான் எப்படா உனக்கு அப்பாவானேன்…"
"உன்னைச் சொல்லலடா…"
"என்னைச் சொல்லன்னா…....... டேய்… ஆனாலும் உனக்கு தைரியம் அதிகம்டா… உன் அப்பாவை ‘டே’ அப்பாங்கற…"
"ஐயோ………?"
"ஏண்டா எங்கயாவது அடி பட்டுடிச்சா…"
"(கோபமாக…) இ... இல்லடா…"
"அப்ப எதுக்குடா ‘ஐயோ’ன்ன..?"
"உங்கிட்ட பேசறதுக்கு பதிலா… சுவர்கிட்ட பேசலாம்டா…"
"சுவர்கிட்ட பைத்தியம்தாண்டா பேசும்…"
"ஆமா நான் பைத்தியம்… ஆமா நான் பைத்தியம்…" (என்று அலறியபடியே என் நண்பன் தலைதெறிக்க ஓடியதைப் பார்க்க உங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை…" )

(மோகனன் கலாட்டா தொடரும்)

Thursday, July 17, 2008

கும்பகோணம் பள்ளி தீ விபத்து - கவிதாஞ்சலி

கும்பகோணத் துயரம்




கோவில்களின் நகரமாம்
கும்பகோணம்
பல தெய்வங்கள் பதவிசாக
பக்தர்களுக்கு காட்சியளிக்கின்ற
நகரமாம் அது..?
தெய்வங்கள் வாழும் நகரமல்ல...
நரகம் அது..!

அட சண்டாளத் தெய்வங்களே...
கல்வி கற்க வந்து
கனி மொழி கூறும்
மழலைகள் தீயினில் கருகும் போது
எங்கே போய்த் தொலைந்தீர்கள்...

கல்லடா நாங்கள் கடவுளல்ல
என்று மதிகெட்ட மக்களுக்கு
மீண்டுமொருமுறை
'தீ'யிட்டுக் காட்டிவிட்டாய்


ஏ... 'தீ'யே...
உன் 'தீ' நாக்குகளை
ஒன்றுமறியா பிஞ்சுகளிடமா
காட்ட வேண்டும்..?

அத்தூய உள்ளங்களை
துடிக்கத் துடிக்க
'தீ'க்கிரையாக்கி விட்டாயே..?
அப்படி என்ன 'தீ'ப்பசி உனக்கு..?

உன் உக்கிரத்தை
வக்கிரமாக ஏன் குழந்தைகளிடம்
காட்டினாய்..?

பிஞ்சுகள் என்றும் எதிர்ப்பு காட்டது
என்ற எண்ணத்திலா
அப்படி எரித்தாய்..?


அம்மழலைகளைப் பெற்ற
பெற்றோர்களின்
கண்ணீரைக் கண்டாயோ..?
அது கல்லையும் கரைய வைத்து விடும்

அத்தனை உயிர்களையும்
உன் 'தீ'ய வயிற்றுக்கு
இரையாக்கிவிட்டு
ஏதும் நடவாதது போல்
இருக்கிறாயே..?

உனை ஓன்றும் செய்ய
முடியாது
என்ற இறுமாப்பா...?

பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்தான்
அனாதைகளாகியதை
கேள்விப்பட்டிருக்கிறோம்...
அந்தோ உன்னால்
பிள்ளைகளை
இழந்து நாங்களல்லவா
அனாதைகளாகி விட்டோம்...


உன் வீரத்தை 'தீ'ரத்தை
இனியேனும்
குழந்தைகளிடம் காட்டாதே..?
ஒன்றுமறியா
ஏழைகளிடம் காட்டாதே?

'தீ'யோர்கள் இந்நாட்டினில்
(சு)தந்திரமாய்
திரிந்து கொண்டிருக்கிறார்கள்...


'தீ'விரவாதிகள் என்ற பெயரால்
போலி அரசியல்வாதிகள் என்ற பெயரால்
போதைச் சாமியார்கள் என்ற பெயரால்
இன்னும் எத்தனையோ
'தீ'யவர்கள்…

அவர்களிடம் உன் 'தீ'ரத்தை காட்டு
அவர்களை 'தீ'யிட்டழி
உலகம் உன்னை வாழ்த்தும்...

சிதைகளை மட்டுமே எரிக்க
உனக்கு உரிமையுண்டு
இனியேனும் உயிர் விதைகளை
எரிக்காதே...
எங்கள் வயிற்றினில்
'தீ'யினை மூட்டாதே...

-மோ. கணேசன்.


(கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 மொட்டுக்கள் உதிர்ந்து நான்காமாண்டு நினைவு நாள் (16.07.2008) இன்று. உயிர் நீத்த பிஞ்சுகளுக்கு என் கண்ணீர்க் கவிதாஞ்சலி...


Friday, July 11, 2008

பெண் உருவ காய்களைத் தரும் தாய்லாந்து மரம் 'நரீபோல்' (Nareepol)

பணம் என்ன மரத்திலயா காய்க்குது என்ற சொலவடை நம்மில் உண்டு. இங்கு பெண் மரத்தில் காய்க்கிறாள். நம்புங்கள். இயற்கையின் படைப்பில் இப்படியும் ஒரு விந்தை..!


எனது அலுவலக நண்பர் ஒருவர், அவருக்கு வந்த மின்னஞ்சலை எனக்கு அனுப்பினார். அதைப் பார்த்ததும் அசந்து விட்டேன். என் கண்ணை என்னாலேயே நம்பமுடியவில்லை. தாய்லாந்திலுள்ள 'நரீபோல்' (Nareepol) என்ற மரத்தின் காய்கள் அத்தனையும் பெண்களைப் போல் இருக்கின்றன. என்னால் நம்பமுடியாமலும் இருக்க முடியவில்லை.


கூகிள் தேடுபொறியில் இம்மரம் பற்றி கேட்டதில்.. 'உண்மைதான் நண்பா... நம்பு...' என்று சொல்லாத குறையாக 1000 ஆதாரங்களை நிழற்படத்துடன் என் கணினியில் துப்பியது. பார்த்தேன். அம்மரத்தில் காய்த்திருக்கும் காய்கள் அனைத்தும் அடிபிறழாமல் அப்படியே பெண்ணாக இருக்கின்றன.


தாய்லாந்து மொழியில் நரீ(Naree) என்றால் பெண் என அர்த்தமாம். போல் (Pol) என்றால் மரம் என அர்த்தமாம். பெண் வடிவ காய்கள் காய்ப்பதால் இதற்கு இப்பெயர் வந்ததாம்.

பெண் வடிவத்திலுள்ள காய்கள்... ஏதோ மாங்காய் தொங்குவது போல தொங்கிக் கொண்டிருக்கின்றன. இம்மரத்தை நேரில் பார்க்க வேண்டுமெனில் பேங்காக்கிலிருந்து 500 கி.மீட்டர் தொலைவிலுள்ள பெட்சாபூன் மாகாணத்திற்கு (Petchaboon province) செல்ல வேண்டுமாம்...

இணையத்தில் இதுகுறித்து கண்ணில் விளக்கெண்ணெய் விடாமல் தேடியதில் தாய்(லாந்து) மொழியிலுள்ள விக்கிபீடியாவில் தகவல் இருக்கிறது. இம்மொழி தெரிந்தவர்கள் இந்த இணைப்பை சொடுக்கினால் அப்பக்கத்தை பார்க்கலாம்.

கீழே உள்ள ஓவியங்கள் இரண்டும், தாய்லாந்தின் பழமையான ஓவியங்கள் என சொல்லப்படுகிறது. அதிலும் இந்த மரம் இடம்பிடித்துள்ளது...






(இயற்கையின் குறும்பா... இல்லை, செயற்கையாக யாராவது குறும்பு வேலை செய்து விட்டார்களா என்றும் தெரியவில்லை... சந்தேகம் இன்னும் அகலவில்லை... தாய்லாந்து நண்பர்கள் இருந்தால் கேட்டு சொல்லுங்கள்... இது குறித்து அதிகம் தகவல் தெரிந்தவர்கள், எனக்கு மின்னஞ்சல் செய்யவும்... தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்..)

அக்மார்க் முத்திரை


அக்மார்க் முத்திரை, அக்மார்க் பொருட்கள் என்று கேள்விப் பட்டிருப்போமல்லவா.... அதன் பணி என்ன, எதற்கெல்லாம் தரச்சான்றிதழ் வழங்குகிறது என்பதை அறிந்துகொள்ள அக்மார்க் இணையதளத்திற்கு செல்லுங்கள்

Monday, July 07, 2008

தமிழ் சொற்களை அகர வரிசைப்படுத்த...

தமிழ் எழுதுகருவியான NHM Writer மற்றும் NHM Convertor ஆகியவற்றைத் தந்த நியூ ஹொரைசான் மீடியாவின் தொழில் நுட்பக் கலைஞர் திரு நாகராஜனின் புதிய படைப்பு NHM Lister. இது ஒரு ஆன்லைன் கருவி.

இதன் பயன்கள்.

யூனிகோடில் எழுதப் பட்ட தமிழ் பட்டியல்களை உருவாக்க, ஒரே சொடுக்கில் அகர வரிசைப் படுத்த உதவுகிறது. ஆங்கிலச்சொற்கள், எண்கள், சின்னங்களை நிராகரித்தோ இணைத்தோ பட்டியலை வரிசைப் படுத்த முடியும்.

தனிச் சொற்களின் எண்ணிக்கை, மொத்தச் சொற்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கிட்டுத் தருகிறது. அகர வரிசைப் படுத்தப் பட்ட பட்டியலை சொற்களின் எண்ணிக்கையுடனோ தனிச் சொற்களின் பட்டியலாகவோ copy செய்து கொள்ளலாம்.

பட்டியல்களை உருவாக்க, வரிசைப்படுத்த, சொற்களைக் கணக்கிட என பல்வேறு தேவைகளின் அடிப்படையில் நம்மில் பலருக்கும் இது போன்ற ஒரு கருவி அவசியமாக இருக்கும்.

இதன்
பயன்கள், நிறைகுறைகள் பயனாளிகளின் தேவையின், பயன்பாட்டின் அடிப்படையில் இருக்கும்.

குறையாடுகள் ஏதேனும் இருந்தாலோ, இன்னும் தேவையான வசதிகள் பற்றியோ தெரிவித்தால் நண்பர் நாகராஜன் அவர்கள் இக்கருவியை மேம்படுத்த உதவும்.

தமிழ் சொற்களை அகர வரிசைப்படுத்த NHM Lister -ஐ பயன்படுத்துவதற்கு இங்கே சொடுக்கவும்.

நன்றி: சிந்தாநதி

பயர்பாக்ஸில் தமிழை சிதையாமல் படிக்க...

இண்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு அடுத்தபடியாக வேகமாக முன்னேறி வந்த பயர்பாக்ஸ் உலவி தமிழ் வலைப்பதிவுகளைப் படிப்பதில் மட்டும் சில பிரச்சினைகளை சந்தித்தது. ஒழுங்கு படுத்தப்பட்ட (Align) பத்திகளை கொண்ட வலைப்பதிவுகள், இணையப் பக்கங்கள் இழைபிரிந்து, தமிழ் குதறப்பட்டு காட்சியளித்தது.

இந்தப் பிரச்சினை அடுத்த பதிப்பிலாவது நீங்காதா என்ற நப்பாசையில் அடுத்தடுத்த பதிப்புகளுக்காக காத்திருப்பது வழக்கமாகி விட்டது.
தற்போது அதற்கு தக்க நிவாரணம் கிடத்திருக்கிறது.

பயர்பாக்ஸ் 3 பீட்டா 2 என்ற மேம்படுத்தப்பட்ட உலவி மூலம் அது சாத்தியமாயிருக்கிறது! தற்போது தமிழ் சிதையாமல் பயர்பாக்சில் வேலை செய்கிறது!! தமிழ்த்தளங்களில் ஒழுங்காக வேலை செய்கிறது!!!

விண்டோஸ் பயனர்களுக்கான ஆங்கில இடைமுகப்பு பயர்பாக்ஸ் 3 பீட்டா 2 பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

மேக், லினக்ஸ், மற்றும் பல மொழிகளுக்கான பயர்பாக்ஸை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இடைமுகப்பு இந்திய மொழிகளில் இந்தியோ, தமிழோ இல்லை. மாறாக குஜராத்தி, பஞ்சாபி மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

நன்றி: சிந்தாநதி

Wednesday, July 02, 2008

பிரபலங்களின் முழுப் பெயர்கள்

நாம் அறிந்த தலைவர்கள், பிரபலங்கள், அறிஞர்கள் ஆகியோர்களின் முழு அல்லது இயற்பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய சிறப்புப் பெயர்கள், பட்டப் பெயர்களாலேயே பொதுவாக அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.

அதன் சிறு முயற்சிதான் இது... இதில் பிழையிருப்பின் தகுந்த ஆதாரங்களோடு சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வேன். நிறைய பிரபலங்களின் பெயரை சேர்க்கப்படவில்லயென்பது உண்மையே. ஏனெனில் எனது சிற்றறிவிற்கு எட்டியவரை கொடுத்துள்ளேன். அப்பிரபலங்களும் இதில் இடம்பெறச் செய்யவேண்டுமென்று நீங்கள் கருதினால், அவர்களது பெயரை எமக்கு அனுப்பி வைத்து உதவுங்கள்... நன்றி.

(சாதிப் பெயர்களில் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும் எடுத்துக்கொண்ட தலைப்பு அப்படி என்பதால், என்னை சமாதானப்படுத்திக் கொண்டு பதிவுசெய்கிறேன்)


நேதாஜி சுபாஷ் சந்திரா - 'மாவீரன்' நேதாஜி
கோபால்சாமி துரைசாமி நாயுடு - ஜி. டி. நாயுடு
வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் - வ.வே.சு.ஐயர்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி - 'மகாத்மா' காந்தி
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் - டாக்டர் அம்பேத்கர்
குமாரசாமி காமராஜ் - 'பெருந்தலைவர்' காமராசர்
மொரார்ஜி ரஞ் சோட்ஜி தேசாய் - மொரார்ஜி தேசாய்
மேரி தெரசா போஜாக்சியூ - அன்னை தெரசா
ஈரோடு வெங்கட்ட நாயக்கர் ராமசாமி - தந்தை பெரியார்
நெல்சன் ரோலிக்லாஹ்லா மண்டேலா - நெல்சன் மண்டேலா
காஞ்சீவரம் நடராஜன் அண்ணாதுரை - பேரறிஞர் அண்ணா
மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் - ம.பொ.சி

மருதூர் கோபலன் ராமச்சந்திர மேனன் - 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர்
வைக்கம் நாராயணி ஜானகி - வி.என்.ஜானகி (எம்.ஜி.ஆரின் 3 - வது மனைவி)
கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் - கே.பி. சுந்தராம்பாள்
மதராஸ் ராஜகோபால் நாயுடு ராதாகிருஷ்ணன் - எம்.ஆர்.ராதா
பலுவாயி பானுமதி ராமகிருஷ்ணா - நடிகை பானுமதி
பொள்ளாச்சி சின்னப்பா வீரப்பா - பி.எஸ்.வீரப்பா
புரூஸ் ஜுன் ஃபேன் லீ - புரூஸ் லீ
கோச்சேரில் ராமன் நாராயணன் - கே.ஆர். நாராயணன்
பாமுலபார்தி வெங்கட நரசிம்மராவ் - பி.வி. நரசிம்மராவ்
இந்தர் குமார் குஜ்ரால் - ஐ.கே. குஜ்ரால்

ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா - ஜே.ஆர்.டி. டாடா
புதுக்கோட்டை உலக நாதப்பிள்ளை சின்னப்பா - பி.யூ.சின்னப்பா
மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியகராஜ பாகவதர் - எம்.கே. தியகராஜ பாகவதர்
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி - எம்.எஸ். சுப்புலட்சுமி
அவுல்
பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் - ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
சான் கோங் சாங் - ஜாக்கி சான்
கட்டசேரி ஜோசப் யேசுதாஸ் - கே.ஜே.யேசுதாஸ்
அல்லா ரகா ரஹ்மான் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

Saturday, June 28, 2008

கற்பின் விலை..? (குறுங்கவிதைகள்)

கற்பின் விலை

கல்வித்தாயினுடைய
கற்பின் விலை
டொனேஷன்..!

--*--*--*--*--*--*--*--

எருது

மனிதர்களின் வாழ்க்கை
வண்டியை ஓட்ட
நான் சுமக்கிறேன் பாரத்தை..!

--*--*--*--*--*--*--*--

இசை

ஐந்தறிவு மாக்களையும்
வசப்படுத்த
ஆறறிவாளன் கண்டுபிடித்த
அற்புத சக்தி..!

--*--*--*--*--*--*--*--

கங்காரு

கர்ப்பப்பையில் சுமந்தது
போதாதென்று
வயிற்றுப்பையிலும் சுமக்கும்
உத்தமத்தாய்..!

--*--*--*--*--*--*--*--

அரசின் அறிவிப்பு

இன்று உலக
எயிட்ஸ் ஒழிப்பு தினம்
கடைபிடியுங்கள்
காண்டத்தோடு..!

--*--*--*--*--*--*--*--

மழை

பூமிப்பெண்ணைப்
பார்த்து
வானமகன்
விடும் ஜொள்..!

--*--*--*--*--*--*--*--

முகில்

பூமிப்பந்தை
குளிர்விக்க
இயற்கையளித்த இலவச
குளிர்சாதனக் கருவி..!

--*--*--*--*--*--*--*--

விதவை

பிறருக்கு
வெளிச்சம்
கொடுப்பதற்காக
தன்னையே அழித்துக் கொள்ளும்
மெழுகுவர்த்தி....

--*--*--*--*--*--*--*--

Friday, June 27, 2008

ஹைக்கூ கவிதைகள் அல்ல குறுங்கவிதைகள்..!

மூன்று அல்லது நான்கு வரிகளில் எழுதப்படும் கவிதைகளை... 'ஹைக்கூ கவிதைகள்' என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஜப்பானிய வடிவமாக இருக்கும் 'ஹைக்கூ', கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியான நம் தமிழ்க்குடியின் முதுபெரும் மூத்த புலவரான வள்ளுவர் எழுதிய குறள் வடிவம்தான். வித்தியாசம் எனெனவெனில், அவர் இலக்கணச் சுத்தமாக, மரபு நடையில், இரண்டே அடிகளில் ஐயந்திரிபர சொல்லிவிடுவார். அந்த இரண்டு வரிகளில் முதல் வரியை இரண்டாக மடித்து எழுதினால் குறள் மூன்று வரிகளாகிவிடும். அதைத்தான் 'ஹைக்கூ' வும் செய்கிறது. ஆனால் புதுக்கவிதை நடையில்...

நமக்குதான் தமிழிலேயே அனைத்தும் இருக்கிறதே பிறகு ஏன் 'ஹைக்கூ' கவிதை என்கிறீர்கள். முத்து, முத்தாய் மூன்றே வரிகளில் எழுதுவதை, நறுக்குத் தெரித்தாற்ப் போல் நான்கே வரிகளில் எழுதுவதை இனி குறுங்கவிதைகள் என்ற அழைக்கலாமே..! இதுநாள்வரை நான் அப்படித்தான் அழைத்திருக்கிறேன். அழைத்துக் கொண்டே இருப்பேன்.

இனி எனது குறுங் கவிதைகள்...

--0--0--0--0--0--0--0--

தண்ணீர்க்குடம்

எத்தனை முறை தூக்கிலிட்டாலும்
உயிர் பிரியாமல் உறவாடும்
உலோக உயிரி..!

--0--0--0--0--0--0--0--

பிச்சைக்காரன்

நிகழ்கால சோகந்தன்னை
எதிர்காலம் வென்றிடவே
ஏந்துகிறான் திருவோடை..!

--0--0--0--0--0--0--0--

வேண்டுதல்

குந்த குடிசை வேணும்
கடவுளே..?
வேண்டுதல்
அரச மரத்துப் பிள்ளையாரிடம்..!

--0--0--0--0--0--0--0--

எயிட்ஸ்

நவயுக
எமதர்மனின்
கலியுக
எமவாகனம்..!

--0--0--0--0--0--0--0--

கடியாரம்

கால தேவனை
நொடிக்குள் அடக்கும்
எந்திரக்குருவி..!

--0--0--0--0--0--0--0--

கருமி

எதிர்காலம் சிறக்க
நிகழ்கால வாழ்வை
சிதைக்கும் கிருமி..!

--0--0--0--0--0--0--0--

அகிம்சை

அண்ணலின் ஆயுதமாம்
அகிம்சை..!
இங்கேயும் 'ஆயுதம்'..!

--0--0--0--0--0--0--0--

எரிமலை

பூமித்தாயின்
சிவப்பு
எச்சில்..!

--0--0--0--0--0--0--0--

இயந்திர மனிதர்கள் (ரோபோக்கள்)

கலியுக பிரம்மாக்கள்
படைத்த
நவயுக மானி(ட்)டர்கள்..!

--0--0--0--0--0--0--0--

குளோனிங் முறை

மெய் ஞானம் கொண்ட
விஞ்ஞான மனிதர்களின்
அஞ்ஞான முயற்சி..!

--0--0--0--0--0--0--0--

முதுமை

மானுட காவியத்தின்
கடைசி
அத்தியாயம்..!

--0--0--0--0--0--0--0--

மரணம்

மனிதமெனும் சரித்திரத்தில்
கடைசி வாக்கியத்தின்
முற்றுப்புள்ளி..!

--0--0--0--0--0--0--0--

திருக்குறள்

தருமி எனும் தமிழ்மக்களுக்கு
தெய்வப்புலவன் தந்த
பொற்கிழி..!

--0--0--0--0--0--0--0--

பள்ளி...

தமிழுக்கு தொண்டு செய்த
ஔவையின் நினைவாக
ஒரு பள்ளி - பெயர் மட்டும்
ஔவையார் அகாடமி..!

--0--0--0--0--0--0--0--

Saturday, June 21, 2008

நிலத்தின் அளவீடுகள்

நடுத்தர வர்க்கத்தினரும், ஏழையும் வேண்டுவது குடியிருக்க ஒரு வீடு. இப்போது வீடு வாங்குவது நடக்கின்ற காரியமா? நிலம் வாங்குவோம் என்பவர்களுக்கு நிலத்தின் அளவீடுகள் சரிவரத் தெரிவதில்லை (நான் உள்பட) அதற்காக இந்த பதிவு...

1சதுர அடி - 1 அடி'' x 1 அடி''
10 சதுர அடி - 10 அடி'' x 10 அடி''
435.6சதுர அடி - 1 சென்ட் (Cent)
1076 சதுர அடி - 1 ஏர் (Are)
1200 சதுர அடி - ½ கிரவுண்டு (Ground)
2400 சதுர அடி - 1 கிரவுண்டு
43560 சதுர அடி - 1 ஏக்கர்
107637.8 சதுர அடி - 1 ஹெக்டேர்

1 சென்ட் - 435.6 சதுர அடி (Sq. ft)
10 சென்ட் - 4356 சதுர அடி
100 சென்ட் - 43560 சதுர அடி

1 ஏக்கர் = 43560 சதுர அடி
= 100 சென்ட்
= 40.5 ஏர்கள்
= 0.471 ஹெக்டேர்
= 18.15 கிரவுண்டுகள்

1 குழி - 144 சதுர அடி
3 குழி - 1 சென்ட்
30 குழி - 1 மா(Maa)
1 காணி - 1.322 ஏக்கர்

1 மீட்டர் - 3.280833 அடி (Feet)
1 மைல் - 5280 அடி (Feet)

@இதில் என் அறிவிற்கு எட்டியவரை சரியாகத் தந்திருக்கிறேன். பிழையிருப்பின் தகுந்த ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன். நன்றி.

('காணி நிலம் வேண்டும்' என்று மகாகவி பாரதி குறிப்பிட்ட நிலத்தின் அளவு இதை நான் படித்தபோதுதான் தெரிந்து கொண்டேன்)

Tuesday, June 17, 2008

சாதி ஒழிப்பு

(பணி நிமித்தமாக பண்ருட்டியில் 2004, ஆகஸ்டு 2-ம் தேதி தினமலரில் வந்த செய்தி...'(படிப்பதற்காக..?)சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காக 9 வகுப்பு மாணவி தற்கொலை' படித்ததும் பதறித் துடித்தது என் மனம்... என் உள்ளக்குமுறல்கள் இதோ...)

அட கேடு கெட்ட சமுதாயமே
சாதி வெறி பிடித்த
சமுதாயமே
உன்னால் இன்று ஒரு உயிர்
போய்விட்டதே...
மீட்டுத் தரமுடியுமா உன்னால்..?

அட மதிகெட்ட அரசே
அழுகிய மனம்
கொண்ட அரசே
சாதிகள் இல்லையென்று
வீதிக்கு வீதி
விளம்பரம் செய்வாய்...
ஆனால் சட்டப்படி சாதி பார்த்து
சாதிச் சான்றிதழ் வழங்குவாய்...

எதற்கிந்த
பச்சோந்தி வேடம்
சாதிப்பிரிவால்
கிடைத்ததென்ன உனக்கு..?

வேற்றுமையில் ஒற்றுமை
என ஓதிவிட்டு
இன்ன சாதி இவன்
இவள் இன்ன சாதி என
சான்றளிக்கிறாயே...

சாதிப் பேய் பிடித்த
சதிகார அரசே
சனியன் பிடித்த அரசே
என்று நீ மாறுவாய்..?
எப்போது நீ
எளியவர்களைக் காப்பாய்..?

நடுவண் அரசு
நல்லரசு...
மக்களுக்கு
நன்மை பயக்கும் அரசு...
என பத்திரிகைகளில்
பக்கத்திற்குப் பக்கம்
பகட்டாய் விளம்பரம்..?

இதோ ஓர் உயிர்
கேவலம் ஒரு
சாதிச் சான்றிதழ்
கிடைக்கவில்லை என
தன்னுயிரை மாய்த்துக் கொண்டது பார்..!
மதிகெட்ட அரசே
பொய் வேடம் உனக்கெதற்கு..?

அம்மாணவி
ஓர் அன்னை தெரசாவாக
ஜான்சி ராணியாக
விண்வெளி வீரங்கனையாக
ஏன் ஒரு வீரத்திருமகளாக
வந்திருப்பாள்..!

நடந்ததா அது..?
உன் கேடு கெட்ட சாதித்தனத்தால்
உனது அதிகாரத்திலுள்ள
அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால்...
அவர்கள் குடும்பம்
உற்சாகத்தில் ஊறித் திளைக்க
வறியவர்களிடம்
வஞ்சகமில்லாமல் லஞ்சம்
கேட்டதால்...
தீயிலே வெந்து விட்டாள்...

சாதிகளைச் சொல்லி சான்றிதழ்
தரும் உன்னை
தீயிட்டுக் கொளுத்துவேன்
உன் தீங்கான எண்ணங்களுக்கு
எழுத்தாணி தீட்டுவேன்
உன் சவப்பெட்டி
சாதிச் சட்டங்களை
ஆணி கொண்டறைவேன்..!

மக்கள் நலன் காக்கும்
அரசு நீ என்றால்
சாதிகளை ஒழி..!
சாதிச் சான்றிதழை ஒழி..!

சாதிகள் உண்டெனில்
அது ஆணொன்று
பெண்ணொன்று சொல்..!
சாதி வெறி பிடித்த நாய்களின்
காதில் விழும்படி சொல்..!

இல்லையேல் விழுந்தடித்து ஓடு
இல்லையெனில்
நான் ஓடவைப்பேன்..!

எந்த நாட்டிலும் காணா
பல சாதிகள் இங்குண்டு பாரீர்...
அதன் பேரில் பல சாதிக்
கட்சிகளுமுண்டு பாரீர்...
சாதிக் கட்சித் தலைவர்கள்
சாதியின் பெயரைச் சொல்லி
உண்டு கொழுக்கிறார்கள் பாரீர்...

அவன் சாதியாக இருந்தாலும்
ஏழையாக.. ஏமாளியாக
இருப்பவனிடம்
சாதிவெறி தூண்டி விட்டு
குளிர் காயும் குள்ள நரிகள்
இங்குண்டு பாரீர்...

இவ்வளவு நடந்தும்
குட்டக் குட்டக் குனியும்
ஏமாளி மக்களே..?
முதுகெலும்பில்லாத அப்பிராணிகளே
சாதிகளுக்கெதிராக என்று
எழுவீர்கள்..?
இந்த தேசத்தை
எப்போது காப்பீர்கள்..?

எழுங்கள்... இன்றிலிருந்தாவது
விழித்தெழுங்கள்...
விரைந்தெழுங்கள்...
சாதிகள் இல்லையென்று
சொல்லுங்கள்...
அச்சகதியிலிருந்து
வெளியே வாருங்கள்..
சாதியை விட்டொழியுங்கள்...

நீ என்ன சாதி என்று
கேட்பவனின்
வாயைக் கிழித்தெறியுங்கள்...
மதங்களை மறந்து
மனிதர்களை நேசியுங்கள்...

நமக்காகவே அரசு
நல்லோர்களைத் தேர்ந்தெடுங்கள்
அவர்கள் துணையோடு
சாதியை விரட்டுவோம்
சாதி மதமில்லா
சமுதாயம் படைப்போம் வாருங்கள்...

என்னருமை மக்களே
எனது உடன் பிறவா உள்ளங்களே
நம் எதிர்கால சந்ததிகளாவது
சாதியைப் பேசாமல்
கேட்காமல் இருக்கச் செய்வோம் வாருங்கள்..!

மோ. கணேசன். 02.08.2004.

அரசியல்வாதியின் வேண்டுதல்..?

திருப்பதி ஏழுமலையானே...
இந்த தேர்தலில்
என்னை நீ ஜெயிக்க வச்சா
எனக்கு ஓட்டு போட்ட
ஊர் மக்களுக்கு மொட்டையடிச்சு
உனக்கு கிரீடம் சாத்துறேன்..!

(பணி நிமித்தமாக பண்ருட்டியில் தங்கியிருந்த போது, 20.08.2004 அன்று காலையில் எழுதியது)

Monday, June 16, 2008

புரட்சித் திருமணம்

திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறதாம் - எப்படி
இந்தச் சாதிக்காரனுக்கு
அவனுடைய சொந்த சாதியில்தான்
மணமுடிக்கப்பட வேண்டுமென்று...

மதம் விட்டு மதம் மாறியோ
சாதி விட்டு சாதி மாறியோ
மணக்கக் கூடாது... - மாக்கள்
செய்து வைத்திருக்கும் மடத்தனமான வரையறை..!

மடத்தனம் இது மடமைத்தனம்
என்று எதிர்த்துச் செய்தால்
ஏசல் விழும்... பூசல் எழும்...
பல சமயங்களில் உயிரே வீழும்..!

சாதி விட்டு சாதி மாறி மணம் செய்தால்
அது கலப்புத் திருமணமாம்...
எந்த அறிவாளியடா(?) இதற்கு அப்படியொரு
கேவலமான பெயர் வைத்தான்..?

மனித இனத்தை விட்டுவிட்டு
விலங்கினத்தையா மணம் செய்தோம்?
அதை கலப்பு மணம் என்று
கடிந்து சொல்வதற்கு..?

அந்தத் திருமணத்தை...
சாதிகள் ஒழிய... சமத்துவம் மலர...
நற்சமுதாயம் வளர மனமொத்த தம்பதிகள்
செய்த புரட்சித் திருமணமென்று சொல்லுங்கள்..!

சமயசார்பற்ற நாடு என்பதை விட
சாதி மதமற்ற நாடு என்று
சொல்லிக் கொள்வதில்
நாம் பெருமைப் படலாம்..!

இனியேனும் அதை கலப்பு மணம்
என அழைக்காதீர்கள்...
புதிய சமுதாயம் படைக்கும்
'புரட்சித் திருமணங்கள்' என்று சொல்லுங்கள்..!

சாக்காடான சாதிகளின் பெயரால்
மதம் பிடித்த மதங்களின் பெயரால் - இனி
எக்கொடுமைகளும் நடவாமலிருக்க
நாடெங்கும் நடக்கட்டும் 'புரட்சித் திருமணங்கள்'
அதற்கு ஆதரவு நல்கட்டும் இளைஞர் மனங்கள்...

- மோ. கணேசன்.

Saturday, June 14, 2008

காதலனின் ஏக்கம்...

ம் பெற்று வந்தேனோ உனைப் பார்க்க
திநிறை மலர் கண்ணால் எனை நீ நோக்க
மோம் கொண்டேனடி உன்மேல் பெண்ணே..!
நாணேறும் அம்பைப் போல் உன் முன்னழகும்
ரடிக்கும் பின்னழகும், மயக்கும் உன் சிரிப்பும்
ன்மத்தம் ஊட்டுதடி என்னன்பே அருகில் வா..!

Tuesday, May 27, 2008

எனது நண்பனுக்கு திருமண வாழ்த்து...



சு
கமான சுமைகளை சுமக்கப் போகும்
எங்கள் அருமை நண்பர்களே..! - ஈ
ரேழு ஜென்மங்கள் நிலைத்திருக்கும் திருமண
பந்தத்தில் இணையவிருக்கும் நல் இதயங்களே..!
ஷ்டமும் கஷ்டமும் நிறைந்தது வாழ்க்கை
அதில் இனிமையைக் காண்பது உங்கள் வேட்கை..!

ட்டுப்பாடுகள் நிறைந்த இச்சமூகத்தில்
புரட்சி மணம் செய்கின்ற வைரங்களே..!
வினைகள் பல உண்டு திருமண வாழ்க்கையில்
விட்டுக்கொடுத்தும், தட்டிக் கொடுத்தும் வாழ்ந்தால்
தாழ்வில்லை உங்கள் வாழ்வில்..! - என்றென்றும்
தொடரட்டும் உங்கள் பந்தம்... வாழ்க நீவீர்..!

-அன்பு நண்பா... உன் திருமண வாழ்வில் உன்னத நிலையை அடைய எனது நல்வாழ்த்துகள்..!



என்றென்றும் நட்பு'டன்'

மோ. கணேசன்.

(எனது நண்பரின் பெயர் சுரேஷ். அவரது மனைவியின் பெயர் கவிதா. நான் எழுதிய வாழ்த்து மடலில் இவர்களிருவரின் பெயரும் முதலெழுத்தாக வரும்படி எழுதியிருக்கிறேன். கண்டுபிடித்தாயிற்றா...)

Thursday, May 08, 2008

எனது முதல் வசன கவிதை!

(மகாகவி பாரதியார் எழுதிய வசன கவிதைகளைப் படித்து இன்புற்ற நான்.., என் மனதில் தோன்றியதை வசன கவிதையில் எழுத முற்பட்டதின் முதல் முயற்சி இந்த 'ஏற்றத்தாழ்வு என்னும் பிணி' )

ஏற்றத்தாழ்வு எனும் பிணி

பிரபல மருத்துவர் அவர்...
பிணிகளைத் தீர்ப்பதில் வல்லவர்
அரசு மருத்துவமனையில்
பணியாற்றுபவர்...
பணி நேரம் போக தனியாகவும்
மருத்துவம் பார்ப்பவர்...

அரசு மருத்துவ மனையில்
அமர்ந்திருந்த
மருத்துவரிடம் வந்தார்
ஓர் ஏழை...

என்னென்று வினவினார்
மருத்துவர்

ஐயா...
வயிற்றில் சுரீரென்று வலி
வாயினில் புண்...
தாளமுடியவில்லை
பிணி நீக்கவேண்டும் ஐயா...

மருத்துவர் தன்
பரிசோதனைகளைச் செய்தார்...
உடலில் உள்ள குறைகளை
ஓரளவு கண்டறிந்து கொண்டபின்
ஏழையிடம் வினவினார்...
ஐயா நேற்று என்ன சாப்பிட்டீர்..?

ஒன்னும் சாப்பிடலீங்க
சாயங்காலம்தான்
கொஞ்சம் கஞ்சி குடிச்சேன்...

அதற்கு முதல் நாள்
என்ன சாப்பிட்டீர்..?

காலையில் கொஞ்சம்
பழையது சாப்பிட்டனுங்க...
அப்புறம் ராவுப்பொழுதுக்கு
கொஞ்சம் கஞ்சிங்க...

பிணிக்கு காரணம் புரிந்தது
சரியான ஆகாரம் அந்த
ஏழைக்கு இல்லை...
அதனால் வந்த பிணி இது என்று...

தேவையான மருந்துகளை
குறித்துக் கொடுத்து...

ஐயா உணவு உண்டபின்
இந்த மருந்துகளை
உட்கொள்ளுங்கள்...

சாப்பிட்டதுக்கு பொறவு
மாத்திர சாப்பிடனும்னு
சொல்றீங்க சாமி...
அந்த சாப்பாடுதாங்க
என் வீட்ல பிரச்சினை...
உழைக்கத் தயரா இருந்தும்
வேலை வெட்டியில்ல...
அதனால
எங்க சட்டியும் காயுது
வட்டியும் காயுது...

அதனாலதாங்க உங்க
வயிறும் இப்ப நோகுது...
என்று பதிலிறுத்த மருத்துவர்
கவலை கொள்ளாதீர்
நாளை வந்து எனை பாரும்
வேலைக்கு வழி சொல்கிறேன்...
என்று ஏழையை
வழியனுப்பினார்
நம் மருத்துவர்.

மாலை வேளையில்
தனது தனி மருத்துவமனையில்
மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார்
அம் மருத்துவர்.

வாசலில் வந்து நின்றது
வாட்டமான கார் ஓன்று
அதிலிருந்து நடக்க முடியதாபடி
நடந்து வந்தார்
அவ்வூரின் செல்வந்தர்களில்
ஒருவரான செல்வராஜ்...

டாக்டர்...
நடக்க முடியல...
மூச்சு வாங்குது...
வயிறு திம்முன்னு இருக்குது...

இதைச் சொல்லவே அவருக்கு
மேல் மூச்சுகீழ் மூச்சு வாங்கியது...

பரிசோதித்தார் மருத்துவர்
உங்களுடைய அன்றாட
உணவு முறை பற்றி
சொல்லுங்கள் என்றார்...

காலையில் டிபன்
மதியம் புல் மீல்ஸ்
மாலையில் சிற்றுண்டி
இரவு பிரியாணி
இடையிடையே நொறுக்குத் தீனி
இதுதான் என்னுடைய
அன்றாடஉணவு முறை...

நாளையே பிரசவித்துவிடும்
நிலையில்
அவரது வயிறு
உப்பிக் கொண்டு நின்றது...

பிணியின் காரணத்தை
அறிந்து கொண்ட மருத்துவர்
மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டு

உணவு முறைகளை
மாற்றுங்கள்...
நொறுக்குத் தீனிகளை
ஒழியுங்கள்...
எளிய உணவுகளும்
காய்கறி, கனிகளையும்
சாப்பிடுங்கள்
தினமும் அரை மணி நேரம்
நடைப் பயிற்சி...
கார் வேண்டாம்
சைக்கிள் ஓட்டுங்கள்...
என்றார் மருத்துவர்...

தனிமையில் இருந்த
மருத்துவரின் சிந்தையில்....
காலையில் வந்த
ஏழையின் வயிறு தோன்றியது...
சுவற்றில் ஓட்டப்பட்ட
காகிதம் போல்
கறுத்துச் சிறுத்த வயிறு...

மாலையில் வந்த
செல்வந்தரின் வயிறும்
தோன்றியது...

செல்வச் செழிப்பும்
உணவுக் கொழிப்பும் மிகுந்த
பானையைப் போன்ற வயிறு...

இருவரும் ஒரே திசையிலிருந்துதான்
வருகின்றனர்... ஆனால்
எதிரெதிர் திசையில் நிற்கின்றனர்...

ஏழைக்கு... வேலையுமில்லை
உணவுமில்லை...
பசியும் பிணியும் வாட்டுகிறது..?

செல்வந்தனுக்கு வேலையுமுண்டு
அதிகப்படியான உணவுமுண்டு
தொப்பையும், பிணியும்
வாட்டுகிறது..?

இந்த ஏற்றத் தாழ்வு
எங்கிருந்து வந்தது?
இதை எப்படி ஒழிப்பது..?

இருப்பவன் இல்லாதவனுக்கு
கொடுத்து உதவ வேண்டும்..!

முடிகின்ற காரியமா இது?

எல்லோரும் சமம்
என்ற நம் அரசின்
கொள்கை, கோட்பாடு
இங்கு கோமாளித்தனமாகி விட்டதே..?

இல்லாதவன்
உழைக்கத் தயாராக இருந்தும்
வேலையுமில்லை..?
வேளா வேளைக்கு
உணவுமில்லை..?

அட என் பாரதமே...
இந்த ஏழைகள் நிலை
என்று மாறும்..?
அவர்களின் துயரங்கள்
என்று தீரும்..?

மருத்துவரின் மனதில்
ஆயிரம் கேள்விக்கணைகள்...
பதிலளிப்போர் யார்..?
பாமர மக்களைக் காப்பவர்கள் யார்..?

உங்களுக்காவது
விடை தெரிந்தால் சொல்லுங்களேன்..!

(இதை எழுதிய சூழல்: பண்ருட்டியில் பணி நிமித்தமாக அறை எடுத்து 6 மாத காலம் தங்கியிருந்தேன். அதில் ஓரு நாளான 16.10.2004, அன்று காலை 8.00 மணியிலிருந்து, காலை 8.30-க்குள் எழுதி முடித்து விட்டேன். அதை சிற்சில மாற்றங்களுடன் இங்கே வெளியிடுகிறேன்..)

Tuesday, January 01, 2008

எனது மகன் க. ஆதித்தனின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து


வாழ்த்தும் அன்பு நெஞ்சம்

செல்வன். க. ஆதித்தன்.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து

அன்பிற்கினிய வாசகர்களுக்காக நவீன ஆத்திசூடி..!

ன்பைக் கொடு..!
ணவம் அழி..!
ன்பத்தை நுகர்..!
கையை வளர்..!
வகையைப் பெருக்கு..!
க்கத்தை உயர்த்து..!
ளிமையைப் புகுத்து..!
ற்றம் பெற உழை..!
யம் நீங்கப் பயில்..!
ழுக்கம் நிறை..!
யாமல் சேவை செய்..!
ஓளவை சொல் கேள்..!
தே உமக்கு உயர்வு தரும்..!


எங்களின் மதிப்பிற்குரிய வாசகர்களாகிய உங்களுக்கும், உங்களின் மேல் அன்பு கொண்டுள்ள அனைவருக்கும் எங்களின் மனம் நிறைந்த...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2008

என்றென்றும் அன்பு'டன்'

உங்கள்
மோ. கணேசன்.

Monday, December 31, 2007

Happy new year - 2008

H ours of happy times with friends and family
A bundant time for relaxation
P rosperity
P lenty of love when you need it the most
Y outhful excitement at life's simple pleasures

N ights of restful slumber (you know - don't worry be happy)
E verything you need
W ishing you love and light

Y ears and years of good health
E njoyment and mirth
A angels to watch over you
R embrances of a happy years!

2008

Saturday, September 29, 2007

பெருந்தலைவர் காமராசர்


இந்தியாவின் 'கிங் மேக்கர்' என்றும், 'கருப்பு காந்தி' என்றும் அழைக்கப் பட்டவர் பெருந்தலைவர் காமராசர். தமிழகத்தில் கல்விக் கண் திறந்த கர்ம வீரர். எளிமைக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர். அரசியல் என்ற அகராதியில் இவர் ஓர் அத்தியாயம்.

யானையம்மா யானை..!


யானையம்மா யானை..!
எம்மாம் பெரிய யானை ..!
கனத்த உடம்பு யானை..!
கருத்த நிற யானை..!

அசைந்து வரும் யானை..!
அழகு வடிவ யானை..!
முறக்காது யானை..!
முன் துதிக்கை யானை..!

அம்பாரி வச்ச யானை..!
அதிக பளு தூக்கும் யானை..!
வெண் தந்தம் யானை..!
விவேகமான யானை..!

இலை தழை தின்னும் யானை..!
இரும்பு பலம் யானை..!
கரும்பு தின்னும் யானை..!
காட்டு மலை யானை..!

குட்டி போடும் யானை..!
குதிக்கத் தெரியா யானை..!
கூர்ந்த மதி யானை..!
கூட்டமாய் வாழும் யானை..!

Tuesday, September 11, 2007

மகாகவி பாரதிக்கு கவிதாஞ்சலி

புரட்சிக் கவி பாரதி நினைவு நாள் கவிதை


பெண்களை உயர்த்துவோம் பேதமை அகற்றுவேம்
சிந்தையில் நல்லெண்ணங்களைக் குவிப்போம்...
பாரதத் தாயின் விலங்கினை அறுப்போம்...
வெள்ளைப் பரங்கியனை நாடு கடத்துவோம்..!

பேத நிறை சமூகம், பேய் நிறைக் கொடூரம்
கொண்ட மூடப் பழக்கங்களை கிழித்தெறிந்தவன்...
வேதங்கள் பொய்... வேள்விகள் பொய்...
சாதிகள் பொய்... சமத்துவமே மெய்யென்றவன்..!

பத்திரிகை ஆசிரியனாய் பாமரனுக்கு ஏழுதினான்
வீறு கொண்டெழுவாய்... வேதனை துடைப்பாய்...
கொடுஞ் சாதிகளகற்றுவாய்... சரித்திரம் படைப்பாய்...
வீறு கொண்டெழுவாய்... விண்ணில் நடப்பாய்..!

கோட்டுச்சித்திரத்தால் சமூக அவலத்தைக் காண்பித்தான்
பாமரரும் புரிந்து கொண்டு பகுத்தறிவு பெற்றனர்
நமக்கு ஏவலர்கள் தேவையில்லை... - தேச
காவலர்கள் வேண்டுமென்ற நிலையைப் படைத்தவன்..!

பரங்கியரிடம் பணிந்திருந்த பாமர மக்களை
தன் புரட்சிப் பாக்களால் புத்துயிரூட்டியவன்
முண்டாசு கட்டிக் கொண்டு சமூக
முரண்பாடுகளை வேரறுக்க நினைத்தவன்..!

எந்தன் மகாகவி சுப்பிரமணிய பாரதி
எட்டயபுரத்தில் பிறந்து ஏட்டு திக்கும்
தமிழால் முழங்கி சுதந்திரத்தை வளர்த்தவன்
எந்தன் சுந்தரத் தமிழன் பாரதி..!

தமிழகத்து வானில் ஓப்பற்ற கவிச்சூரியன்
நீங்கிய இந்நாள் தமிழகத்தின் துக்கநாள்...
நீ நீங்கினாலும் ஐயா... நின் புகழ் நீங்காது
நின் கவி மறையாது... கருத்துக்கள் குன்றாது..!
-மோ. கணேசன். 11.09.2007

Saturday, September 08, 2007

ஆதித்தனுக்கு ஆத்திச்சூடி


ன்பின் மிகுதியில்
தித்தா நீ மலர்ந்தாய்..!
ன்றோடு நீ பிறந்து

ராண்டு முடிந்தாலும்
ந்தன் வளர்ச்சிக்கு
ட்டமாய் உன் அன்னை..!
திலும் நீ வெற்றி காண
ணியாய் உன் தந்தை..!
யங்கள் அகற்று..!
ற்றுமையைக் கற்றுக் கொள்..!
ய்வின்றிப் பயில்..!
ஓளவையின் மொழி கேள்..!
தே உனக்கு ஆயுதம்..!

Sunday, September 02, 2007

நிழற்படக் கவிதைகள்...

('நீரின்றி அமையாது உலகு' - திருக்குறள்.)


(விதியை மதியால் வெல்லலாம் - பழமொழி)

நிழற்படத்தினுள்ளே கவிதைகள்...

Saturday, September 01, 2007

கோட்டுக் கிறுக்கல்கள்

தாயும் சேயும்

தாயும் அவள் சேயும்



கள்ளமில்லாத வயது



குடிநீர் கிடைத்த மகிழ்ச்சி...







சிறுமியும்
அவளது நாய்குட்டியும்


நான் ரசித்து வரைந்த ரதி...


அழகிய வாத்து



(இந்த வாத்து படத்தை உற்று நோக்கினால் ஒரு செய்தி படிக்கக் கிடைக்கும்)



தமிழ்ப் பெண்



முப்பரிமாண கோட்டுச் சித்திரம் (இந்த ஓவியத்தை உற்றுப் பார்த்தால் ஒன்பது விதமாக இந்த சிறுவர்கள் கண்ணுக்கு தெரிவார்கள்... கண்டுபிடிக்க முடிகிறதா..?)



(நான் ரசித்த ஓவியங்களை, கோடுகளால் கிறுக்க முற்பட, இறுதியில் கிடைத்தவைகள்தான் இவை...)

வைரவிழா சுதந்திர தினக் கவிதை

வீறு கொண்டெழுவோம் வாரீர்..!

வீசுநறு மணங்கமழ் சோலை நிறை நாடு
பேசுகிளி யன்ன மயிலாடி நின்ற நாடு
சுகவி பேசு கலையாயிரம் படைத்த நாடு
காசுபண செல்வ நிறையெம் பாரதத் திருநாடு..!

நி
முமிப்படி யின்பமெய்தி யிருந்த போழ்து
பாமலர் பணியவேண்டிய பாரதத் தாயினை
சேமுறச் செய்ய வேண்டி மண்ணாசை கொண்ட
பேதம் நிறைந்த பாதகர் களொன்று சேர்ந்தனர்..!

விந்திய மிமயமலை போல் நிமிர்ந்திருந்த எம்
இந்திய தேசத்தை கூறுபோட்டாள நினைத்த
குந்தகத் துரோகிகள் பரங்கியரிடம் அடகு வைக்க
மந்திகளிட மகப்பட்ட மாலை போலான திந்தேசம்..!

நாதியற்றிருக்கும் வீடு போலிருந்த தேசத்தில் தியாக
சோதிநிறை யெம்மக்களில் சிலர் வீறு கொண்டெழ
காதியாடை முதல் கந்தலாடை யணிந்தவர் வரை பரங்கியச்
சதியை முறியடிக்க புது சக்தி கொண்டெழுந்தனர்..!

பீங்கிகளைக் கண்டஞ்சவில்லை யெம்மக்கள் - யம
சூரர்கள் போலின்ற சிப்பாய்களைக் கண்டஞ்சவில்லை
பரங்கியரைத் துரத்த அகிம்சை யென்ற ஆயுதமேந்தினர்
வீரத்தின் மேலின் பால் பலர் இரும்பாயுத மேந்தினர்..!

வீதிகளெங்கும் வந்தேமாதர முழக்கம் வானையிடிக்க
சதிராட்டம் போட்ட சண்டாளர்கள் சடசடவென வீழ
கொதித்தெழுந்த சுதந்திர வீரர்களைக் கண்ட பரங்கியர்
பீதி கண்டோடிப் போயின ரித்தேசத்தை விட்டு..!

மெங்கும் மகிழ்ச்சிப் பிரவாக மூற்றெடுக்க - சுதந்திர
தினமொன்று கிட்டியது காணீர் எம்தேசத்தோரே
வனவாசம் முடிந்து சன விடுதலை (சு)வாசம் பெற
வானமாமலை போன்ற நல்லிதயங்களை இழந்தோம் நாம்..!

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கேளீர் மக்களே
அம்மாவோ... எத்துனை உயிர்களை பலிகொடுத்து
சிம்மக்குகை போலிருந்த சிறைகளி லகப்பட்டு
நம் சந்ததிகள் நலம்பெற ஈந்தனர் அவரின்னுயுரை..!

பொன்போல் காத்த யித்தேசத்தில் தீவிரவாதிகளின்
வன்கொடுமை மதச்செயல்களுக் கெதிராகவும்
ஓன்றுமறியா மக்களை ஏய்த்துப் பிழைக்கும் ஈனப்
பன்றிகளுக்கெதிராகவும் தேவை மீண்டுமொரு போராட்டம்..!

று விளைவிக்கும் அரசியல் கபடதாரிகளொழிய - நம்முள்
வேறுபாட்டை ஏற்படுத்தும் தீவிரவாதிகளைத் தீயிட்டழிக்க
ஈறுகாட்டி ஏமாற்றும் போலி (ஆ)சாமி'களை' யொழிக்க- இந்த
அறுபதாவது சுதந்திர தினத்திலாவது வீறு கொண்டெழுவோம் வாரீர்!

-மோ. கணேசன். ஆகஸ்டு 15, 2007
(ஒவ்வொரு கண்ணியிலுள்ள வரிகளின் இரண்டாவது எழுத்துக்களை வரிசைப்படி படித்துப் பார்த்தால் செய்தி ஒன்று கிடைக்கும்)

Monday, July 16, 2007

கும்பகோணம் பள்ளி தீவிபத்து

கும்பகோணத் துயரம்




கோவில்களின் நகரமாம்
கும்பகோணம்
பல தெய்வங்கள் பதவிசாக
பக்தர்களுக்கு காட்சியளிக்கின்ற
நகரமாம் அது..?
தெய்வங்கள் வாழும் நகரமல்ல...
நரகம் அது..!

அட சண்டாளத் தெய்வங்களே...
கல்வி கற்க வந்து
கனி மொழி கூறும்
மழலைகள் தீயினில் கருகும் போது
எங்கே போய்த் தொலைந்தீர்கள்...

கல்லடா நாங்கள் கடவுளல்ல
என்று மதிகெட்ட மக்களுக்கு
மீண்டுமொருமுறை
'தீ'யிட்டுக் காட்டிவிட்டாய்


ஏ... 'தீ'யே...
உன் 'தீ' நாக்குகளை
ஒன்றுமறியா பிஞ்சுகளிடமா
காட்ட வேண்டும்..?

அத்தூய உள்ளங்களை
துடிக்கத் துடிக்க
'தீ'க்கிரையாக்கி விட்டாயே..?
அப்படி என்ன 'தீ'ப்பசி உனக்கு..?

உன் உக்கிரத்தை
வக்கிரமாக ஏன் குழந்தைகளிடம்
காட்டினாய்..?

பிஞ்சுகள் என்றும் எதிர்ப்பு காட்டது
என்ற எண்ணத்திலா
அப்படி எரித்தாய்..?


அம்மழலைகளைப் பெற்ற
பெற்றோர்களின்
கண்ணீரைக் கண்டாயோ..?
அது கல்லையும் கரைய வைத்து விடும்

அத்தனை உயிர்களையும்
உன் 'தீ'ய வயிற்றுக்கு
இரையாக்கிவிட்டு
ஏதும் நடவாதது போல்
இருக்கிறாயே..?

உனை ஓன்றும் செய்ய
முடியாது
என்ற இருமாப்பா...?

பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்தான்
அனாதைகளாகியதை
கேள்விப்பட்டிருக்கிறோம்...
அந்தோ உன்னால்
பிள்ளைகளை
இழந்து நாங்களல்லவா
அனாதைகளாகி விட்டோம்...


உன் வீரத்தை 'தீ'ரத்தை
இனியேனும்
குழந்தைகளிடம் காட்டாதே..?
ஒன்றுமறியா
ஏழைகளிடம் காட்டாதே?

'தீ'யோர்கள் இந்நாட்டினில்
(சு)தந்திரமாய்
திரிந்து கொண்டிருக்கிறார்கள்...


'தீ'விரவாதிகள் என்ற பெயரால்
போலி அரசியல்வாதிகள் என்ற பெயரால்
போதைச் சாமியார்கள் என்ற பெயரால்
இன்னும் எத்தனையோ
'தீ'யவர்கள்…

அவர்களிடம் உன் 'தீ'ரத்தை காட்டு
அவர்களை 'தீ'யிட்டழி
உலகம் உன்னை வாழ்த்தும்...

சிதைகளை மட்டுமே எரிக்க
உனக்கு உரிமையுண்டு
இனியேனும் உயிர் விதைகளை
எரிக்காதே...
எங்கள் வயிற்றினில்
'தீ'யினை மூட்டாதே...

-மோ. கணேசன்.


(கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 மொட்டுக்கள் உதிர்ந்து மூன்றாமாண்டு நினைவு நாள் (16.07.2007) இன்று. உயிர் நீத்த பிஞ்சுகளுக்கு என் கண்ணீர் அஞ்சலி...


Sunday, July 08, 2007

The new 7 Wonders announced in 07.07.07

The new 7 wonders will be announced at lisben city in 07.07.'07
the first place got Our Taj Mahal... wow...


Other 6 places given below...

* The Colosseum, Italy






* The Great Wall of China, China






* The Statue of Christ Redeemer, Brazil


* Machu Picchu, Peru



* Chichen Itza, Mexico







* Petra, Jordan





Wednesday, September 20, 2006

Sep'06 jokes

Sardar was sitting in a beach.
American : Are you relaxing
Sardar: I am santa singh
another american: Are you relaxing
Sardar: No, I am santa singh
sardar left that place in anger. then sadar ask some american lying nearby "Are you relaxing"
American : Yes...
Saradr gives a slap and says... " everybody searching for you... lying here..."
*****************************************************
Girl: How much this dress
store keeper: Just 5 kisses
Girl: How much this saree
store keeper: Just 10 kisses
Girl: OK. Pack this saree, Grand ma pay the bill
*****************************************************
Saradar: My mobile bill how much?
Call center Girl: Sir, Just dial 123 to you know the current bill status
Saradr: Stupid, Not current billya..., my mobile billya....
*****************************************************

Sunday, August 13, 2006

Artificial bird...


U see this art... u find somthing...

August month SMS jokes

Pagalla nimmadi illa… iravula thookkam illa, purandu purandu thoonguren.. kadavule ithuthaan kathala..?
KADAVUL: illappa ithu “ CHIKKUN KUNIYA”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
White-um kalarthan… block-um colorthan… aana blockand white TV yai yaarum color TV nnu solrathillai.. enna ulagamda ithu…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Grand son: thaththa… thaththa… seekkiram poy olinjukkanga.. enga vaththiyar varraar…
Grand father: naan enda poy olinjukkanum..?
Grand son: neththuthaan neenga seththu poyittatha solli leave potten… athaan..1?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Doctor: your husband needs some rest… here are some sleeping tablets…
Patient Wife: when must I give them to him..?
Doctor: these tablets are for you…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Terrorist: who are you man…
Vijayakanth: Simma… narasimma…
Terrorist: pre paid simma… post paid simmaa..?
Vijayakanth:..????
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Monday, July 24, 2006

In one scooter three sardars were going, so traffic police showed his hand… sardar said “ sorry we are already three members…”
**********************************************
In a circus, a lion shake hands a lady… ringmaster asks the audience: can any one do this..?Sardar:"I can do this, but first send the lion away…"
**********************************************
Sardarji was getting down at every station and buying ticket to next station. Some one asked why he was doing so, sardar said “ the doctor told me avoid long journey…"
**********************************************
Beggar: I am author of a book called “150 methods to become rich”
Sardar: Then why are you begging?Beggar: This is one of the best method “ AYYA SAMI… PICHCHI PODUNGA..”
**********************************************
You are equal 60 James bonds…
how?
60 x 007 = 420
…he…he… he… he…
**********************************************

Tuesday, May 02, 2006

today sardar jokes

Sardar bar at in New York.
Man on his right says “ Johny walker single”
Man on his left says “ Peter scotch single”
Sardar says “ my self baljitsingh – married”

*********************************************************************

Sardar reading a book at a library. After reading he said, " so boring, so many characters but no story", then librarian says, sardarji this is a telephone directory.

*********************************************************************

Soldier: “Sir, we are surrounded by enemies”
Sardar major: “ Excelent! We are shoot in any direction…”

*********************************************************************

Kanmani anbodu friend nan anuppum message, illa SMS, vena messagene pottukka… Ponmani un cellil signal kidaikkuthaa.?? En cellil ingu kidaikkuthu… unnai ennip paarkkaiyil SMS kottuthu, athai unakku anuppa ninaikkaiyil balance muttuthu… “ Manithar unarnthu kola idhu mokka message alla… athaium thaandi mattamaanathu… mattamaanathu…”.
“ athu Ennamo puriyala, enna maayamo theriyala en cllula mattum balance nirkave mattanguthu… BSNL maami… BSNL maami…”

**********************************************************************

Saturday, April 15, 2006

Mini jokes

Girl: What is the difference between confidence and confidential?
Boy: you are my lover, I am confident. Your friend is also my lover, it’s confidential..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Doctor: you should drink 10 glass water every day.
Sardarji: it’s impossible…
Doctor: Why???
Sardarji: I have only 4 glasses in my home…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Inraiya thathuvam no 2007

Naai biscuitta naaikku potta athu unna vittuttu biscuitta saappidum…
Aana Tiger biscuitta tigerkku potta athu biscuitta vittuttu unna sappidum
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Tamilnattla motham 456 colleges, 8729 school, athula convent 2975, corporation school 6210. ithula motham 59,829 boys … ithana per irunthum antha SANIYA MIRZA ennaithaan kattippennu adam pudikkara… what can I do..?

(This joke my firend Mr. Saminthan send me..)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Please vote for vijyakanth. Else thirumba filmla act kuduththe nam,bala kodumai paduthuvar… so vote for him…send to this msg to all your friends, save Tamilnadu.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
On May 4th, 2006 at 2 minutes and 3 seconds after 1 am..? the time and date will be shown 01:02:03:04/05/06
This will never happen on earth again

Thiis msg send my friend Mr. V. Vinod
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Friday, April 07, 2006

Political and masala jokes

Wife: Enna namma wedding cardaiye moraichi moraichi pakkareenga?
Husband: Expiry date ethavathu irukkanu paarkuren.
***************************************************************
Professor: If any boys goes to girls hostel fine Rs.100 for first time, Rs.200 for second time, 500 for third time…
Student: Sir, how much for monthly pass..?
***************************************************************
Vijayakanth speaks in meeting…
“Tamilnattil 325 theaterla en padam SUDHESI oduthu. Antha padaththaip paarthu sethavanga 5,682 per, Koma-la 25,563 per,maykkam pottavanga 45,620 per… so naan inime padathula nadikkaratha nipaattanumna enakku ottu podunga
***************************************************************
Gang of sardars broke a bank but instead of cash they found bottels full chilled red wine. They happily drunk it and left.
Next day headlines in paper “BLOOD BANK LOOTED”
***************************************************************
Vaiko amma: Naan sonnadha ketkama yen AMMA kooda join pannine..?
Vaiko: Summa irumma neeyavathu ennai 10 masamthan ulla vachchiruntha… AMMA ennai 19 masam ulla vachchirunthaanga…
***************************************************************
What is different between Shankar’s film INDIAN in 1996 and SIVAJI in 2006?
Appo herova thathaava kaatta riske eduthar… ippo thathava herova katta risk edukkiraar…
***************************************************************

Sunday, April 02, 2006

Ganguly SMS jokes

Ganguly beat the fan in the Cricket ground. Why? Because that fan singing a 'Anniyan' song. What song?
Run – ‘DUCK’
Run – ‘DUCK’
Run – ‘DUCK’
Run – ‘DUCK’
Run – ‘DUCK’AA
*************************************************
Flash news: After seeing his, performance, Ganguly is once more selected as captain for the one day series against England for Indian women’s cricket team.
*************************************************
Kurudan kaila Torch, Sevidan kaila radio, Oomai kaila mic, Jaathikal kaila katchi, Ganguly kaila bat, Unga kaila Cell phone/Computer… Enna ulagamda ithu…
*************************************************
Ganguly’s favorite Rajini dialogues

BADSHA : Naan 1 run eduththaa… 100 run eduththa mathiri…
PADAYAPPA : Yen wicket free wicket
ARUNACHALAM : anDAVAN SOLRAN… Ganguly bold agaran
BABA : Neeya win pannina Smadaanam… Naana thotha annathanam
CHANDRAMUKI : Any problem just one ball I am disappear
*************************************************

Great Sardarji jokes

Actress: What should I jump to swimming pool from 100ft height…
no I don’t know swimming...
Sardarji director: Don’t worry there is no water in swimming pool…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Sardar made a call to airport. Asked “how long is the journey from Punjab to America?
Receptionist: one second sir…………
Sardar: So fast…thank u...
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Interviewer: “Just imagine you are in 3rd floor. It caught fire. How will you escape..?
Sardar: It’s very simple, I will stop my imagination..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
A Sardar watching a TV suddenly he got up and searched the whole house for sum reason, mad a big miss, and finally he scratching his head,
Sardar wife: why did you like this?
Sardar: “ Oye there is a secret camera in our house… else how’ll the TV guy say correctly ‘U WATCHING STAR TV..?!’ ”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Police: BINLADENA pudichcha 5 crore prize...
Sardar: Appa enakku prize kodunga..?
Police: Why?!?
Sardar: Enakku Binladenai romba pidichchurukku...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Sardar1: Saagumbothu oruththar vaayila enna podanum..?
Sardar2: Birla cement podu..!
Sardar1: Why?
Sardar2: Yenna... BIrla cementla uyir irukku...!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Sardarji bought a new Color TV and put it in water.
Why?
Colour poguthaannu check pannaththaan
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
What is the difference of dye and die?
Sardarji: Dye mandaiyila podarathu.
Die mandaiya podarathu...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Doctor: Neenga avara one hour munnaadi kondu vanthirunthaa pilaichchiruppar
Sardar: Kondu vanthirukkalam doctor aanaaccident aagi half hour thaan aguthu..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Sardar: Docter I can hear the persons voice but cant see him.
Docter: When does it happens?
Sardar: When I am speaking to a person in telephone.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Police: Stop… stop… your bike headlight’s not working..!
Sardar: Move… move… brake is also not working…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Sardarji1: Nethu unga phone number theriyama tromba kashtap pattutten
Sardarji2: ada ennanga neenga enakku oru phone panni kettirukka koodathu...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Thursday, December 15, 2005

3D boys portrait

In this portrait original painting was there in - JAIPUR CITY PALASE, WALL Painting... its 200 years old painting... i just draw a Pencil.. just u see its a 9 dimention boys you see... u try it ... and enjoy it...

சுனாமியின் பயோ டேட்டா

பெயர்: சுனாமி
பிறந்த தேதி : 26-டிசம்பர்-2004
பிறந்த இடம் : இந்தோனேசியா
பிடித்த படம் : அலைபாயுதே
பிடித்த பாடல் : அலை அடிக்குது...
பிடித்த இடம் : கடற்கரை
பிடித்த உணவு : மக்கள்
பிடித்த வசனம் : நான் எப்ப வருவேன்... எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது... ஆனா வரவேண்டிய நேரத்துல சரியா வந்துடுவேன்... வரட்டுமா...
(*_*)(*_*)(*_*)(*_*)(*_*)(*_*)(*_*)(*_*)(*_*)(*_*)(*_*)(*_*)

Holly wood SMS Jokes

Jackie Chan asked Sarathkumar to remake the film ‘NATTAMAI’ in china. GUes what will be the name of them film… Guess… Guess… “ Not am I”.

************************************************

JET LEE’S South Indian Favorite items

Veg : THAKKA-LEE
Breakfast : ID-LEE
Festival : DIWA-LEE
Actress : SONA-LEE
Film : GHIL-LEE
Animal : BAL-LEE
Friend : (Neethaan) KOMA-LEE

*************************************************

Goundamani senthil SMS Joke

Senthil: Anne… Anne…
Goundamani: Ennada thakara tappa vaaya..?
Senthil: Milaga podi eppadinne varuthu?
Goundamani: MIlagayilarunthu…
Senthil: Manjal podi ethilarunthunne varuthu..?
Goundamani: Manjalla irunthu
Senthil: Mookku podi ethila irunthunne varuthu..?
Goundamani: Adey… Aappa vaayaaaaaa…

*************************************************

Mixed SMS jokes

A lecturer taking a class, a boy was commenting “Yaru peththa pullaiyo ippadi anaathaiya polambikittu irukku”

**********************************************

A man asks a women in a market “ I have last my wife… can you talk with me for a minute?” She says “why?” Man: whenever I talk to a women my wife find me..!

**********************************************

A man went to Hell. There he asked yamaraj “can I make a call to my wife?” After making a callhe asked “ how much i have to pay”. yamaraj replies “Nothing, HELL to HELL free”

**********************************************

Binladen’s son was studying in a American school. Teacher asked him “I have 4 apple… How can I share among 5?” His answer: Kill one! Share 4…

**********************************************

Mental 1: Naan intha ulagaththaiye alikka poren
Mental 2: Naan unakku rauber thara mattene…

**********************************************

Appa (vi) SMS jokes

Father: Yenda ippadi ponnunga pinnadi suththara…. 4 peru paartha enna solluvanga!
Son: Hmmm… Appanukku thappaama pillai poranthirukkumbanga…

************************************************

Father: Mappilai enna panrar
Brokker: Avar ninna Train odum… Train ninna avar oduvaar…
Father: avvalavu busyaa
Broker: Aamam… Avar statinla sundal vikkiraar…

************************************************

Friends nakkal SMS jokes

Today I try to contact your mobile but your network replies: “NEENGAL THODARBU KOLLUM VAADIKKAIYALAR SEMA MAPPIL IRUKKIRAAR, POTHAI THELINTHAVUDAN THODARBU KOLLAVUM”

************************************************

Ammavin anbu, Kulanthaiyin sirippu, Ulaippin viyarvai, Kadaliyin muththam ivai ellavarraiyum vida inimaiyaanathu nee sonna antha 3 varthai “QUARTER VAANGI THAREN”

************************************************

WARNING: Due to heavy rain, take umbrella to cover your head. Because “UN MANDAIYIL IRUKKUM KALIMAN KARANJIDUMDA EN DUBUKKU…” Prevention better.

************************************************

Flash news: Today actress ASIN was arrested by ciber crime police..! Why? Daily disturbing me by sending love proposel through SMS… Ennoda porumaikkum oru ellai undu…

************************************************

When I was born, it was raining heavily… do you know why… because the sky was crying for losing a cute, sweet, loving star to earth.

************************************************

Friend 1: Machchan ennoda kalyaanaththukku kandeeppa vanthudu…
Friend 2: Unakku oru kashtamna varama iruppanaa? Inbathula mattum pangu kolravan nanbanilla… thunbaththulayum pangu kolravanthaan unmaiyaana nanban.

************************************************

No need to worry about rain. Our captain (Vijayakanth) had gone in to deep sea in a special boat to change the direction of rain to Pakistan.

************************************************

I read the Newspaper that sending messagesproduses a radiation that causes cancer so I have decided to stop… Reading Newspaper

************************************************

I Love You
Sender: Saniya mirsa
I Miss You
Sender: Aishwarya rai
I Marry You
Sender: Nila
I Want You
Sender: Jothika
I Need You
Sender: Asin

See how d silly girls SMS me… aiyo… aiyo… Ahzaga poranthaale ithuthaan thollai
(Naan illa en Friend Saminathan anuppiya SMS ithu)

*******************************************************

Hai…….
I want to meet you
I want to see you
I want to be with you
I want to enjoy with you

But this bloody gate keeper is asking for the ticket to enter in the ZOO…

*******************************************************

You lovely
You perfect
You beautiful
You amazing
You sweet
You cute
You genius
You fantastic
You fabulous…

Yappa… ithukku mela ennal poy solla mudiyathu…

*******************************************************

Dey Mame...

Pickuppukku YAMAHA
Milagekku CT 100
Stylukku SPLENDER
Bandavukku PULSAR
Kalakkalukku KARISHMA
Vandikku NAAN
Osi ketka NEE thanda en dubukku…

***************************************************

Sardarji jokes++

Oye sardarji, why are you taking your pregnant wife to PIZZA HUT. Instead of taking to hosapital?
Sardarji: Because in PIZZA HUT ‘DELIVERY FREE’.

**********************************************

Sardarji1: Neththu unga phone number theriyaama rumba kastap pattutten.
Sardarji2: Ada ennanga neenga… Enakku oru phone panni kettiruntha solliyiruppene…

**********************************************

Ganguly SMS Jokes

Ganguly beat the fan in the Cricket ground. Why? Because that fan singing a Anniyan song.

What song?

'Run' - DUCK
'Run' - DUCK
'Run' - DUCK
'Run' - DUCK
'Run' - DUCKKA...

******************************************

Flash news: After seeing his, performance, Ganguly is once more selected as captain for the one day series against England for 'Indian women’s cricket team.'

******************************************

Kurudan kaila Torch, Sevidan kaila radio, Oomai kaila mic, sathikal kaila katchi, Ganguly kaila bat, Unga kaila Cell phone/Computer… Enna ulagamda ithu…

******************************************

Ganguly’s favorite Rajini dialogues

BADSHA : Naan 1 run eduththaa… 100 run eduththa mathiri…
PADAYAPPA : Yen wicket free wicket
ARUNACHALAM : anDAVAN SOLRAN… Ganguly bold agaran
BABA : Neeya win pannina Smadaanam… Naana thotha annathanam
CHANDRAMUKI : Any problem just one ball I am disappear

Saturday, November 19, 2005

SMS jokes2




Sardarji: When i was singing some one throw a slipper on me
Boy: Did you stop singing?
Sardarji: No, what could i do withone slipper? i sing till he throw second slipper..!

..................................

Acotor T. Rajender goes to a shop.
TR: Intha KARADI padam enna vilai..?
Shopkeeper: Ithu KARADI padam illai sir kannadi... athula unga mugamthan appadi theriyuthu...

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

My friend Saminathan anuppiya SMS joke

"dai maama innaikku TV la terrarist list parthen, Avangala kandu pidichchi koduththa Rs.3 kodi yam... enakku panam mukkiyam illa...
neethaan mukkiyam... veliya thalai kaattatheda maama...

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Thursday, November 10, 2005

Sardarji SMS Jokes+

A teacher told all students in a class to write an essay on a cricket match.
All were busy in writting except one sardarji.
he wrote "DUE TO RAIN NO MATCH TODAY"

****************************************************

Sardar1: Unga sondha ooru edhu?
Sardar2: Namakku avvalo vasathi illeenga...

Sondha veedu mattumthaan irukku.

****************************************************

Rajini new song in Chandiramugi

"devuda duvuda 7malai devuda
chududa chududa en friends pakkam chududa
yellame loosukal
yellame mentalkal
athula onnu ippa SMS padikkuthuda
reppeeettuu............"


****************************************************

Sardar : Why are all the people running?
Man: This is a race, the winner will you get the cup.
Sardar: If only the winner will get the cup, why others are running?


****************************************************

Sardar built two swimmimg pools. and he left one of them unfilled.
when asked he said
"Oye, that's for those who don't know swimming..."

****************************************************

When the sky get dark, I remember you...
when there is lighting, I remember you...
when there is rain, I remember you...
So, Please return my
UMBRELLA.

****************************************************